Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகல்

Featured Replies

  • தொடங்கியவர்

தேர்வுக்குழு உத்தரவால் டோனி விலகினார் - பரபரப்பு தகவல்

 

தேர்வுக்குழு உத்தரவால் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகியதாக வெளியான தகவலால் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 
 
தேர்வுக்குழு உத்தரவால் டோனி விலகினார் - பரபரப்பு தகவல்
 
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான வரலாற்று சிறப்புமிக்க கேப்டன் மகேந்திரசிங் டோனி. இரண்டு உலக கோப்பையை வென்று (2007-ம் ஆண்டு 20 ஓவர், 2011-ம் ஆண்டு 50 ஓவர்) இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

இந்திய கிரிக்கெட்டின் 3 நிலைக்கும் கேப்டனாக இருந்த டோனி 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது டெஸ்டில் இருந்து திடீரென ஓய்வு பெற்றார். இதனால் விராட்கோலி டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணிக்கு கேப்டனாக டோனி தொடர்ந்து பணியாற்றினார்.

இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிர்ச்சிகரமான முடிவை டோனி எடுத்தார். ஒருநாள் போட்டி, 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதே நேரத்தில் அணியில் தொடர்ந்து ஆடுவேன் என்று அறிவித்தார்.

இதை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் அணியில் இடம் பெற்றார். விராட்கோலி 3 நிலைக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கேப்டன் ஆனார்.

இந்த நிலையில் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகியது அவரது சொந்த முடிவு இல்லை என்றும் பதவி விலகுமாறு அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது என்றும் பரபரப்பான தகவலை ஆங்கில பத்திரிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது.

இதை கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோனி தானாக முன் வந்து கேப்டன் பதவியில் இருந்து விலகவில்லை என்றும் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கேட்டுக்கொண்டதன் பேரில் விலகினார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் ஜார்க்கண்ட் -குஜராத் மோதிய அரைஇறுதி ஆட்டம் கடந்த வாரம் நாக்பூரில் நடந்தது. டோனி தனது மாநில அணியை உற்சாகப்படுத்துவதற்காக வீரர்களுடன் இருந்தார்.

அப்போது தேர்வுகுழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் அங்கு சென்று டோனியை சந்தித்தார். அப்போது கேப்டன் பதவி குறித்து அவரிடம் தேர்வு குழு தலைவர் விவாதித்தார்.

2019 உலக கோப்பை நடக்கும் போது டோனிக்கு 39 வயதாகிவிடும். இதனால் விராட் கோலியை கேப்டனாக்குவதில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்தே தேர்வு குழு தீவிரம் காட்டி வந்தது.

புதிய தேர்வு குழு கடந்த செப்டம்பர் 21-ந்தேதி பதவியேற்றது. அப்போதே 2019 உலக கோப்பை பற்றி அதிக கவனம் செலுத்தப்பட்டது. டெஸ்டில் மிகவும் சிறப்பாக செயல்படும் விராட் கோலியை ஒருநாள் போட்டிக்கும் கேப்டன் ஆக்கிவிட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் அவரது ஆக்ரோ‌ஷம் தேர்வு குழுவை கவர்ந்து இருந்தது.

கேப்டன் பதவியால் டோனிக்கு உள்ள நெருக்கடி பற்றியும் இந்த சந்திப்பின் போது பிரசாத் எடுத்து உரைத்தார். இதனால் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு இதுவே சரியான நேரம் என்று தெரிவித்தார்.

தேர்வு குழு தலைவரின் இந்த உத்தரவால் தான் டோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான வீரர்கள் தேர்வுக்கு முன்பு பதவி விலகுமாறு அவரிடம் கேட்டு கொள்ளப்பட்டது. இதனால் அவர் 4-ந்தேதியே தனது பதவி விலகல் முடிவை அறிவித்து கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துவிட்டார்.

