Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்சியை இழந்தார்; தலைவராக உயர்ந்தார் சசி எதிர்ப்பால் பன்னீருக்கு கிடைத்த பலன்

Featured Replies

 

 

 

 
Tamil_News_large_1713474_318_219.jpg
 
ஆட்சியை இழந்தார்; தலைவராக உயர்ந்தார் சசி எதிர்ப்பால் பன்னீருக்கு கிடைத்த பலன்

 

 

 

எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக, புதிய அரசியல் தலைவராக, பன்னீர்செல்வம் உருவெடுத்துள்ளார்.
கடந்த, 2001ல், 'டான்சி' வழக்கு தொடர்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பதவியை ராஜினாமா செய்த நிலையில், தமிழகத்தின் முதல்வராக, ஓ.பன்னீர்செல்வம் அறிமுகப்படுத்தப்பட்டார்.
அப்போது முதல், அவ்வப்போது பிரச்னைகள் ஏற்பட்ட போதெல்லாம், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தற்காலிக முதல்வராக, பன்னீர்செல்வம் பதவி வகித்து வந்தார். இறுதியில், ஜெயலலிதா மறைந்த பின்பும், பன்னீர்செல்வமே முதல்வரானார்.
இந்நிலையில் அவரை, போயஸ் கார்டன் என்ற மர்ம மாளிகைக்கு அழைத்து மிரட்டி, அவரிடம் சசிகலா குடும்பத்தினர் ராஜினாமா கடிதம் பெற்றனர்.
இதையடுத்து, தன், 15 ஆண்டு பணியின் அழுத்தத்தை, எண்ணத்தை, அடக்குமுறை அனுபவத்தை, ஜெயலலிதா சமாதியில், 40 நிமிடங்கள் தியானமிருந்து, உலகிற்கு போட்டு உடைத்தார்
பன்னீர்செல்வம்.

இதையடுத்து, சசிகலாவா, பன்னீர்செல்வமா என்ற போராட்டம் வெடித்தது. இதில், பன்னீர்செல்வத்திற்கு மக்கள் ஆதரவு பெருகியதை பார்த்ததும், சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு முன், முதல்வராக, அரியணையில் ஏறி விட, சசிகலா துடித்தார்.
பொது மக்களின் முழு எதிர்ப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றை, கருத்தில் கொண்டு, கவர்னர் வேகமான முடிவு எடுக்காமல், விவேகமாக காய்
நகர்த்தினார். அதன் விளைவாக, முதல்வர் நாற்காலியில் அமர முடியாமலேயே, சசிகலா சிறைக்கு செல்ல வேண்டியதாகி விட்டது.இந்த யுத்தத்தில், அனைத்து மக்களும், ஊடகங்களும், நடுநிலையாளர்களும் அளித்த ஆதரவின் படி, மிகப்பெரிய தலைவராக, பன்னீர்செல்வம் உயர்ந்துள்ளார்.
அதாவது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பின், பெரும்பாலான மக்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்களின் ஒட்டுமொத்த ஆதரவு பெற்ற தலைவராக, ஓ.பி.எஸ்., உருவாகியுள்ளார்.
இனி, தமிழக அரசியல், அவரையும், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினையும் சுற்றியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு, ஓ.பி.எஸ்., என்ற
மூன்றெழுத்து, முக்கிய அரசியல், 'பிராண்டாக' மாறியுள்ளது. - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1713474

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.