Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்சியை கலைக்க அனைத்து காரணமும் உண்டு! மாஜி' சபாநாயகர் சேடபட்டி முத்தையா பேட்டி

Featured Replies

ஆட்சியை கலைக்க அனைத்து காரணமும் உண்டு! மாஜி' சபாநாயகர் சேடபட்டி முத்தையா பேட்டி

 
 
 
 
 
 
Tamil_News_large_1713659_318_219.jpg
 

 

 

''சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்திய முறை அனைத்தும், சட்டவிதிகளுக்கு முரணானது என்பதால், ஆட்சியை, 'டிஸ்மிஸ்' செய்ய, கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா தெரிவித்தார்.
கடந்த, 1988ல், சட்டசபையில் ஓட்டெடுப்பு நடந்து, ஆட்சி கலைக்கப்பட்ட போது, ஜெயலலிதா அணியில் இருந்தவர் முத்தையா. பின், அ.தி.மு.க., ஆட்சியில், 1991 - 96 வரை, சட்டசபை சபாநாயகராக பதவி வகித்தார்.
சட்டசபையில், நேற்று நடந்த சம்பவங்கள், ஓட்டெடுப்பு குறித்து, நமது நாளிதழுக்கு, அவர் அளித்த பேட்டி:
சட்டசபையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் விதிமீறல்களாகும். ரகசிய ஓட்டெடுப்பு அல்லது சபையை ஒத்திவைத்து, எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிக்கு சென்று வந்ததும், ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, நான்கு கட்சிகளும் கேட்ட நிலையில், அதை மறுக்க, சபாநாயகருக்கு
அதிகாரம் இல்லை.
கடந்த, 1988ல், நாங்கள் ஜெ., அணியில் இருந்த போது, நம்பிக்கை ஓட்டெடுப்பு கொண்டு வரப்பட்டது. அப்போது, உறுப்பினர்களை தகுதியிழப்பு செய்தும், எதிர்ப்பு எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றியும், ஓட்டெடுப்பு நடந்தது. அதில் நடந்த கலவரத்தில், போலீசார் சபையில் நுழைந்து அடித்தனர்; பலர் காயமுற்றோம். அரசின் ஓட்டெடுப்பு வெற்றி பெற்றது.
எதிரணியின், 94 எம்.எல்.ஏ.,க்கள் காயங்களுடன், ராஜ்பவனுக்கு சென்று, கவர்னரை சந்தித்து முறையிட்டோம். எங்கள் காயத்திற்கு அங்கேயே, சிகிச்சை தரப்பட்டது. இந்த
அசாதாரண சூழலில் நடந்த ஓட்டெடுப்பு செல்லாது என, கவர்னர் உடனடியாக, பரிந்துரை கடிதம் அனுப்பினார். இரண்டே நாட்களில், ஜனாதிபதி ஆட்சி அமலானது.
அதைவிட மோசமான நிலை, தற்போது ஏற்பட்டுள்ளது. சபையில் சபாநாயகர் இல்லாத போது, போலீசார், அதாவது வெள்ளை நிற சீருடை அணிந்தவர்கள், சபைக்குள் வரக்கூடாது. ஆனால், நேற்று சபாநாயகர் அவரது அறையில் இருந்த போது, போலீசார் சட்டசபைக்குள் நுழைந்தது தவறான செயல்.
உறுப்பினர்களின் பெயரை, சபாநாயகர் சொன்னால் மட்டுமே, அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும். ஆனால், நேற்று யார் பெயரையும் சபாநாயகர் சொல்லாமல், ஒட்டுமொத்தமாக வெளியேற்றியதும் தவறானது. இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையே, ஓட்டெடுப்பு நடத்தியது, நிச்சயமாக செல்லாது.
பல மாநிலங்களில், ரகசிய ஓட்டெடுப்பு நடந்துள்ளது. அதை பல நீதிமன்ற தீர்ப்புகளும்
உறுதிப்படுத்துகின்றன. பிரபலமான, எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்பின்படி பார்த்தால், வெளிப்படையான, நியாயமான ஓட்டெடுப்பு நடத்தினால் தான் செல்லும்.
கூவத்துார் விடுதியில், எம்.எல்.ஏ.,க்கள் எப்படி கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டனரோ, அதேபோல் தான் சட்டசபையிலும் வைக்கப்பட்டனர்.
இதற்கு, சட்டசபைக்கு ஏன், அவர்களை அழைத்து வர வேண்டும். சபாநாயகர், நேராக கூவத்துார் விடுதிக்கு சென்று, ஓட்டெடுப்பு நடத்தியிருக்கலாம். அருணாசல பிரதேசத்தில், இதுபோன்ற சம்பவம் நடந்து,
விவாதமானது.இவ்வாறு அவர் கூறினார்.
இரண்டு தீர்மானங்கள்!

சேடபட்டி முத்தையா கூறியதாவது: சட்டசபை கூடியதும், முதலில் காலை, 11:00 மணிக்கு, ஓட்டெடுப்பு நடத்தும் தீர்மானத்தை, முதல்வர் முன்மொழிந்தார். ஆனால், சபை ஒத்திவைக்கப்பட்ட பின், மீண்டும் வந்து, அவர் முன்மொழிந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர், இரண்டு முறை முன்மொழிந்தார் என்றால், சபை விதிப்படி, அந்த தீர்மானம் நிச்சயமாக செல்லாது. எனவே, ஓட்டெடுப்பும் செல்லாது.
இதுகுறித்து, சபை நடவடிக்கை குறித்து, பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை, சபையிலுள்ள கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், கவர்னர் ஆய்வு செய்ய வேண்டும். இரண்டு முறை முன்மொழிந்தது உண்மை என்றால், அந்த தீர்மானத்தை ரத்து செய்து, நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது என. அறிவிக்க வேண்டும்.

சபாநாயகருக்கு அதிகாரமும் இல்லை!
சேடபட்டி முத்தையா கூறியதாவது: சபாநாயகர் தனபால், உறுப்பினர்களின் கோரிக்கையை நிராகரித்து, சபையை நடத்துவது குறித்த முடிவு எடுப்பது, தன்னுடைய
அதிகாரம், உரிமை என, கூறியுள்ளார்; இது தவறான கருத்து. சபாநாயகருக்கு என, தனியாக எந்த அதிகாரமும் கிடையாது. சபாநாயகருக்கு,
உறுப்பினர்கள் தான் அதிகாரம் அளிக்கின்றனர். மக்கள் பிரதிநிதிகளான, எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கைப்படியே சபாநாயகர், சபையை நடத்த வேண்டும். அதனால் தான், சபையில் சபாநாயகர் பேசும் போது, 'உறுப்பினர்களின் முன் அனுமதியுடன்' என்ற வார்த்தையை பயன்படுத்துவர். எனவே, சபாநாயகர், நேற்று சபையை நடத்திய விதம் விதி
மீறலாகும்.சபாநாயகருக்கு உண்மையில் அதிகாரம் இருக்கிறது என்றால், எம்.எல்.ஏ.,க்கள், கூவத்துார் விடுதியில் அடைக்கப்பட்டிருந்த போது, அங்கு சென்று, அவர்களை மீட்டிருக்க வேண்டும். நான் சபாநாயகராக இருந்த போது, எம்.எல்.ஏ., விடுதியில் தங்கியிருந்த ரகுமான்கானை, தாமரைக்கனி தாக்கி விட்டதாக புகார் வந்தது. தாமரைக்கனியை, இரண்டு மாதம், 'சஸ்பெண்ட்' செய்து, ரகுமான்கானுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டேன், என்றார்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1713659

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.