Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி நியமிக்கப்பட வாய்ப்பு?

Featured Replies

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி நியமிக்கப்பட வாய்ப்பு?

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
 
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி நியமிக்கப்பட வாய்ப்பு?
 
புதுடெல்லி:

லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த தவறியதால் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை நீக்கி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து செல்வாக்குமிக்க இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை ஏற்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்த பணிக்கு தகுதியான நபரை அடையாளம் காண சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்களை நியமித்துள்ளது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அடுத்த தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுரவ் கங்குலி, தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். கிரிக்கெட் வாரிய நிர்வாக கூட்டங்களில் பங்கேற்ற அனுபவம் அவருக்கு உண்டு.

இந்திய கிரிக்கெட் அரங்கில் புகழ்பெற்ற வீரராக விளங்கிய கங்குலியே இந்த பதவிக்கு பொருத்தமானவர் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
  • தொடங்கியவர்

தலைவர் பதவி : சசிகலா காத்திருந்தார்... கங்குலி மறுக்கிறார்!

கங்குலி

தமிழகத்தில் இப்போது பதவிதான் ஹாட் டாபிக். ஸ்டாலின் ஒருபக்கம் தி.மு.க.வின் செயல்தலைவராக, அதிமுகவின் தலைமையை சசிகலா கைப்பற்றியுள்ளார். 'அக்காவே இல்லை... எனக்கு எதற்கு இந்தக் கட்சி பதவி ' என விலகிக் கொள்ள  சசிகலா தயாராக இல்லை. 20 ஆண்டுகளுக்கு முன், வலம்புரி ஜான் எழுதிய கட்டுரை ஒன்றில், 'சசிகலா ஜெயலலிதா ஆளும் இல்லை... எம்ஜிஆர் ஆளும் இல்லை. சசிகலா என்பது சசிகலா ஆள்' என்று எழுதியிருப்பார். வலம்புரிஜானின் கணிப்பு இப்போது நிஜமாகியுள்ளது. 

அடுத்து முதல்வர் பதவிதான் சசிகலா குறியாக இருக்கும். அதற்கேற்ற வகையில் ‘சின்ன அம்மா சி.எம் ஆகவேண்டும்’ என்ற கூக்குரல்களும் அதிகமாகியுள்ளன. எந்தத் தொகுதியில் நிற்க வைக்கலாம் என்பது அலசப்பட்டு வெற்றி வாய்ப்பு குறித்து ஆராய்ந்து வருகிறார்களாம். சசிகலாவால் முதல்வராகப் பதவியேற்று விட முடியும். ஆனால், எம்.எல்.ஏ என்ற அந்தஸ்த்தை மக்கள்தான் அளிக்க முடியும். தமிழக மக்கள் அதனை அங்கீகரிப்பார்கள் என்றே நம்புவோம்.

கட்சிகளில் அதிமுகவைப் போலவே, கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, நாட்டின் மிகவும் பலம் வாய்ந்த, செல்வச் செழிப்பில் மிதக்கும் ஒரு அமைப்பு பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். பல ஆயிரம் கோடிகளில் புரளும் தனியார் அமைப்பு. இந்தியாவில் மற்ற விளையாட்டு அமைப்புகள் எல்லாம் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்க, பிசிசிஐ மட்டும் தனியார் நிறுவனம் போலவே செயல்பட்டு வந்தது. அதனால் ஊழலிலும் திளைத்தது. ஐ.பி.எல் தலைமை செயல் அதிகாரி சுந்தர்ராமன், சென்னை அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆனால், அவர்கள் மீது பிசிசிஐயின் அப்போதைய தலைவராக இருந்த சீனிவாசன் நடவடிக்கை எடுக்கத் தவறினார். முத்கல் கமிட்டி அளித்த அறிக்கையின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் கிரிக்கெட் அமைப்புகளைச் சீர் செய்ய, லோதா என்ற தனிநபர் கமிட்டியை அமைத்தது. லோதா கமிட்டி அளித்த அறிக்கையில், ‘ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு, மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கு வயது வரம்பு, 70 வயதுக்கு மேற்பட்டவர் பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் வகிக்கக் கூடாது’ என்றது.  லோதா கமிட்டியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தற்போதைய பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோர் தாமதித்தனர். இதையடுத்து உச்சநீதிமன்றம் அவர்களையும் பதவியில் இருந்து நீக்கியுள்ளது. 

