Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்! கவர்னரிடம் பன்னீர் வலியுறுத்தல்

Featured Replies

மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்!
கவர்னரிடம் பன்னீர் வலியுறுத்தல்
 

 

  • gallerye_23325150_1714084.jpg

 

 
 

'சட்டசபையில், நேற்று முன்தினம் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பை ரத்து செய்ய வேண்டும்; மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்' என, கவர்னர் வித்யாசாகர் ராவிடம், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், தி.முக., செயல் தலைவர் ஸ்டாலினின் பிரதிநிதி களும், அடுத்தடுத்து சந்தித்து வலியுறுத்தினர்.

 

Tamil_News_large_171408420170219230709_318_219.jpg

முதல்வராக பதவியேற்ற, இடைப்பாடி பழனி சாமி, நேற்று முன்தினம், சட்டசபையில் நம்பிக்கை ஓட்டு கோரினார். ரகசிய ஓட்டெடுப்பு என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை; சபையில் ரகளை நடந்தது. பிரதான எதிர்க்கட்சியான, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டனர். பின், ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு, பழனிசாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அவரது அணி நிர்வாகிகள், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை நேற்று சந்தித்தனர். அப்போது, 'சட்டசபையில் மீண்டும்

நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்' என, வலியுறுத்தினர்.
 

இதுகுறித்து, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:


சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான ஓட்டெடுப்பின் போது நடந்த முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் குறித்து கவர்னரிடம் கூறினோம். எம்.எல்.ஏ.,க்கள், ஒரு வாரம் தொகுதிக்கு சென்று வர அனுமதிக்க வேண்டும்; அதன் பின், ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, விரிவான மனுவை அளித்தோம்.

பரிசீலித்து நல்ல முடிவுஎடுப்பதாக அவர் கூறினார். நல்ல முடிவை எடுப்பார் என, நம்புகிறோம். ஓட்டெடுப்பில் நடந்த முறைகேடுகள் குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
 

தி.மு.க., கோரிக்கை


இதை தொடர்ந்து, தி.மு.க., - ராஜ்யசபா எம்.பி.,க்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். அவரிடம், செயல் தலைவர் ஸ்டாலின் சார்பில் மனு ஒன்றை அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:

சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரும் போது சபை ஒத்திவைக்கப்பட்டால், தீர்மானத்தை கைவிட வேண்டும். அந்த விதியை, சபாநாயகர் புறக்கணித்து விட்டார். வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டும்,

 

வெளிநடப்பு செய்தும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க் கள் வெளியில் இருந்தனர்.

அப்போது, அவசர கோலத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை தீர்மானம், வெளிப்படை யானஓட்டெடுப்பின் மூலம் நிறைவேற்றப் பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரின் இந்த செயல், ஜனநாயக விரோதம். எதிர்க்கட்சி கள் இன்றி ஓட்டெடுப்பு நடத்தியது நியாயமற்றது; சட்ட விரோதம்.

சபாநாயகர், நடுநிலை தவறி, ஆளுங்கட்சியின் ஒரு பிரிவுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். இது போன்ற சூழலில், 1988ல், அப்போதைய கவர்னர், நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது என, அறிவித்தார். எனவே, ஜனநாயத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்கும் வகையில் உரிய நீதி வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

வழக்கறிஞர்களுடன்அவசர ஆலோசனை


தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், நேற்று கட்சி வக்கீல்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பின், அவர் கூறிய தாவது: போலீஸ் அதிகாரிகளை, சட்டசபைக் குள் அழைத்து, எங்கள் மீது தாக்குதல் நடத்தி னர். அதில், ரவிச்சந்திரன் எம்.எல்.ஏ., மயக்க மடைந்து பேச்சு, மூச்சு இன்றி, மருத்துவமனை யில் உள்ளார். பல எம்.எல்.ஏ.,க்களுக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளது.

என் சட்டை கிழிந்து, தோள் பட்டையில் அடி பட்டதற்கு, மருத்துவமனை சென்று, 'ஸ்கேன்' எடுக்க உள்ளேன். சட்டபையில் நடந்த சம்பவங் களை, ஜனாதிபதியை சந்தித்து வலியுறுத்து வோம்.சட்ட ரீதியாக, கோர்ட்டில் வழக்கு தொடுக்க ஆலோசனை நடத்தினோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1714084

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.