Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநூலகப் புதுநூலகம்

Featured Replies

பொதுநூலகப் புதுநூலகம்

(அன்றொருநாள் ஐபிசித் தமிழுக்காய் எழுதியது)

நல்லளவையூரான் நானுரைக்கும் கவிபார்த்து

சொல்லிற்படு குறை களைந்தே ஆய்ந்து நறும்

வித்தகரே வியம்பிடுவீர் வாஞ்சையுடன் ஏற்றிடுவேன்

இத்தினம் சித்தமாய் இயம்புகின்ற அடியேனும்

துன்பமாய்க் கலந்தழியும் நெஞ்சகன் ஆகி

மின்தளம் வழியே விரும்பிடு யாழ்நகர்

நூலகக் கருவினைச் சார்ந்தே

பொதுநூலகத்தில் புதுநூலகமாம் என்ற கருக் கொண்டே

மதிதனில் இருத்தி மாண்புறு தமிழால்

பெருமை கொண்டு சோர்வகற்றி வரைக்கின்றேனீங்கு!!

தங்கு யாழ்நகர் தருநல் வரமென

யாங்கொரு காலத் தோங்கிய தாகி

மேருவில் மேலுறு பயனதாய் மிளிர்ந்து

பெருமைசேர் அறிவுநூல் பலவுடன் வெண்மையாய்

பாவலர் முதலாய் பைந்தமி ழறிவோர்

தானே உணரும் பயனது கனிந்த

ஒன்றோடொன்று செழித்தவர் நிலையில்

வாய்த்த நூல்களாய்ந்து பகன்று

அந்நூல் தன்மை யுன்னிய மாந்தர்

பெருங்கடலுதவும் கல்வியின் கருவை

காரணமறிந்துங் கண்டது தோல்வியே

மற்றவர் அயலார் அவருரை மறுத்து

நற்கவி மாந்தர் நெஞ்சமே நெகிழ

தன்னை யொழித்து தானாய் அழியும்

தன்மையுணராப் புன்மையாளர்கள்

அவமுறு கருவாய் அந்நியர் ஆகியே

தவமறு யாகம் வளர்த்தனர் தீயால்

விளக்கெனத் திகழ்ந்த அளப் பெருநூலகம்

சலமில தாகிச் சாம்பரா யானதே

தனக்கிலதொரு பலர்க்கெனத் தெளியா

மனத்திடை யெழுந்திடு மாசுறு செயலால்

கண்ணிற் கண்டது கனவது ஆமோ?

வருந்திடின் அந்நூல் திரும்பவும் வருமா?

வெந்தழல் வேகிய நூல்கள் தேடவும் அரிதே

நெஞஇசினில் கொதிக்கும் நெடுந்துயர் தீர

கனவின் பயனும் நனவின் பயனும்

வினையின் பயனவை பொய்யென வேண்டா

தருக்கம் பேசினால் தலைபறிபோமே

உடன் மாறாட்டக் கதையது கருதி

தடங்கல் தவிர்த்து தமிழ்மணங் கமழ

தமிழன்னை சீற்றம் அணைய ஆகலின்

வையம் வாழ்தியும் கொடியவர் கொழுத்தினும்

வெய்யோன் கீற்றில் விடியும் உலகின்

இருக்கும் நாட்சிலவென எண்ணுவோர் அரிதே

அறிவிற் கறிவு செறிய வேண்டியே

குறிக் கோளாகக் கொண்டவர் முயற்சியில்

விளங்கு தீயெறிந்த வீணர்கள் திருந்தியும்

தமிழ்த்தலைகாண நிலமிசை வணங்கி

முழுதுமாள்வோர் முன்வந்துதவி

தலைவனின் வழிமுறை ஏற்றுமே இணங்கி

ஆற்றலொ புகழேந்தி வானுறையும் மதிபோல

வேறுவேறு பொலிவுடனே ஈழமண் பூத்திருக்க

எறிந்து களம்படுத்த என்தமிழ்ப் புதல்வர்கள்

ஊறிய கொள்கையுள்ளே உயர்வது கண்டு

நீறாய்பப் போன நல்லூலகத்தை

பேறாயெமக்கு புதுப் பொலிவாக்கி

கற்றோர் கனிந்து காணரிய நூலையெல்லாம்

ஏற்றிடுதியாக சிந்தையு ள்ளிருத்தி

வாரியே வழங்கி வளர்க்க முன்நின்றால்

தருக்கள் போல தளைத்தது ஓங்கி

மீண்டுமொரு முறை பயனது நாமும் பெற்றிடலாமே.

----------------------------------------------------

நீண்டதோர் கவியை புனைந்தது கண்டு

வேண்டாம் குறையாய் விசனம் தவிர்ப்பீர். நன்றி

----------------------------------------------------

ஐயா அழகிய கவிதை, ஆனால் ஏன் அறிமுகப்படலத்தை பத்து வரிகள் இழுத்தடித்துள்ளீர்கள் என விளங்கவில்லை. மரபுக் கவிதையாக எழுதிடினும் நேரடியாக விசயத்தினுள் வந்தால் உங்கள் கவிதை இன்னும் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதை அழகு.

புரிந்து கொள்ள இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்கும்.

உங்கள் கவிதையை உங்கள் குரலில் கேட்டால் கவிதை நல்லாய் இருக்கும்

  • தொடங்கியவர்

ஐயா அழகிய கவிதை, ஆனால் ஏன் அறிமுகப்படலத்தை பத்து வரிகள் இழுத்தடித்துள்ளீர்கள் என விளங்கவில்லை. மரபுக் கவிதையாக எழுதிடினும் நேரடியாக விசயத்தினுள் வந்தால் உங்கள் கவிதை இன்னும் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து!

அன்புத்தமிழுறவே தங்கள் வேண்டுகோளை அடியேன் ஏற்று இனிவரும் கவிதையிலே திருத்திக்கொள்வதற்கு முனைகிறேன் மன்னிக்கவும்.நனஇறி

ஐயா அழகிய கவிதை, ஆனால் ஏன் அறிமுகப்படலத்தை பத்து வரிகள் இழுத்தடித்துள்ளீர்கள் என விளங்கவில்லை. மரபுக் கவிதையாக எழுதிடினும் நேரடியாக விசயத்தினுள் வந்தால் உங்கள் கவிதை இன்னும் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து!

அன்புத்தமிழுறவே தங்கள் வேண்டுகோளை அடியேன் ஏற்று இனிவரும் கவிதையிலே திருத்திக்கொள்வதற்கு முனைகிறேன் மன்னிக்கவும்.நனஇறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.