Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொண்டர் நிறுவனங்களின் விவகாரத்தில் அரசின் அணுகுமுறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[09 - February - 2007] [Font Size - A - A - A]

இலங்கையில் அரசாங்க சார்பற்ற சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் அண்மைக் காலமாக எதிர் நோக்க வேண்டியிருக்கின்ற நெருக்கடிகள் காரணமாக சர்வதேச சமூகம் அரசாங்கத்துக்கு நெருக்குதல்களைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது போலத் தெரிகிறது. இலங்கைக்கு உதவி வழங்கும் பிரதான நாடுகளின் தூதுவர்கள் சகிதம் கொழும்பில் நேற்று முன்தினம் புதன்கிழமை அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூட்டிய செய்தியாளர்கள் மகாநாட்டில் அவர் தெரிவித்த கருத்துக்கள் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கு எதிரான அணுகுமுறையை அரசாங்கம் கடைப்பிடிக்கவில்லை என்று சர்வதேச சமூகத்துக்கு உறுதியளிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலையொன்று உருவாகியிருப்பதை வெளிக்காட்டுகின்றன.

`நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் அரசாங்க சார்பற்ற சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் முக்கியத்துவம் வாய்ந்த துணையுதவிப் பங்களிப்பை செய்து கொண்டிருக்கின்றன. அந் நிறுவனங்களின் பணிகளுக்கு குந்தகத்தை ஏற்படுத்தக் கூடாது. தொண்டர் நிறுவனங்களை வேட்டையாடுவதற்கு இதுவல்ல நேரம்' என்று தெரிவித்த அமைச்சர் சமரசிங்க, இலங்கையில் அந்நிறுவனங்கள் பிரச்சினைகளின்றி சுமுகமாகத் தங்கள் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலைமையொன்று இருப்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார். தொடர்பில்லாத வகையில் பெருமளவு செய்திகள் வெளியிடப் பட்டதன் காரணத்தினாலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நிருவாகம் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு எதிரானது என்ற தவறான ஒரு எண்ணம் தோன்றியிருக்கிறது என்று தெரிவித்த அமைச்சர் சமரசிங்க, `தவறு செய்ததாகக் கண்டு பிடிக்கப்படும் நிறுவனங்கள் அவற்றுக்குரிய சிறப்புரிமைகளை பயன்படுத்தி தப்பிச் செல்ல அனுமதிக்கப் போவதில்லை. தொண்டர் நிறுவனங்களின் செயற்பாடுகளை ஒருங்கமைப்பதற்காக ஒழுக்கக் கோவையொன்றை வரைவதற்கு அரசாங்கம் திட்டமிடுகிறது' என்று குறிப்பிட்டார்.

செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய வெளிநாடுகளின் தூதுவர்கள் சகலருமே அரசாங்க சார்பற்ற சர்வதேச தொண்டர் நிறுவனங்களின் பணிகளுக்கு தங்கள் நாடுகள் கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுப்பதை பிரத்தியேகமாக வலியுறுத்திக் கூறினார்கள். இலங்கையில் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கு எதிராக அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசமத்தனமான பிரசாரங்களினால் உதவி வழங்கும் நாடுகள் சமூகத்துக்கு ஏற்பட்டிருக்கின்ற ஆத்திரத்தை ஜேர்மன் தூதுவர் ஜுர்ஜென் வீர்த்தின் கருத்துக்கள் பிரதிபலித்தகைக் காணக்கூடியதாக இருக்கிறது. `எந்த வொரு நவீன சமூகத்திலுமே அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் தவிர்க்க முடியாதவை, கடல்கோள் அனர்த்தத்திற்குப் பிறகு முன்னென்றுமில்லாத வகையில் அந்த நிறுவனங்களினால் வழங்கப்பட்ட உதவிகள் நாட்டுக்கான அவற்றின் சாதகமான பங்களிப்புக்கு சிறந்த உதாரணமாகும். உலகெங்கும் மக்களின் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் முக்கியத்துவம் வாய்ந்த பங்கையாற்றுகின்றன. சிலவேளைகளில் அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாத பொறுப்புகளைக் கூட அந்நிறுவனங்கள் பூர்த்தி செய்கின்றன. இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தான் தொண்டர் நிறுவனங்கள் இங்கு வந்திருக்கின்றன. வெளியேறிச் செல்லுமாறு அரசாங்கம் கேட்குமேயானால், அவ்வாறு செய்வதற்கு அவை தயாராகவேயிருக்கின்றன' என்று ஜேர்மன் தூதுவர் தெரிவித்திருந்தார்.

