Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டசபை காவலராக மாறுவேடத்தில் வந்த அம்பத்தூர் துணை கமிஷனர்?

Featured Replies

 
 
 
 
 
 
 
 
 
 
 
Tamil_News_large_1713509_318_219.jpg
 

 

 

 

சென்னை: சட்டசபையில் இன்று (பிப்.,18) நடந்த களேபரத்தில் அம்பத்துார் போலீஸ் துணை கமிஷனர் சுதாகர் சட்டசபை காவலராக மாறுவேடத்தில் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபையில் முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. ரகசிய ஓட்டெடுப்பு நடத்த கோரி தி.மு.க, எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர். எதிர்கட்சியினரின் கோரிக்கையை ஏற்க சபாநாயகர் தனபால் மறுத்துவிட்டார்.

இதை கண்டித்து தி.மு.க., எம்.எல்.ஏ.,கள் சபாநாயகரை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால், கடுப்பான சபாநாயகர் சட்டசபை காவலர்கள் மூலம் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை குண்டு கட்டாக வெளியேற்ற உத்தரவிட்டார்.

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சட்டசபை காவலர்களால் சட்டை கிழிக்கப்பட்ட நிலையில் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டார். தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், சட்டசபை காவலர்களாக போலீஸ் அதிகாரிகள் மாறுவேடத்தில் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்பத்துார் போலீஸ் துணை கமிஷனர் சுதாகர் சட்டசபை காவலராக மாறுவேடத்தில் வந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1713509

  • தொடங்கியவர்

சட்டசபை காவலர்களாக மாறிய காவல்துறை உயர் அதிகாரிகள்!

letter

தமிழக சட்டப் பேரவையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி தி.மு.கவினர் கோஷங்களை எழுப்பி சபாநாயகரை முற்றுகையிட்டனர். இந்தப் படலத்தின்போது காவல்துறை உயர் அதிகாரிகள் சிலர் அவைக் காவலர்களின் வெள்ளைச் சீருடையில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

சட்டப் பேரவைச் செயலாளர் ஜமாலுதீன், சபையில் நிலவிய அசாதாரண சூழலை கையாள காவல்துறை உயர் அதிகாரிகள் சிலரை, அவைக்காவலர் உடையில் பங்கேற்கக்கோரி காவல்துறை ஆணையருக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. அக்கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கூடுதல் ஆணையர் ஶ்ரீதர், துணை ஆணையர் சுதாகர் உட்பட 9 உயர் அதிகாரிகளின் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

http://www.vikatan.com/news/tamilnadu/81296-police-higher-officials-entered-assembly-in-watch-and-ward-uniform.html

  • தொடங்கியவர்

திமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற 9 காவல் சிறப்பு அதிகாரிகளை நியமித்த பேரவை செயலர்

 

 
 
 
சட்டப் பேரவைக்குள் திமுக உறுப்பினர்களை அப்புறப்படுத்துவதற்காக வரவழைக்கப்பட்ட காவல் துணை ஆணையர் சுதாகர்.
சட்டப் பேரவைக்குள் திமுக உறுப்பினர்களை அப்புறப்படுத்துவதற்காக வரவழைக்கப்பட்ட காவல் துணை ஆணையர் சுதாகர்.
 
 

அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற 9 காவல் அதிகாரிகளை சட்டப் பேரவை செயலாளர் நியமித்து இருந்தார்.

சட்டப்பேரவை சிறப்பு கூட்டத் தொடர் நேற்று நடைபெற்றது. இதில், நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. முன்னதாக திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் 2 முறை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து திமுக உறுப்பினர் களை அவையில் இருந்து வெளியேற்றுவதற்காக 9 காவல் துறை அதிகாரிகளை சட்டப்பேரவை செயலர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் அழைத்தார்.

அதன்பேரில், கூடுதல் காவல் ஆணையர் சி.ஸ்ரீதர், இணை ஆணையர் சந்தோஷ் குமார், துணை ஆணையர் சுதாகர், உதவி ஆணையர்கள் ரவி, கோவிந்த ராஜ், சிவபாஸ்கர், முத்தழகு, தேவராஜ் ஆகியோரை பேரவை காவலர்களுக்கான உடையில் வரும்படி அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, சில அதிகாரிகள் பேரவை காவலர்களுக்கான உடை அணிந்து பணி செய்தனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/திமுக-எம்எல்ஏக்களை-வெளியேற்ற-9-காவல்-சிறப்பு-அதிகாரிகளை-நியமித்த-பேரவை-செயலர்/article9550346.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.