தற்போது பிசிசிஐ அமைப்புக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியை நியமிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. முதன் முறையாக நாட்டின் மிகப் பெரிய அமைப்புக்கு முன்னாள் விளையாட்டு வீரரே தலைவர் பதவியில் அமரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கவாஸ்கர் போன்ற பல கிரிக்கெட் அறிஞர்களே கங்குலியை நோக்கி கை காட்டுகின்றனர். ஏன் லோதா கமிட்டியே கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவியில் அமரக் கூடியத் தகுதி இருப்பதாக மறைமுகமாக கருதுகிறது. இத்தனைக்கும் மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக பணியாற்றி வருகிறார் கங்குலி. ஆனால், கங்குலியோ 'தனக்கு அந்த தகுதியில்லை ' என மறுக்கிறார். 

இது குறித்து அவர் கூறுகையில், ''மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்துக்குத் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டுதான் ஆகியிருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகள் பணி இருக்கிறது. எனக்கு தலைவர் பதவிக்கு தகுதியிருப்பதாக கருதவில்லை. எனது பெயரைத் தலைவர் பதவிக்கு தேவையில்லாமல் இழுக்க வேண்டாம் '' என கூறியிருக்கிறார். 

அண்மையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு - ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான இருவர் நிரந்தரத் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டனர். ஒருவர் முன்னாள் ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி. இன்னொருவர் குத்துச்சண்டை அமைப்பின் முன்னாள் தலைவர் அபே சவுதாலா. மத்திய விளையாட்டு அமைச்சகம் இந்த நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்னரே சுரேஷ் கல்மாடி அடங்கினார். அபே சவுதாலாவோ, 'சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே விலகுவேன் 'என்கிறார். இந்தத் தருணத்தில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ராஜ் பால்சிங்  ‘நல்லவர்கள் ஒதுங்கியிருந்தால் கூடாது. நல்லவர்கள் களம் இறங்கிக் கயவர்களை அகற்ற வேண்டும். அப்படியில்லையென்றால் தீயவர்கள் நல்லவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள்’  சாணக்கியர் கூறியிருப்பதாக கருத்து வெளியிட்டிருந்தார். 

ஊழல் மிகுந்த பிசிசிஐ அமைப்பை நிர்வகிக்கும் பொறுப்பு கங்குலிக்கு வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்வதே நல்லது என்றே கிரிக்கெட் நிபுணர்ளும் கருதுகின்றனர். கிரிக்கெட்டுக்கு துளியும் சம்பந்தம் இல்லாதவர்கள் கூட அதனை நிர்வகிக்கும் போது , ஒரு கிரிக்கெட் வீரரால் முடியாதா? கிரிக்கெட் வீரர் என்றால் ஓய்வு பெற்றதும் பயிற்சியாளர்களாக மட்டுமே ஆவதும் பிசிசிஐ அளிக்கும் போனஸ்களையும்  பெற்றுக் கொண்டிருப்பது மட்டும்தான் வேலையா?. சாணக்கியர் சொல்வது போல முடிந்தால் போட்டியிட்டுக் கூட தீயவர்களை அகற்றலாம்.

சசிகலா வாய்ப்புக்காக காத்திருந்தார்... கங்குலி வாய்ப்பு கிடைத்தும் மறுக்கிறார்!

http://www.vikatan.com/news/sports/76860-i-am-not-fit-for-general-secretary-post--says-ganguly.art

தலைவராகும் தகுதி எனக்கு இல்லை - கங்குலி

பி.சி.சி.ஐயின் அடுத்த தலைவராக கங்குலி தேர்வு செய்யப்பட வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது. முன்னாள் கேப்டன் கவாஸ்கர் உள்பட பலர் கங்குலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், 'நான் தலைவர் பதவிக்கு தகுதியானவன் அல்ல. மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று ஓராண்டுதான் ஆகிறது. இங்கே செய்யவேண்டியதே நிறைய இருக்கிறது' எனக் கூறியுள்ளார் கங்குலி.

Sourav-Ganguly_00257.jpg

http://www.vikatan.com/news/sports/76787-i-dont-qualify---says-ganguly.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.