Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீறப்படும் வாக்குறுதி காரணம் யார்?

Featured Replies

மீறப்படும் வாக்குறுதி காரணம் யார்?

03-9cffe2ce419fc5cc90cbed5b46880fe46dcf80fa.jpg

 

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 34 ஆவது கூட்­டத்­தொடர் இன்னும் இரண்டு வாரங்­களில் ஜெனீ­வாவில் தொடங்­க­வுள்ள நிலையில், போர்க்­குற்­றங்கள் தொடர்­பான விசா­ர­ணைக்கு மேலும் கால­அ­வ­காசம் தேவைப்­ப­டு­வ­தாக இலங்கை அர­சாங்கம் கோரிக்கை விடுக்­க­வுள்­ளது.கடந்­த­வாரம் கொழும்பில் வெளி­நாட்டுச் செய்­தி­யா­ளர்கள் சங்­கத்தைச் சேர்ந்த ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுடன் நடத்­திய சந்­திப்பின் போது, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர இதனைத் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

கடந்த 2015 செப்­டெம்பர், ஒக்­டோபர் மாதங்­களில் நடந்த ஐ.நா. மனித உரி­மை கள் பேர­வையின் 30ஆவது கூட்­டத்­தொ­டரில், இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தின் கீழ், வழங்­கப்­பட்­டி­ருந்த கால­அ­வ­காசம் முடி­வுக்கு வர­வுள்ள நிலை­யி­லேயே இந்தக் கோரிக்கை விடுக்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது.

போர்க்­கால மீறல்கள் குறித்த குற்­றச்­சாட்­டு­களை நம்­ப­க­மாக- சுதந்­தி­ர­மாக விசா­ரிக்கும் வெளி­நாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதி­ப­தி­க­ளையும், விசா­ர­ணை­யா­ளர்கள் மற்றும் வழக்குத் தொடு­னர்­க­ளையும் உள்­ள­டக்­கிய கலப்பு விசா­ரணைப் பொறி­முறை ஒன்றை உரு­வாக்க வேண்டும் என்று அந்தத் தீர்­மா­னத்தில் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. ஒன்­றரை ஆண்­டுகள் கழித்து., இந்த மாத இறு­தியில் கூட­வுள்ள பேர­வையின் 34 ஆவது கூட்­டத்­தொ­டரில், அந்தத் தீர்­மானம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதா என்­பது பற்­றிய விரி­வான அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்டு, அது­பற்றி விவா­தமும் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

இந்தச் சூழ்­நி­லையில் தான், போர்க்­குற்ற விசா­ர­ணைக்­கான பொறி­மு­றை­களை உரு­வாக்க மேல­திக கால­அ­வ­காசம் வழங்­கப்­பட வேண்டும் என்று கோர­வி­ருப்­ப­தாக வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர கூறி­யி­ருக்­கிறார்.

ஜெனீவாவில் 2015ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்கி , அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தாக இணங்­கி­யி­ருந்­தது. எனினும், அந்தக் தீர்­மா­னத்தில், விசா­ரணைப் பொறி­மு­றையை அமைப்­ப­தற்­கான ஒரு தெளி­வான கால­ வ­ரையறை வகுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

இது அந்தத் தீர்­மா­னத்தின் முக்­கி­ய­மான குறை­பாடு. அந்தக் குறை­பாட்டை பயன்­ப­டுத்திக் கொண்டு தான், இலங்கை அர­சாங்கம் விசா­ரணைப் பொறி­முறை ஒன்றை அமைக்­காமல் இன்­னமும் இழுத்­த­டித்துக் கொண்­டி­ருக்­கி­றது. ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை அந்தத் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் விட­யத்தில் நெகிழ்­வுத்­தன்­மை­யையே பின்­பற்றி வந்­தி­ருக்­கி­றது.  

தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்ற நிலைப்­பாட்டை ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­யகம் என்­பன வெளிப்­ப­டுத்தி வந்த போதும், இந்த விசா­ரணைப் பொறி­முறை விட­யத்தில் இலங்கை அர­சாங்­கத்தின் குழப்­ப­மான முடி­வு­களை கண்டு கொள்­ளா­ம­லேயே இருந்து வந்­தன.

உதா­ர­ணத்­துக்கு, பேரவைத் தீர்­மா­னத்தில் கலப்பு விசா­ரணைப் பொறி­மு­றையே பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருந்­தது. ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அதனை சிறந்த பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றை­யா­கவே இன்­னமும் வலி­யு­றுத்தி வரு­கிறார். இருந்­தாலும், இலங்கை அர­சாங்கம் அந்த வாக்­கு­று­தியில் இருந்து நழு­வு­கி­றது என்று தெரிந்­த­போது, அதனை ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யா­ளரோ, பேர­வையோ கண்­டிக்­க­வில்லை. 

வெளி­நாட்டு நீதி­ப­தி­களை விசா­ரணைப் பொறி­மு­றையில் உள்­ள­டக்க முடி­யாது என்றும், ஆனால் வெளி­நாட்டுப் பங்­க­ளிப்பை பெற்­றுக்­கொள்வோம் என்றும் மங்­கள சம­ர­வீர கூறி­யி­ருக்­கிறார்.

வெளி­நாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதி­ப­திகள், விசா­ர­ணை­யா­ளர்கள், வழக் குத் தொடு­னர்­களை உள்­ள­டக்­கிய விசா­ரணைப் பொறி­மு­றையை நிறு­வு­வ­தா­கவே, 2015ஆம் ஆண்டில் இலங்கை அர­சாங்கம் ஜெனீவாவில் இணங்­கி­யி­ருந்­தது. ஜெனீவாவில் இருந்து திரும்­பி­ய­துமே, கலப்பு விசா­ரணைப் பொறி­மு­றைக்கு நாம் ஒத்­துக்­கொள்­ள­வில்லை என்று இலங்கை அர­சாங்கம் குத்­துக்­க­ரணம் அடித்து விட்­டது.  

அதற்குப் பின்னர், நம்­ப­க­ மான, சுதந்­தி­ர­மான உள்­நாட்டு விசா­ரணைப் பொறி­மு­றையை உரு­வாக்கும் அர­சாங்­கத்தின் திட்­டத்தை, ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை ஏற்றுக் கொண்­டி­ருப்­ப­தாக வெளி­வி­வ­கார அமைச்சர் கூறி­யி­ருக்­கிறார். இந்தக் கட்­டத்தில், ஐ.நா. மனித உரி­ மைகள் பேரவை தனது கடப்­பாட்டில் இருந்து தவ­றி­யி­ருக்­கி­றது. கலப்பு விசா­ரணைப் பொறி­முறை ஒன்­றுக்கு இலங்­கையும் இணங்கி, அதற்கே பேர­வையும் அங்­கீ­காரம் கொடுத்­தி­ருக்கும் நிலையில், உள்­நாட்டு விசா­ர­ணை­யை நடத்­துவோம் என்ற வாக்­கு­று­தியை ஜ.நா.ஏற்று கொண்டிருந்தால் அது எந்த வகையில்

நியா­ய­மா­ன­தாக இருக்கும்?

அப்­ப­டி­யாயின், மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் நம்­ப­க­மான விசா­ரணைப் பொறி­மு­றையை அமைக்­கிறோம் என்று வாக்­கு­றுதி கொடுத்த போது, அதை­யெல்லாம் ஏன் ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை கண்டு கொள்­ளாமல் இருந்­தது என்ற கேள்வி எழு­கி­றது.

கலப்பு விசா­ரணைப் பொறி­மு­றைக்குப் பரிந்­து­ரைத்து நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை ஒதுக்கி விட்டு உள்­நாட்டு விசா­ரணைப் பொறி­மு­றையை அமைப்­ப­தற்கு பேரவை இணங்­கி­யி­ருந்தால், அது, 2015 தீர்­மா­னத்தை, ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையே தரம் ­தாழ்த்திக் கொள்­வ­தற்கு ஒப்­பா­னது.