உள்நாட்டுப் போரும் அரசியல் வன்முறைகளும் நிலவுகின்ற நாடுகளிலே தோன்றியிருக்கும் பாரதூரமான மனிதாபிமான நெருக்கடிகள் அரசாங்க சார்பற்ற தொண்ட நிறுவனங்களின் பணிகளைக் கூடுதலான அளவுக்கு வேண்டி நிற்கின்ற இன்றைய காலகட்டத்திலே, துரதிர்ஷ்டவசமாக அந்நிறுவனங்கள் முன்னென்றுமில்லாத அச்சுறுத்தல்களை எதிர்நோக்குவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. வன்முறைகளினால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்யும் அந்நிறுவனங்களின் பணியாளர்கள் பலவித இடர்பாடுகளுக்கு மத்தியில் செயற்பட வேண்டியிருக்கும் அதேவேளை, அவர்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. கெயர் இன்ரர் நஷனல் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையொன்றில் 2006 ஆம் ஆண்டு உலகில் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக உதவிப் பணியாளர்களுக்கு ஆபத்தான நாடாக இலங்கை விளங்கியதாக சுட்டிக்காட்டப்பட்டது. இது விடயத்தில் இலங்கையில் காணப்படக் கூடியதாக இருக்கும் இன்னொரு பாதகமான அம்சம் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கு எதிரான அரசியல் சக்திகளின் பிரசாரங்களாகும்.

போருக்கு ஆதரவான அரசியல் சக்திகளே இந்த பிரசார நடவடிக்கைகளின் முன்னணியில் விளங்குகின்றன. சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட காலத்தில் இருந்து சர்வதேச தொண்டர் நிறுவனங்களுக்கு எதிரான பிரசாரங்கள் திட்டமிட்ட ரீதியில் தீவிரப்படுத்தப்பட்டு வந்தன. இந்தப் பிரசாரங்களுக்கு தென்னிலங்கையின் பல ஆங்கில மற்றும் சிங்கள ஊடகங்கள் பெரும் முக்கியத்துவத்தைக் கொடுத்து வந்தன. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களும் தொண்டர் நிறுவனங்களுக்கு எதிரான பிரசாரங்களுக்கு களம் அமைத்துக் கொடுத்து வருகின்றன. அரசாங்க சார்பற்ற சர்வதேச தொண்டர் நிறுவனங்களின் பணிகளுக்கு எதிராக அரசாங்கம் செயற்படவில்லை என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறுவது உண்மையானால், முதலில் அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களில் தொண்டர் நிறுவனங்களுக்கு எதிரான பிரசாரங்களுக்கு இடமளிப்பதை நிறுத்த வேண்டும். உண்மையிலேயே, இந்த நிறுவனங்களுக்கு எதிரான பிரசாரங்கள் என்பது அடிப்படையில் எந்தவொரு சமாதான முயற்சியுமே மீண்டும் முன்னெடுக்கப்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்பதில் குறியாக இருக்கும் பேரினவாத அரசியல் சக்திகளின் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பிரதான அங்கமேயாகும் என்பதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் நிலைவரங்களில் மேம்பாட்டைக் கொண்டு வர முடியாது என்பது எமது அபிப்பிராயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.