Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசின் தீர்ப்புகளில் திருப்தி இல்லை-மாவை

Featured Replies

அரசின் தீர்ப்புகளில் திருப்தி இல்லை-மாவை
 
 
அரசின் தீர்ப்புகளில் திருப்தி இல்லை-மாவை
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  ஜோசெப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் விசார ணைக்கு எடுக்கப்பட்டாலும் இலங்கை அரசாங்கத்தின் தீர்ப்புக்களின் மீது தாம் திருப்தி அடை யவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 
ஜோசெப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னி ட்டு ஆற்றிய நினைவுபேருரையில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாட்ட நாடா ளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா இவ்வாறு கூறியுள்ளார்.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கத்தின் 11 வது ஆண்டு நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.
 
தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி. ஜோன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் யோசப் பரராசசிங்கத்தின் திருவுருவப்படத்தி ற்கு மலர் மாலை அணிவித்து ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டன.
 
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சா.வியாளேந்திரன், கே.கோடீஸ்வரன், மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாணசபை உறு ப்பினர்களானகோ.கருணாகரம்,பி.இந்திரகுமார்,மா.நடராசா,ஞா.கிருஸ்ணபிள்ளை, த.கலை யரசன் உள்ளிட்ட  கட்சியின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்;.
 
இந்த நிகழ்வில் நினைவுபேருரை ஆற்றிய மாவை சேனாதிராஜா...
 
தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், எங்களோடு கூடவே இருந்து வழிகாட்டியாகவும் தலைவனாகவும்,  போராளியாகவும் நண்பனாகவும் இரு ந்த ஜோசெப் பரராஜசிங்கம் பிரார்த்தனை ஒப்புக் கொடுக்கின்ற புனிதமான தினத்திலே நேர த்திலே அவர் கொல்லப்பட்டார்.
 
அவருக்கு அஞ்சலி செலுத்த இதுவே உகந்த நாள். புத்தாண்டு வாழ்த்துக்களையும் இந்த நந்நாளிலே எஞ்சியிருக்கும் நம்மவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.
 
அழிக்கப்பட்ட தினத்திலும் மக்கள் பீனிக்ஸ் பறவைகள் போல எழுந்து நிற்கிறார்கள் என்ன இலட்சியத்துக்காக இலட்சக் கணக்கான உயிர்கள் பலி கொடுக்கப்பட்டனவோ அந்த ஆத்மா க்களுடைய பலம் எங்களுக்கு எப்போதும் இருந்து கொண்டேயிருககிறது.
 
எந்த இலட்சியத்துக்காக போராடினார்களோ அதற்காக நாங்கள் மீண்டும் எழுந்து கொண்டி ருக்கின்றோம்.என்னைப் பொறுத்த வரையில் நானும் 3 முறை இறந்து விட்டேன் என்று தூக்கி வீசப்பட்டவன்தான்.
 
அண்மையிலே நாரந்தனை வழக்கு 14 ஆண்டுகளுக்குப் பிறகு.  குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது. நாங்கள் இறந்து விட்டோம் என்றுதான் மருத்துவ மனைக்குக் கொண்டு வந்தார்கள்.
 
நாலாம் மாடியிலே நான் மூர்ச்சித்து வீழ்ந்த பொழுது மரணித்து விட்டேன் என்று கூறி விட்டார்கள். மூன்றாவதாக ஆனையிறவு இராணுவ முகாமிலும் நான் மரணித்து விட்டேன் என்று தூக்கி வீசப்பட்டேன். இவை சிறிய சம்பவங்கள்தான்.
 
எங்களுடைய மக்கள் தங்களுடைய உயிர்களைப் பலி கொடுத்து இத்தனை ஆண்டுகளாக இனத்தின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்த சூழலோடு ஒப்பிடுகின்ற பொழுது என்னு டைய உயிர் மீண்டும் தப்பியிருக்கக் கூடியது பெரிய அர்ப்பணம் என்று கூற வரவில்லை.
 
தமிழர் தாயகத்தின் அழகான மண்ணிலே நாம் ஆக்கிரமிக்கப்பட்டவர்களாக அடக்கி ஒடுக்கப்டடவர்களாக இருப்பதற்கு எதிராக தந்தை செல்வாவோடு, அமிர்தலிங்கம் அவர்க ளோடு, தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு தன்னை இளவயதிலிருந்து இணைத்துக் கொண்டு போராட்டங்களிலும் மகாநாடுகளிலும் கலந்து கொண்டு தீர்மானங்கள் எடுப்பதிலெல்லாம் பங்குபற்றி வந்தவர்தான் ஜோசெப் பரராஜசிங்கம் அவர்கள்.
 
