Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வழக்குகள்!

Featured Replies

சசிகலா குடும்பத்தினரில் பெரும்பாலானோர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயேபல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளனர். ஜெயலலிதாவின் உயிர் தோழி, வாரிசு என வர்ணிக்கப்படும்

 

Tamil_News_large_167971720161230012632_318_219.jpg

சசிகலா, அ.தி.மு.க., பொது செயலர் மற்றும் தமிழக முதல்வராக, பல்வேறு வகையில் காய் நகர்த்துகிறார். சசிகலாவால், ஜெயலலிதா முதல்வரானதாகவும், சசிகலா குடும்பத்தா ரால், அ.தி.மு.க., வளர்ந்ததாகவும் பலரும் தம்பட்டம் அடிக்கின்றனர். அதே நேரம், சசிகலா குடும்பத்தாரில் பெரும்பாலானோர்

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே வழக்குகளில் சிக்கியதை, சசிகலா எதிர்ப்பாளர் கள் பட்டியலிட்டு அவர் முதல்வராக பொது செயலராக வருவதை எதிர்க்கின்றனர்.
அவரது குடும்பத்தார் சிக்கிய வழக்குகளில் சில:
 

சசிகலாவின் தம்பி திவாகரன்


மன்னார்குடி அருகே செங்கமலத்தாயார் கல்லுாரியை நடத்தி வரும் திவாகரன், அ.தி.மு.க., மற்றும் ஆட்சியின் அனைத்து பணிகளையும் மன்னார்குடியில் இருந்தே இயக்கி வந்தார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் யூனியன் ரிஷியூரில் தமிழழகன் என்பவரது நிலத்தை அபகரித்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ஆள் கடத்தல் செய்ய முயன்றதாக நீடாமங்கலம் போலீசில் வழக்குப்பதிவாகி, திவாகரன் கைது செய்யப்பட்டார்.
 

பாஸ்கரன்


சசிகலா அக்கா வனிதாமணியின், இரண்டாவது மகன் பாஸ்கரன், ஜெயா, 'டிவி'யின் நீண்ட கால நிர்வாக இயக்குனராக இருந்து, சினிமா

தொழிலில் காலெடுத்து வைத்தார். கல் குவாரி நடத்தினார். ஜெயலலிதாவால் புறக்கணிக்கப் பட்டு, பண மோசடி வழக்கில் சிக்கினார்.
 

ராவணன்


சசிகலாவின் சித்தப்பா மகன் ராவணன், மிடாஸ் நிறுவன இயக்குனராக இருந்து கொங்கு மண்டல அ.தி.மு.க., - அதிகாரிகள் மத்தியில் பிரபலமடைந்து கோடிகளை குவித்தார். 2011ல் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டு, கொலை மிரட்டல், பணத்தைபதுக்கியது, அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
 

வெங்கடேஷ்


சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன் டாக்டர் வெங்கடேஷ், நமது எம்.ஜி.ஆர்., நாளிதழ் பொறுப்பாளர். கட்சியின் புத்தகம், போஸ்டர் வெளியீட்டு பணியை கவனித்தார். இளம்பெண்கள், இளைஞர் பாசறை துவங்கி, அதன் மாநில செயலரானார். பின் ஜெ.,யால் விரட்டப்பட்டு, வழக்கில் சிக்கினார்.
 

சுதாகரன்


சசிகலாவின் அக்கா வனிதாமணியின், மூன்றாவது மகன் சுதாகரன், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் என தத்தெடுக்கப்பட்டு, ஆடம்பர செலவு செய்து, ஆட்சி மாற்றத்துக்கு காரணமானவர். பின், கார்டனில் இருந்து துாக்கி வீசப்பட்டு, ஹெராயின் கடத்தல் வழக்கில் கைதாகி, பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சொத்து குவிப்பு
வழக்கிலும் சிறை சென்றார்.
 

மகாதேவன்


சசிகலாவின் அண்ணன் வினோதகன் மகன் மகாதேவன், தஞ்சையில் மருத்துவமனை,
'டி.வி.எம்' என்ற பெயரில் பஸ்களை இயக்கி வருகிறார். ஜெ., பேரவை மாநில செயலராக சில வாரங்கள் செயல்பட்டார். இவர் மீதும் கொலை மிரட்டல், அடிதடி வழக்கு பதிவாகி, ஓரங்கட்டப் பட்டார்.

சசிகலாவின்அக்கா வனிதாமணியின் மூத்த மகன் தினகரன், நடராஜன் தம்பிகள் ராமசந்திரன்,
பழனிவேல், மகாதேவனின் தம்பி தங்கமணி, இளவரசியின் சம்பந்தி கலியபெருமாள் போன்றோர் கட்சியிலும், கார்டனிலும் குறிப்பிட்ட காலம் செல்வாக்குடன் இருந்து, இன்றும் கட்சி, ஆட்சியில்

 

பல்வேறு பங்கெடுத்தாலும், வழக்கில் சிக்கவில்லை.

இவர்களில் பெரும்பாலானோரை, கட்சிப் பணியிலும், ஆட்சிப் பணியிலும், முதல்வராக இருந்த ஜெயலலிதா அனுமதித்ததில்லை. நேற்று, கட்சியின் பொதுச் செயலராக, சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இவர்கள் அனைவரும் கட்சி அலுவலகத்திலும், ஜெ., வீட்டிலும் கோலோச்சுவதைக் காண முடிகிறது.
 

சசிகலா கணவர் நடராஜன்


பி.ஆர்.ஓ.,வாக பணியை துவங்கி, ஜெ.,யுடன் நெருக்கமாகி, மனைவி சசிகலாவுடன், ஜெ.,க்கு ஏற்பட்ட நட்பால், சசிகலாவை அரசியலில் நுழைக்க முயன்றார். இதை அறிந்த ஜெயலலிதா, நடராஜன் கார்டன் வர தடை போட்டார். ஜெ., இருந்தவரை அவரால் கார்டனுக்குள் நுழைய முடியவில்லை.கஞ்சா வைத்திருந்ததாக, ெஷரினா கைது செய்யப்பட்டபோது, அவருக்கு உதவியதாக நடராஜனும் அவ்வழக்கை சந்தித்தார்.

சசிகலாவிடம் நடராஜன் தொடர்ந்து மன்றாடிய நிலையில், அவ்வழக்கில் இருந்து நடராஜன் விடுவிக்கப்பட்டார்.அதேநேரம், கடந்த, 2011ல் சசிகலா கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட போது, தஞ்சை மாவட்டம் விளார் பகுதியில், 'முள்ளிவாய்க்கால் முற்றம்' என்ற ஈழத்தமிழர் நினைவிடம் அமைத்த பிரச்னையில், நில அபகரிப்பு, கொலை மிரட்டல், ஆள் கடத்தல் பிரிவுகளில், நடராஜன் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டார்.

- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1679717

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.