அது­போ­லவே, ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் ராட் அல் ஹுசேனும், இலங்­கைக்குப் பயணம் மேற்­கொண்­டி­ருந்த போது, கலப்பு விசா­ரணைப் பொறி­முறை தொடர்­பான நிலைப்­பாட்டை உறு­தி­யாக வெளிப்­ப­டுத்தத் தவ­றி­யி­ருந்தார்.

அவர் இந்த விசா­ரணைப் பொறி­மு­றைக்கு காலக்­கெடு விதிக்­கப்­ப­ட­வில்லை என்று கூறி­யி­ருந்தார். விசா­ரணைப் பொறி­முறை எத்­த­கை­யது என்று முடிவு செய்யும் உரிமை இலங்­கைக்கே இருப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார். எனினும், கலப்பு விசா­ரணைப் பொறி­மு­றையே சிறந்­தது என்­பது தனது கருத்து என்றும் அவர் கூறி­யி­ருந்தார். 

ஆக, பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு அமைய, கலப்பு விசா­ர­ணையைத் தான் அமைக்க வேண்டும் என்றோ, பேர­வையின் 34 ஆவது கூட்­டத்­தொ­ட­ருக்குள் அந்த பொறி­முறை அமைக்­கப்­பட வேண்டும் என்றோ ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் உறு­தி­யான கருத்தை அப்­போது வெளி­யிட்­டி­ருக்­க­வில்லை.

இது இலங்­கைக்கு சாத­க­மா­கவே இருந்­தது. கலப்பு விசா­ரணை தான் சிறந்­தது என்று கூறி­யி­ருந்­தாலும், அதனை அர­சாங்கம் கவ­னத்தில் கொள்­ளாமல், அவர் ஒன்றும் காலக்­கெடு விதிக்­க­வில்­லையே என்­ப­தையும், விசா­ரணைப் பொறி­மு­றையைத் தீர்­மா­னிக்கும் உரிமை அர­சாங்­கத்­துக்கே உள்­ளது என்று கூறி­ய­தையும் மாத்­திரம் தமக்கு வச­தி­யாக பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றது.

இந்த விட­யங்­களும், நம்­ப­க­மான சுதந்­தி­ர­மான பொறுப்­புக்­கூறல் ஒன்றை விரை­வாக உரு­வாக்கத் தவ­றி­ய­மைக்கு முக்­கி­ய­மான கார­ணங்கள். ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர் அர­சாங்­கத்தை நெருக்­கடி கொடுக்க சர்­வ­தேச சமூகம் தவ­றி­விட்­டது.

அந்தச் சந்­தர்ப்­பத்தை அர­சாங்கம் தனக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றது. ஜெனீ­வாவில் கொடுத்த வாக்­கு­று­தியில் இருந்து பின்­வாங்­க­வில்லை என்றும், அதனை நிறை­வேற்­று­வ­தற்கு கால­அ­வ­கா­சத்­தையே கோரு­வ­தா­கவும் மங்­கள சம­ர­வீர கூறி­யி­ருக்­கிறார்.

அவ்­வா­றாயின், வெளி­நாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதி­ப­திகள், விசா­ர­ணை­யா­ளர்கள், வழக்­குத்­தொ­டு­னர்­களை உள்­ள­டக்­கிய விசா­ரணைப் பொறி­முறை ஒன்றை அமைப்­ப­தற்கு இணக்கம் தெரி­வித்து விட்டு அதி­லி­ருந்து இப்­போது பின்­வாங்­கி­யுள்­ளது மாத்­திரம் குத்­துக்­க­ரணம் இல்­லையா? வெளி­நாட்டு நீதி­ப­தி­களை விசா­ரணைப் பொறி­மு­றையில் உள்­ள­டக்­கு­வ­தாயின், நாட்டின் சட்­டத்­தையே மாற்ற வேண்­டி­யி­ருக்கும் என்று மங்­கள சம­ர­வீர கூறி­யி­ருக்­கிறார். 