எங்களோடு உழைத்த பலர் இப்பொழுது எம்மிடையே இல்லை. இலட்சியத்துக்காக இனத்தின் விடுதலைக்காக ஜனநாயகத்துக்காக எமது இளைஞர் சமுதாயம் இந்த மண்ணிலே இருந்து வந்திருக்கின்றது.
 
ஜோசெப் பரராஜசிங்கம் அவர்கள் மனித உரிமைகளுக்காக இராணுவ, அரச படுகொலைக ளுக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரல் கொடுத்தார்.பல நாடு களுக்குச் சென்று பல தூதர்களிடம் குரல் கொடுத்திருக்கின்றார்.
 
கட்சியின் ஏகோபித்த தீர்மானத்தில் ஒன்றுபட்டுழைத்தவர். கட்சியின் பண்பைக் கட்டிக் காத்தவர்.தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் நம்முடைய இனத்தின் விடுதலைக்காக உழைத்தவர்.
 
குற்றவாளிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட அவரின் வழக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு எடு க்கப்பட்டிருக்கின்றது.தனித்தனியாக, கூட்டமாக எமது மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளின் இலங்கை அரசாங்கத்தின் தீர்ப்புக்களின் மீது நாங்கள் திருப்தி கொள்ள வில்லை.
 
அதனால் இன்னமும் நாங்கள் கவலையடைந்திருக்கின்றோம்.பழைய தீர்ப்புக்கள் இலங்கை யின் நீதித்துறையை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றது.இரத்தத்தில் இந்த மக்களின் உணர்வு இன்னமும் அதிகரித்துக் கொண்டுதானிருக்கின்றது.' என்றார்.
 
கடந்த 2005 ஆம் ஆண்டு நத்தார் தினத்தன்று மட்டக்களப்பு புளியந்தீவு தேவாலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களினால் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது..

http://www.onlineuthayan.com/news/21820

  • தொடங்கியவர்

சர்­வ­தே­சத்தின் பங்­க­ளிப்பு அவ­சி­ய­மென்­பது நிரூ­பணம்

p3-3e776dfebfd7b6720ee4bf0e50d3be77815b5c32.jpg

 

(பட்­டி­ருப்பு, காங்­கே­ய­னோடை, எருவில் , செங்­க­லடி நிரு­பர்கள்)

ரவிராஜ் படு­கொலை தீர்ப்பை ஏற்க முடி­யாது என்­கிறார் மாவை  
அர­சி­ய­ல­மைப்பில் நீதித்­து­றையை நிலை­நாட்ட நட­வ­டிக்­கை எடுக்­கப்­பட்ட பின்­ன ரும் வரு­கின்ற தீர்ப்­புக்கள் தொடர்பில் கவ­லை­ய­டைந்­துள்ளோம். சர்­வ­தே­சத்­திற்கு முன்­பாக இந்த தீர்ப்­பு­களை சமர்ப்­பித்­துள்ளோம். சர்­வ­தே­சத்தின் பங்­க­ளிப்பு நீதித்­து­றையில் அவசியம் என்­ப­தையும் இவை வலி­யு­றுத்தி நிற்­கின்­றன என்று இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார். 

ரவி­ராஜின் கொலைவழக்கு தொடர்பில் பல்­வே­று­பட்ட சாட்­சி­ய­ங்கள் வழங்­கப்­பட்ட நிலை­யி லும் பல உண்­மைகள் வெளிக்­கொ­ண­ரப்­பட்ட

பின்­னரும் அந்த வழக்கின் தீர்ப்­பினை நாங் கள் ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. நீதியை நாங்கள் மீண்டும் வலியு­றுத்தி நிற்­கின்றோம் எனவும் மாவை சேனா­தி­ராஜா குறிப்­பிட்டார்.

வடக்கு கிழக்கு இணைப்பு மிகவும் முக்­கி­ய­மா­னது. அதற்­காக முஸ்லிம் மக்­களை

 வென்­றெ­டுக்­க­வேண்­டிய பொறுப்பு அத­னை­விட மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

மட்­டக்­க­ளப்பில் நேற்று நடை­பெற்ற மறைந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப்­ப­ர­ரா­சிங்­கத்தின் 11 ஆவது நினைவு தின நிகழ்வில் நினை­வுப்­பே­ரு­ரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இங்கு தொடர்ந்து மாவை சேனா­தி­ராஜா எம்.பி. உரை­யாற்­று­கையில்

