Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுளாகும் கதாநாயகர்கள்

Featured Replies

அஜித் அவதாரமாயிட்டார்னு ஊரெல்லாம் பேச்சு. நல்ல மனுஷனாச்சே எப்படி இந்த மாதிரி கெட்டுப் போனார்னு ஓடிப்போய் அடிச்சுப் பிடிச்சு ஆழ்வார் படத்துக்கு டிக்கெட் வாங்கி உள்ளப் போனா... ஏண்டா வந்தோம்னு ஆகிப் போச்சு. என்ன வெவகாரம்னுதானே கேட்கிறீங்க? கொஞ்சம் விலாவரியா சொல்ல வேண்டிய சமாச்சாரம் இது.

ஆழ்வார்ல அஜித்துக்கு 'களை' பிடுங்கிற வேலை. அதாவது சமுதாயத்துல களையா இருக்கிற ரவுடிகளை போட்டுத் தள்றது. அதுவும், ராமர் கிருஷ்ணர்னு விஷ்ணுவோட அவதார மேக்கப் போட்டு சைக்கிள்ல காத்து பிடுங்கிற மாதிரி ஆயுசை பிடுங்கிடறார்.

அஜித்தை இப்படி எமதர்மனா மாத்துனதுக்கு இயக்குனர் ஷெல்லா அழகா ஒரு கதை சொல்றார்.

கதாகாலேட்சபம் பண்ற சாது ஒருதரம் தெரியாதத்தனமா, எல்லா பயப்புள்ளைகளும் கடவுள்தான்டானு சொல்லிடறார். ஆடியன்சோட கெட்ட நேரம். அம்பி அஜித் இதை கேட்டுடறார். உடனே சாதுகிட்ட, அப்பிடினா நானும் கடவுளா சாமிங்கிறார். அவரும் சளைக்காம, 'நாலு பேருக்கு நல்லது பண்ணேள்னா அவா யாரை கடவுள்னு சொல்வா? நல்லது பண்றவாளதானே! அப்போ நல்லது பண்றவா எல்லாம் பகவானோட அவதாரம்தான்னு ஒரே போடா போடறார். அஜித்தோட அம்மாவும், ஆமாண்டா... பெருமாள் கொடுத்த புள்ளடா நீன்னு ஏத்திவிட, அஜித்தோட மண்டையில அவதார மேட்டர் பிக்ஸாயிடுது. அடுத்த சீன்லயே சொல்லி வச்ச மாதிரி வில்லன்கள் அம்மா, தங்கச்சினு போட்டுத் தள்ள, நம்ம அம்பி அஜித் கடவுளா அவதாரம் எடுத்து கெட்டவங்களோட உயிரை எடுக்கிறாரு.

அது என்னங்கய்யா... கடவுள்னாலே ரத்தம் வருது? அடுத்தவனையும் உன்னை மாதிரி லவ் பண்ணுனு சொன்னவரோட விசுவாசிங்க சிலுவைப் போர்னு சொல்லி ஆயிரக்கணக்கில் மனுஷங்களை கொன்னு குமிச்சாங்க. அஞ்சு நேரம் தொழுறவங்களோட புனித போர் பத்தி சொல்லவே வேண்டாம். அன்பே சிவம் பார்ட்டிங்க குஜராத்துல ஆடுன தாண்டவத்துல உதிர்ந்த உசிரு ஆயிரக்கணக்குல! மண்ணுக்கு பெண்ணுக்கு பொன்னுக்கு இந்த பூமியில உருண்ட தலைகளைவிட கடவுள் பெயரால உருண்ட தலைகள் ரொம்ப அதிகம்! இப்போ என்னடான்னா சினிமாவுக்குள்ளேயும் நுழைஞ்சிருக்கு இந்த சீரழிவு.

'நந்தா' ங்கிற படத்துலயும் வருது இப்படியொரு அவதார சீனு. தப்பை தட்டி கேட்க அவனா (பகவான்) வருவான்? நாமதான் கேட்கணும். நீயும் நானும்தான் அவதாரம்னு ஃபுல் மப்புல ராஜ்கிரண் சுலோகம் சொல்லி உசுப்பேத்த வரிசையா உசிரெடுக்கிறார் சூர்யா.

