Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த சிந்தனை இலங்கை மக்களுக்கு வரம் என்கின்றார் அமைச்சர் அமீர்அலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த சிந்தனை இலங்கை மக்களுக்கு வரம் என்கின்றார் அமைச்சர் அமீர்அலி

"மஹிந்த சிந்தனை' என்பது இலங்கை மக்களுக்குக் கிடைத்த ஒரு பெரும் வரமாகும் என்று அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் கடந்த 2ஆம் திகதி தனது கடமையைப் பொறுப்பேற்கும் வைபவத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

இந்த அமைச்சை கடந்த வருடம் நான் பொறுப்பேற்ற வேளை ""சரியான ஒருவருக்கே இந்த அமைச்சு வழங்கப்பட்டுள்ளது'' என்று ஜனாதிபதியின் ஊடக ஆராட்சி அதிகாரி எம்.எச்.எம். அஸ்வர் சொன்னார். ஜனாதிபதி இதைப்பொறுப்பேற்றபோது இதைக்கொண்டு என்னசெய்யமுடியும் என்ற வினாவே எனக்குள் எழுந்தது. ஆனால், துயரப்பட்ட மக்களின் ஆதரவுக்கரமாக நான் இருக்கின்றேன் என்று விளங்கிக்கொண்டபோது நான் மிகுந்த மனத்திருப்தியடைந்தேன்.

புனர்வாழ்வளிப்பு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி அமைச்சராக இருந்த எனக்கு இந்த அமைச்சை ஒப்படைத்த ஜனாதிபதி, உங்களது மாவட்டத்துக்கு மட்டுமல்லாமல் முழு நாட்டுக்கும் சேவை செய்வதற்குப் பழகிக் கொள்ளவேண்டும் என்று கூறினார்.

நாட்டில் ஆங்காங்கு ஏற்படும் அனர்தங்களைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் ஏற்படும் ஆனந்தத்தை வெறும் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது.

கடந்த காலங்களில் நாட்டின் பல பிரதேசங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களுக்கு நிவாரணங்களை வழங்கியிருந்தோம். இரவு, பகல், வெயில் மழை அச்சுறுத்தல்கள் என எதையும் சாட்டை செய்யாமல் அனர்த்தம் ஏற்பட்ட இடங்களுக்கு உடனடியாகச் சென்று பார்வையிட்டு நிவாரணங்களையும் உதவிகளையும் வழங்கியுள்ளோம்.

குறிப்பாக மூதூர் பிரதேசத்தில் ஏற்பட்ட இடப்பெயர்வின் போது அவர்களை மீள்குடியேற்றுவதில் முன்னின்று உழைத்தோம். வடக்கிலிருந்து வந்தவர்கள் 18 வருடங்களாக இன்னும் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்க இவர்களை எவ்வாறு சொந்தஇடங்களுக்கு அனுப்பமுடியும் என்று பலர் எம்மை எள்ளி நகையாடினார்கள்.

ஆனால், இரவு பகலாக அங்கு தங்கியிருந்து செயற்பட்டு 31 தினங்களுக்குள் அவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தோம். அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், நஜீப் அப்துல் மஜீத், ஹுசையின் பைலா ஆகி யோர் இந்த விடயத்தில் முன்னின்று உழைத்தனர்.

நாம் மக்களின் சேவைக்கென அரசியலுக்கு வந்தவர்கள். அமைச்சர்களான பின்னர் இப்போது வரமுடியாது என்றோ, இப்போது நேரம் இல்லை என்றோ மக்களுக்குச் செல்லமுடியாது. அவ்வாறு சொல்வதும், செய்வதும் பிழையானது என்று நான் நினைக்கின்றேன்.

பொதுவாக அமைச்சுக்களில் புதன்கிழமை பொதுமக்கள் தினம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது. அன்றையதினம் மாத்திரம் தான் அமைச்சர்களை பொதுமக்கள் சந்திக்க முடியும். ஆனால் எனது அமைச்சில் வாரத்தின் ஏழுநாட்களும் அமைச்சரைச் சந்திக்க முடியும். அனர்த்தங்களைப் பார்வையிட அல்லது எனது பிரதேசத்திற்கு செல்லாத அனைத்து தினங்களிலும் என்னைச் சந்திப்பதற்கு இயலுமாக இருக்கும்.

கட்சி என்ற ரீதியில் நாம் ஜனாதிபதியைச் சந்தித்தபோது அவர் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார். எமது அமைச்சுக்களின் மூலம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றோம். அதற்கு வாய்ப்பளித்தால் அதுவே போதுமாக இருக்கும் என்று கூறினோம். எமது வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டார்.

நாங்கள் வெறுமனே அறிக்கைகளை விட்டுவிட்டு சும்மா உட்கார்ந்திருக்கும் நபர்கள் அல்லர் என்பதை அவர் நன்கு அறிந்தவர். அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

இந்த அமைச்சு 24 மணிநேரமும் தயார் நிலையிலுள்ள அமைச்சராக என்னை மாற்றியிருக்கின்றது. கால நேரம் பார்க்காமல் உதவிக்கரம் நீட்ட ஓடும் ஒரு மனிதனாக நான் மாறியிருக்கின்றேன். இதனால்தான் தரவிருதுகள் வழங்கப்பட்டபோது எனது அமைச்சு மூன்றாம் இடத்தைப் பெற்றது. இந்தப்பயணத்தில் என்னுடன் எனது அமைச்சின் செயலாளர் முதல் சிற்×ழியர்கள் வரை பங்கெடுத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இந்தவேளை நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், வெளிவிவகாரப் பிரதியமைச்சர் ஹுசைன் பைலா, அமைச்சின் முன்னாள் செயலாளர் எம்.ஏ.ஆர்.டீ. ஜயதிலக்க, மேலதிகச்செயலாளர் எல்.கே.டீ.எல். தனபால, தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையப் பணிப்பாளர் என்.டீ.ஹெட்டியாராச்சி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் சட்டத்தரணி என்.எம்.ஷஹீட், செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் மற்றும் ஓட்டுமாவடிப் பிரதேச சபைத்தலைவர் எம்.கே.முகைதீன் உட்பட அங்கத்தவர்களும் ஏறாவூர் நகரப் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் அல்ஹாஜ்.எம்.எஸ்.சுபைர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

- சுடர் ஒளி

மக்களுக்கு இல்லை உங்களுக்குதான் வாழ்கை ஜோரா போனால் செமிக்கிறதுக்கு இப்படியெல்லாம் கதைகிறதா இது சரியில்லை கண்டியளோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.