ஜோசப்­ப­ர­ரா­ஜ­சிங்கம் நத்தார் வழி­பாட்­டின்­போது சுட்­டுக்­கொல்­லப்­பட்டார். அந்த வழக்கு 2010 ஆண்­டுக்கு பின்னர் தற்­போது நடை­பெற்­று­வ­ரு­கின்­றது. அதே­போன்று படு­கொ­லை­செய்­யப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவி­ராஜின் வழக்கும் நீண்­ட­கா­லத்­திற்கு பின்னர் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

ரவி­ராஜின் வழக்கு தொடர்பில் பல்­வே­று­பட்ட சாட்­சி­ய­ஙகள் வழங்­கப்­பட்ட நிலை­யிலும் பல உண்­மைகள் வெளிக்­கொ­ண­ரப்­பட்ட பின்­னரும் அந்த வழக்கின் தீர்ப்­பினை நாங்கள் ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. நீதியை நாங்கள் மீண்டும் வலி­பு­றுத்தி நிற்­கின்றோம்.

இந்த நாட்டில் இடம்­பெற்ற படு­கொ­லைகள் இனப்­ப­டு­கொ­லைகள் என்­ப­வற்­றுக்கு எதி­ராக ஐ.நா.மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் தீர்­மானம் எங்­களின் வற்­பு­றுத்­தல்கள் கார­ண­மாக நிறை­வேற்­றப்­பட்­டது. அமெ­ரிக்­கா­வுக்கு சென்ற தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் பல பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்­டனர். அன்றில் இருந்து இன்­று­வரை சர்­வ­தேச சமூ­கத்­துடன் நாங்கள் பேசி­வ­ரு­கின்றோம்.

ஐ.நா.மனித உரிமை பேர­வையில் இலங்கை அர­சாங்­கமும் இணைந்து அனு­ச­ரணை வழங்கி நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் ஒன்று உள்­ளது. .அதில் சர்­வ­தேச சட்­ட­வி­ய­லா­ளர்கள் நீதி­பகள் சட்­டத்­த­ர­ணிகள் போர்க்­குற்றம் தொடர்­பி­லான விசா­ர­ணையில் ஆஜ­ரா­க­வேண்டும் என்று கூறி­ய­போது அதனை இலங்கை ஏற்­றுக்­கொண்­டது. ஆனால் அது இன்று பின்­ன­டிக்­கப்­பட்­டுக்­கொண்­டுள்­ளது.

அத­னை­விட இரா­ணு­வத்­தி­னரும் அவர்­க­ளுடன் இணைந்து செயற்­பட்ட குழுக்­களும் ஆயு­தங்­களை பாவித்து எங்­க­ளது தலை­வர்­களை கொலை­செய்­த­போ­திலும் எமது மக்கள் கொத்­துக்­கொத்­தாக படு­கொ­லை­செய்­யப்­பட்ட போதிலும் அது தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணைகள் நீதித்­து­றையில் மேல் நாங்கள் நம்­பிக்­கை­யி­ழக்கும் நிலையை ஏற்­ப­டுத்­தி­யது.

தற்­போது ஐ.நா.வில் அது தொடர்­பான தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டதன் பின்னர் மற்றும் நீதித்­து­றை­யினை பலப்­ப­டுத்த அர­சி­ய­ல­மைப்பில் மாற்­றத்­தினை செய்­த­பின்­னரும் வரு­கின்ற நீதி­மன்ற தீர்ப்­பு­களில் நாங்கள் கவ­லை­ய­டை­கின்றோம். சர்­வ­தே­சத்­திற்கு முன்­பாக இந்த தீர்ப்­பு­களை சமர்ப்­பித்­துள்ளோம். இந்த தீர்ப்­புகள் இலங்கை நீதி­மன்­றத்தின் நம்­ப­கத்­தன்­மை­யை­கேள்­விக்­கு­றி­யாக்­கி­யுள்­ளன. சர்­வ­தே­சத்தின் பங்­க­ளிப்பு நீதித்­து­றையில் அவ­சியம் என்­ப­தையும் வலி­யு­றுத்தி நிற்­கின்­றது.