டோனி தானாக கேப்டன் பதவியை விட்டு செல்லவில்லை. கட்டாயப்படுத்தி விலகுமாறு கேட்டுக்கொண்டதாக வெளியான இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் வேதனையையும், ஏமாற்றத்தையும் அளித்து உள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/09132139/1061059/Dhoni-quit-under-pressure-from-BCCI-joint-secretary.vpf

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

தோனி விட்டுச் செல்லும் தடங்கள்

 

 

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 20 ஓவர் போட்டிகள் ஆகியவற்றுக்கான அணிகளின் தலைமைப் பொறுப்பிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகியிருக்கிறார். மட்டைவீச்சில் மட்டுமின்றி, தலைமைப் பொறுப்பிலும் அலாதியான திறமைகள் கொண்ட விராட் கோலியிடம் தலைமைப் பொறுப்பு போய்ச் சேர்ந்திருப்பதால், தோனியின் விலகலால் அதிர்ச்சியோ கவலையோ ஏற்படவில்லை. எனினும், தோனி ஏற்படுத்தும் வெற்றிடம் அவ்வளவு எளிதில் நிரப்ப முடியாதது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 20 ஓவர் போட்டி, சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய மூன்று சர்வதேசப் போட்டிகளிலும் கோப்பையை வென்ற அணியின் தலைவர் தோனி. இந்த வெற்றிகளில் ஆட்டக்காரர் என்னும் முறையிலும் தலைவன் என்ற முறையிலும் அவரது பங்களிப்பு கணிசமானது. ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் அவருடைய உள்ளுணர்வு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, வெற்றிகளைத் தேடித் தந்திருக்கிறது.

நெருக்கடியின்போது தோனி ஆழ்ந்து யோசித்துச் செயல்படுவார். தான் மட்டும் அமைதியாக இல்லாமல் அணியையும் அதே மனநிலையில் வைத்திருப்பார். ஆட்டத்தின் முடிவுக்கு நான்தான் பொறுப்பு என்பதால், கவலையின்றி விளையாடுங்கள் என்று ஊக்குவிப்பார். பொறுப்பின் சுமையைத் தான் எடுத்துக்கொண்டு, சுதந்திரமான ஆட்டம் என்னும் சலுகையை மற்றவர்களுக்கு வழங்குவது தோனியின் பண்பு.

தோனியைத் தலைவர் பதவியிலிருந்து விலக்குவதோ, விலகும்படி கேட்பதோ கிரிக்கெட் வாரியத்துக்கு மிகுந்த தர்மசங்கடமான நிலைமையாகும். இதைப் புரிந்துகொண்டு தானாகவே விலகியிருக்கிறார் தோனி. இந்திய கிரிக்கெட் இப்போதுள்ள நிலையில் தன்னலம் கருதாது, துணிச்சலாக இந்தத் தெளிவான முடிவை எடுத்திருக்கிறார்.

கோலியின் தலைமையில் அணி டெஸ்ட் பந்தயங்களில் வெற்றிகளைக் குவித்துவருகிறது. ஒருநாள் போட்டிகளிலும் அணியைக் கரைசேர்க்கும் பொறுப்பைக் கோலி செவ்வனே செய்துவருகிறார். அவருடைய தலைமைப் பாணி தோனியிடமிருந்து வேறானது. இந்நிலையில் டெஸ்ட் அணிக்கும் இதர போட்டிகளுக்கான அணிகளுக்கும் வெவ்வேறு தலைவர்கள் இருப்பது அணியின் ஒட்டுமொத்த அணுகுமுறையில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். இந்தியச் சூழலில் இரட்டைத் தலைமை என்பது சரிப்பட்டு வராது என தோனி கூறியிருப்பதிலிருந்து அவர் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டிருப்பவர் என்பது தெளிவாகிறது.

இந்த ஜூலையில், 36 வயதை எட்டும் தோனியின் இன்னிங்ஸ் ஆட்டக்காரர் என்னும் முறையிலும் ஓரிரு ஆண்டுகளில் முடிவுக்கு வந்துவிடலாம். எனினும், தலைவன் என்ற முறையிலும் ஆட்டக்காரர் என்ற முறையிலும் களத்தில் அவர் விட்டுச் சென்ற தடங்கள் அழியாது. நெருக்கடியில் அசராமல் நிற்பது, வெற்றி- தோல்விகளில் தடுமாறாமல் இருப்பது, சிக்கல் வரும்போது முன்னணியில் நின்று போராடுவது, தோல்விக்குப் பொறுப்பேற்பது, ஆட்டக்காரர்களின் ஆகச் சிறந்த திறமையை வெளிப்படுத்த உதவுவது ஆகியவை தோனியின் தனிப்பெரும் குணங்கள். இவை இந்திய கிரிக்கெட்டுக்கு அளப்பரிய பங்களிப்பைச் செலுத்தியுள்ளன. இந்தப் பங்களிப்புக்காக தோனி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.

http://tamil.thehindu.com/opinion/editorial/தோனி-விட்டுச்-செல்லும்-தடங்கள்/article9491720.ece?homepage=true&theme=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.