இதுல ஷங்கர் ரொம்ப ஹைடெக் ஆளு. பாட்டிகிட்ட கருட புராண கதை கேட்கிற அம்பி, கடைசியில கருட புராணத்தையே கோனார் கைடாக்கி (பப்ளிஷர் சுஜாதா) எச்சி துப்புறவன், குவார்ட்டர் அடிக்கிறவன்னு கண்ணுல படுறவனையெல்லாம் கண்டம் துண்டமாக்கிடுறாரு.

'ராம்' ல சாதாரணமா இருக்கிறப்போ சண்டைக்கு வர்றவங்கிட்ட சாதுவாப் போற ஹீரோ, நீ சாமி புள்ளடானு அம்மா அறிவிச்சதும் ஆக்ரோஷமாகி கேலி பேசுனவனை புரட்டு புரட்டுனு புரட்டி எடுக்கிறாரு.

இதெல்லாம் வச்சு பார்க்கிறப்போ கடவுள்னாலே உயிரை காவு வாங்குற பார்ட்டினு தப்பா புரிஞ்சு வச்சிருக்காங்களோனு நமக்கு டவுட்டா இருக்கு. இத்தனைக்கும் இந்த மாதிரி கடவுள் அவதாரம் எடுக்கிற ஹீரோக்களும் அவங்களுக்கு அவதார அரிதாரம் பூசிவிடுற இயக்குனர்களும் நிஜமாவே கடவுளை நம்புறவங்க. அதாவது ஆன்மிகவாதிங்க. தீவிரவாதிங்க உயிரையே எடுக்கக் கூடாதுனு ஒருபக்கம் மரணதண்டனைக்கு எதிரா போராட்டம் நடக்கிறப்போ, இவங்க என்னடான்னா கடவுள், அவதாரம்னு வர்றவன் போறவன் உயிரையெல்லாம் எடுக்கிறாங்க. இதுக்கு பேருதான் ஆன்மிகமா? இதுதான் கடவுள்ங்கிற கான்செப்டோட அர்த்தமா? ஆன்மிகம்ங்கிறது கெட்டதுன்னு சொல்றதை திருத்துறதா? இல்லை அழிக்கிறதா?

வடக்கு பக்கம் கடவுள்னு சொல்லாம காந்தினு சொல்லி ஒருத்தர் படமெடுத்தார். பெயரு 'லகே ரஹோ முன்னபாய்.' தாதாவா இருக்கிறவர் காந்தியை படிச்சு சாத்வீகமா மாறி காந்தீய வழியில பிரச்சனைகளுக்கு தீர்வு காணுறார். இந்த இடத்துல ஒரு சின்ன இடைச்செருகல். தாதா ஏன் காந்தியை படிக்கிறார்? ஏன்னா, தான் டாவடிக்கிற பொண்ணை கவர்ரதுக்கு! கருட புராண அம்பிகளும் காதலிகளை டாவடிக்கிறாங்க. எப்பிடி? முடியில கலர் அடிச்சு, காதல் யானை வருதுனு டான்ஸ் ஆடி, கூரையை பிரிச்சு நடு வீட்ல செடி வச்சு....

சரி, நம்ம மேட்டருக்கு வருவோம். தாதா ஒருத்தர் காந்தியை படிச்சு காந்தியோட சாத்வீகமான முறையில பிரச்சனைகளை தீர்க்கிறார். காந்திக்கே இவ்ளோ பவர்னா, ஆன்மிகவாதிங்க நீங்க நம்புற கடவுளுக்கு எவ்வளவோ பவர் இருக்கணும்? அதை வச்சு ஆளை கொல்லாம நாட்டை திருத்தலாமே?