ஜோசப்­ப­ர­ரா­ஜ­சிங்­கத்தின் வழக்கு இது­வ­ரையில் முடி­வுக்கு வராத நிலையில் அதுவும் அவ்­வா­றுதான் போகுமா என்­பது கேள்­வி­யா­க­வுள்­ளது. 10ஆண்­டு­க­ளுக்கு பின்னர் அவ­ரது வழக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. அது­வ­ரைக்கும் அவரை கொலை­செய்­த­வர்­க­ளுக்கு பத­வி­களும் பட்­டங்­களும் வழங்­கப்­பட்டு அர­சாங்­கத்­துடன் ஆட்­சியில் இருந்­தார்கள். தற்­போது அந்த செல்­வாக்கு இல்­லாது விட்­டாலும் பத்து ஆண்­டு­க­ளுக்கு பின்னர் வழக்கு எடுக்­கப்­பட்­டாலும் இன்று நீதித்­துறை மீது மக்கள் நம்­பிக்­கை­யி­ழந்து செல்லும் நிலை உள்­ளமை மிகவும் கவ­லை­யக்­கு­ரி­ய­தாகும்.

அர­சாங்க படை­க­ளுடன் இணைந்­த­வர்கள் குழுக்­க­ளான செயற்­பட்­ட­வர்கள் ஊடாக செய்­யப்­பட்ட சதியின் ஊடா­கவே ஜோசப்­ப­ர­ரா­ஜ­சிங்கம் நத்தார் வழி­பாட்­டின்­போது படு­கொ­லை­செய்­யப்­ப­டடார். .ஆயுதம் தூக்­கி­யது உரி­மைப்­போ­ரா­டு­வ­தற்­கா­கவே அன்றி அர­ச­த­ரப்­புடன் இணைந்து திட்­ட­மிட்டு எங்கள் மக்­களை படு­கொ­லை­செய்­வ­தற்­காக அல்ல.

அண்­மையில் ஜனா­தி­பதி வீடு­களை கைய­ளிக்கும் நிகழ்வில் பயங்­க­ர­வா­தி­களை தோற்­க­டித்­த­தாக கூறி­யி­ருந்தார். அந்த நிகழ்வில் நானும் பங்­கு­பற்­றி­யி­ருந்தேன். மகாத்மா காந்­தியை அன்று வெள்­ளைக்­கா­ரர்கள் பயங்­க­ர­வா­திகள் என்­றனர். சுபாஸ்­சந்­தி­ர­போசும் ஆயுதம் ஏந்தி போரா­டினார். நாங்கள் பல போராட்­டங்­களை நடாத்தி இரத்தம் சிந்­தி­யுள்ளோம். எமது விடு­த­லைக்­கா­கவே இந்த அர்ப்­ப­ணிப்­பு­களை செய்தோம் என்று திட்­ட­வட்­ட­மாக கூறி­யி­ருந்தேன். நல்­லி­ணக்­கத்தை திறந்­து­வைத்து பயங்­க­ர­வாதம் என்று சொல்­ல­வேண்டாம் என்று அவ­ரிடம் கூறினோம். எங்­களை தோல்வி அடைந்த சமூ­தா­ய­மாக பேச­வேண்டாம். வீடு­களை திறந்­து­வைத்து அடி­மை­க­ளுக்கா வழங்­கு­கின்­றீர்கள் என்று குரல் எழுப்­பினோம்.அவர் அதனை ஏற்­றுக்­கொண்டார்.

விடு­த­லைப்­பு­லி­களின் ஆயு­தப்­போ­ராட்ட காலத்தில் அவர்­க­ளுடன் நாங்கள் பங்­கா­ளி­க­ளாக இல்­லா­விட்­டாலும் புரிந்­து­ணர்­வுடன் ஜன­நா­யக ரீதி­யாக புரிந்­து­கொண்டு அவர்கள் பேச்­சு­வார்த்­தைக்கு செல்ல ஆத­ரவு வழங்­கினோம். இலங்­கைக்கும் சர்­வ­தே­சத்­திற்கும் ஒத்­து­ழைப்பு வழங்­கிய காலமே தமி­ழர்­க­ளுக்கு மிகவும் பல­மான கால­மாகும்.இன்று அந்த பலம் இல்லை.

ஆனால் எங்கள் மக்­க­ளு­டைய பலம் ஜன­நா­யக ரீதி­யாக வழங்­கிய தீர்ப்­புகள் சர்­வ­தேசம் வரைக்கும் அங்­கீ­க­ரிக்­கப்­படும் தீர்ப்­பு­க­ளாக இந்த நாட்டில் ஒரு ஆட்­சி­மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­ள­விற்கு வழி செய்­தன. போர் இல்­லாமல் சதி­யில்­லாமல் ஆட்­சி­மாற்­றப்­ப­டு­கின்ற அள­வுக்கு தமிழ் மக்கள் தீர்ப்­ப­ளித்­துள்­ளனர்.