ஜெனீ­வாவில், 2015ஆம் ஆண்டு இணக்கம் தெரி­வித்த போதே, இலங்­கையின் சட்­டத்தில் இதற்கு இட­மில்லை என்­பது தெரிந்த விடயம் தான். ஆனாலும் அப்­போது அர­சாங்கம் அதற்கு இணங்­கி­யி­ருந்­தது. கலப்பு விசா­ர­ணைக்கு சட்­டத்தில் இட­மில்லை என்று அப்­போது அர­சாங்கம் கூற­வில்லை. காரணம், இதனை இழுத்­த­டிக்கப் போட்­டி­ருந்த திட்டம் தான். 

போர்க்­குற்­றங்கள் குறித்த விசா­ர­ணைக்குக் கூட நாட்டின் சட்­டத்தில் திருத்­தங்கள் செய்­யப்­பட வேண்டும். ஏனென்றால் இலங்­கையில் குற்­ற­வியல் சட்­டங்கள் தான் இருக்­கின்­ற­னவே தவிர போர்க்­குற்­றங்­களை விசா­ரிக்கும் சட்­டங்கள் கிடை­யாது.

அத்­த­கைய சட்­டங்­களைத் தயா­ரிப்­ப­தற்­கான முயற்­சிகள் கூட இந்த ஒன்­றரை ஆண்­டு­களில் எடுக்­கப்­ப­ட­வில்லை. ஜெனீவா தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­த­வ­தற்கு கால­அ­வ­காசம் தேவை என்றே வெளி­வி­வ­கார அமைச்சர் கூறி­யி­ருக்­கிறார். வரும் 27ஆம் திகதி ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் உரை­யாற்றும் போதும், அவர் அத­னையே வலி­யு­றுத்­த­வி­ருக்­கிறார். 

தற்­போ­தைய அர­சாங்கம் பத­விக்கு வந்த காலத்தில் இருந்து இதையே தான் செய்து கொண்­டி­ருக்­கி­றது. 2015 மார்ச் மாதம், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் கூட்­டத்­தொ­டரில், ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் விசா­ரணை அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருந்த போதும், உள்­நாட்டு விசா­ரணை பொறி­மு­றையை ஆரம்­பிக்கப் போகிறோம், கால­அ­வ­காசம் தாருங்கள் என்று தான் கோரியது. அதற்குப் பின்னர், 2015 செப்டெம்பர் கூட்டத்தொடருக்குள்ளாகவே நம்பகமான விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படும் என்று கூறி அதனையும் நடைமுறைப்படுத்தவில்லை. 

2015ஆம் ஆண்டு கொடுத்திருந்த வாக்குறுதியையும், இதுவரையில் நிறைவேற்றாத நிலையில் தான் மீண்டும் காலஅவகாசம் கோருகிறது. பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குவதற்கு அரசாங்கம் தவறி வருகின்ற நிலையில், மீண்டும் மீண்டும் காலஅவகாசம் கோருவது ஒரு வழக்கமாகவே மாறியிருக்கிறது. 

தெளிவான காலக்கெடு ஒன்றைக் கொடுத்து, கொடுக்கப்பட்ட வாக்குறுதியை எந்தப் பிசிறுமின்றி நிறைவேற்ற வேண்டும் என்ற கண்டிப்பான தீர்மானம் ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றாத வரையில், இலங்கை அரசாங்கம் காலஅவகாசம் கோரியே காலத்தை விரயமாக்கப் போகிறது. இந்தக் காலஅவகாசம் கோரல் என்பது அரசாங்கத்தின் ஒரு தந்திரம். அந்த தந்திரத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்தின் நெகிழ்வுத்தன்மையே முக்கிய காரணம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-02-12#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.