கெட்டவன் திருந்துறதெல்லாம் பிலிம்ல, நிஜத்துல எங்க நடக்குதுனு தானே கேட்குறீங்க? நீங்க காட்ற கடவுள் அவதாரம், கருடபுராண புருடா மட்டும் உண்மையாக்கும்? சரி, அதை விடுவோம். 'லகே ரஹோ முன்னாபாய்' பார்த்து அதேமாதிரி அகிம்சை வழியில போராடி பல இடங்களில் மக்கள் தங்களோட பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருக்காங்க. இது நடந்த உண்மை. கடவுளா அவதாரம் எடுக்கிற உங்க படத்தால ஒரு காக்கா குருவிக்கு பிரயோஜனம் உண்டா? ஒரு மாற்றம் நடந்ததுண்டா? இல்ல, கெட்டவன்னு சொல்றவனையெல்லாம் பொட்டு பொட்டுனு கொல்ற உங்க ஆன்மிக திருப்பணியை நடைமுறைபடுத்ததான் முடியுமா?

முடியாதுன்னா, எது ஆன்மிகம் எது கடவுள்னு ஒக்காந்து யோசிங்க. ஓஷோ, ஜென், வள்ளலார் எல்லாம் படிச்சுப் பாருங்க.

அப்புறம், கடவுள் இல்லைனு கொஞ்சநாள் முன்னாடி ஒருத்தர் படம் எடுத்தார். படத்தோட பேரு 'அன்பே சிவம்.' கடவுளே இல்லைங்கிற அவர், ஆழ்வார் கதாகாலேட்சப சாது மாதிரி, நல்லது செய்றவங்க எல்லாருமே கடவுள்னு சொன்னார். அதை கேட்டு எந்த அம்பியும் அரிவாளை எடுத்து அடுத்தவனை வெட்டலை. எடுத்த அரிவாளை கீழப் போட்டு தப்புக்கு மன்னிப்பு கேட்டான். அப்படி மன்னிப்பு கேட்டவனை, "தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதால நீயே இப்போ ஒரு கடவுள்தான்" னு கெட்டவனையே திருத்தி கடவுளாக்கினான் அந்த 'அன்பே சிவம்' நாத்திகன்.

அதே மாதிரி சீமானோட 'தம்பி' தனது குடும்பத்தை அழிச்சவங்களை அடிச்சு திருத்துறானே தவிர ஆளையே அழிக்கலை.

இப்படி கடவுள் இல்லைங்கிறவனும், காந்தி மாதிரி மனுஷங்களும், நம்ம தம்பிக்களும் கெட்டவனை திருத்துறப்ப, ஆன்மிக அம்பிகளையெல்லாம் கடவுள் பெயரைச் சொல்லி கடப்பாரையை தூக்க வைக்கிறேளே, நியாயமா? இதுதான் உங்க ஆன்மிக வெளிப்பாடா?

கடவுள் இருக்கிறாரா இல்லையாங்கிறது நம்ம விஷமில்லை. மனுஷன் கடவுளா மாறுவானாங்கிறதும விஷயமில்ல. சினிமாவே ஒரு உடான்ஸ்... இதுல இப்பிடி ஒப்பாரி வைக்கணுமாங்கிற உங்க கேள்வியும் விஷயமில்ல. எடுக்கிற உடான்சுல கொஞ்சம் ரத்தத்தை கம்மி பண்ணிக்கலாமேங்கிறதுதான் நம்ம தாழ்மையான வேண்டுகோள். கடவுளை இப்பிடி உயிரை எடுக்கிற அரிவாளா மாத்தாதிங்கங்கிறதுதான் நம்ம பணிவான கோரிக்கை!

:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உமக்கும் உம்மைப்போல் (நிறையப் பேர்) உள்ளவர்களிற்கும் சினிமாவிற்கும் யதார்த்த வாழ்க்கைக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்று விழங்குகிறது.

:angry: :P தாங்கள் அதை பக்குவமாக புரிய வைக்கலாம் தானே வடிவேலு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10பேர் நிண்டு ஒருத்தனை சுடுவாங்கள். ஆனா அவனுக்கு ஒரு குண்டு படாமல் அந்த பத்து பேரையும் அடிச்சு நெருக்கிடுவான்.

இதை ஒரு சராசரி மனிதன் தனது வாழ்க்கையில் செய்து பார்க்க நினைக்கவே மாட்டான். இது நான் சொல்லி தான் புரியவேண்டும் என்பதல்ல.

இதே போல் தான் சினிமாவில் வருகின்ற ஏனைய விடயங்களும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.