இலட்­சக்­க­ணக்­கான உயிர்­களை பறி­கொ­டுத்த எங்­க­ளுக்கு ஆட்­சி­மாற்றம் மட்­டும்­போதும் என்று நாங்­கள்­சொல்­ல­வில்லை.எங்­களைப் பொறுத்­த­வ­ரையில் 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஒரு விட­யத்தை கூறி­யுள்ளோம். அதா­வது ஒரு அர­சியல் தீர்­வுக்கு மக்கள் ஆணை வழங்­கி­யுள்­ளனர். நாங்கள் தற்­போது வட்­டுக்­கோட்டை தீர்­மா­னத்தை வலி­யு­றுத்­த­வில்லை. ஒரு சமஷ்டி அமைப்பு முறையில் சமஷ்டி தன்­மையில் ஒரு அர­சி­யல்­தீர்வு இருக்­க­வேண்டும் என்றே கோரிக்­கையை முன்­வைத்­துள்ளோம்.

ஐ.நா.பேர­வைக்கும் பான்கீ மூனுக்கும் ஒன்றை நாங்கள் பேசும்­போது தெளி­வாக கூறி­யி­ருந்தோம்.நாங்கள் எதிர்­பார்க்கும் தீர்­வினை வழங்­க­மு­டி­யாது போனால் ஐ.நா.பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களை அர­சாங்கம் நிறை­வேற்ற தவ­றினால் எமது பகு­தி­களில் ஆட்சி இடம்­பெ­றா­மல்­போ­கின்ற வழியை நாங்கள் தேடுவோம். நீங்கள் அதற்கு உத­வி­யாக இருக்­க­வேண்டும் என்று கோரினோம்.

எங்­க­ளுக்கு மக்கள் வழங்­கிய ஆணையை நாங்கள் வெறு­மனே தூக்­கி­வீ­சி­விட்டு போக­மு­டி­யாது.

புதிய அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து இரு வரு­டங்கள் பூர்த்­தி­யா­கி­யுள்ள நிலையில் நாங்கள் அர­சாங்­கத்­துடன் நடாத்­து­கின்ற பேச்­சுவார்த்.தைகள் இன்னும் முற்­றுப்­பெ­றாத நிலையில் உள்­ளன. அதி­கா­ரத்தை பகிர வேண்டும் என்ற விட­யத்தில் பல இடங்­களில் இணக்­கப்­பா­டுகள் உள்­ளன.இந்த நாட்டில் ஒற்­றை­யாட்­சியா சமஸ்டி ஆட்­சியா என்­பதில் விவா­தங்­களும் எதிர்ப்­பு­களும் நடை­பெற்­று­வ­ரு­கின்­றன. ஊழல்கள் நிறைந்­த­வர்கள் எங்கள் மக்­களால் ஆட்­சி­மாற்றம் செய்­யப்­பட்­ட­வர்கள் ஆயு­தங்கள் மூல­மாக குழுக்கள் மூல­மாக எங்­களை அடக்­கி­யாண்­ட­வர்கள் மீண்டும் ஆட்­சியை கைப்­பற்ற நினைக்­கின்­றார்கள்.

அவ்­வா­றான நிலை­யொன்று ஏற்­பட்டால் அதற்­காக நாங்கள் போராடாமல் விடுவோம் என்றோ அவர்கள் தருவதை பெற்றுக்கொள்வோம் என்றோ யாரும் கருதக்கூடாது. அந்த தருணம் வரும் வரையில் நாங்கள் உழைக்கவேண்டும்.

வடக்கு கிழக்கு இணைந்திருக்கவேண்டும் என்று எங்கள் மக்கள் தந்த ஆணையை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன.அந்த பேச்சுவார்த்தைகள் இன்னும் முற்றுப்பெறவில்லை. வடக்கு கிழக்கு இணைப்பு மிகவும் முக்கியமானது.அதற்காக முஸ்லிம் மக்களை வென்றெடுக்கவேண்டிய பொறுப்பு அதனைவிட மிகவும் முக்கியமானது.

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் எங்களது உறுப்பாட்டை ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் தெரிவித்துள்ளோம். அதை முஸ்லிம் மக்கள் தீர்மானிக்கவேண்டும் என்பதை விட நீங்கள் அதாவது ஆட்சியில் உள்ளவர்கள் அதனை வெளிப்படையாக கூறவேண்டும் என்று கூறியுள்ளோம்.

ஒற்றையாட்சி தொடர்பான பேச்சுகள் மீண்டும் எழுவதை காணமுடிகின்றது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அது அதிகாரத்தை பகிர்வதற்கு தடையாக இருக்கும். அதனை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை எங்களுக்கு இல்லை என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-26#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.