Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா, சசிகலா இல்லாத போயஸ் கார்டன் எப்படி இருக்கிறது? #VikatanExclusive

Featured Replies

ஜெயலலிதா, சசிகலா இல்லாத போயஸ் கார்டன் எப்படி இருக்கிறது? #VikatanExclusive

veda2_11162.jpg

ஜெயலலிதா, சசிகலா இல்லாத போயஸ் கார்டன் வேதா நிலையத்தில், இரவில் மயான அமைதி நிலவுகிறது. பகலில் மட்டும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் வருவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. 

 சென்னை போயஸ் கார்டன் என்றதும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 81, வேதா நிலையம் நினைவுக்கு வரும். ஏனெனில் அந்தளவுக்கு அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். ஜெயலலிதா, வீட்டிலிருந்து தலைமை செயலகம் அல்லது வெளியூர் செல்ல புறப்பட்டால், அந்தப் பகுதியில் காக்கிகள் அணிவகுத்து நிறுத்தப்படுவர். ஜெயலலிதாவின் இசட் பிளஸ் பாதுகாப்போடு செல்லும் கான்வாயில், அவரது காரைப் பார்த்துக் கும்பிட கட்சியினர் கூட்டமும் அதிகளவில் காணப்படும். இதனால், ஜெயலலிதா வீடு அமைந்துள்ள பகுதியில் போலீஸ் கெடுபிடிகளுக்குப் பஞ்சமிருக்காது. 
 
 ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலா, இளவரசி மற்றும் பணிப் பெண்கள் தங்கி இருந்தனர். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு சசிகலாவும், இளவரசி, பணிப்பெண்கள் தங்கி இருந்தனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வேதா நிலையத்தைப் பார்க்க, பொது மக்களும், கட்சியினரும் குவிந்தனர். அவர்களை  சசிகலா சந்தித்தார். இதையடுத்து சசிகலா, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவைச் சந்தித்து ஆலோசனை நடத்திவந்தார். அதுபோல கட்சியின் மூத்த நிர்வாகிகளும், முக்கிய அமைச்சர்களும் சசிகலாவைச் சந்தித்தனர்.

ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியின்போது சசிகலாவின் உறவினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அவர்களில் டி.டி.வி. தினகரனும், வெங்கடேஷும்  சசிகலாவுக்கு உறுதுணையாக இருந்தனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலா, சட்டசபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து, ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், அதற்குள் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானது. தீர்ப்பில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று தெரிவிக்கப்பட்டதுடன் அவர்கள் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். 

veda1_11339.jpg


 ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூவரும் தற்போது வேதா நிலையத்தில் இல்லை. ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் அறைகள் பூட்டப்பட்டுள்ளன.  தற்போது அந்த வீடு, டி.டி.வி.தினகரன், வெங்கடேஷ் ஆகியோரின் மேற்பார்வையில் இருப்பதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. இரவில், அந்த வீட்டில் யாரும் தங்குவதில்லையாம். இதனால், அங்கு மயான அமைதி நிலவுகிறது. தனியார் காவலாளிகள் மற்றும் பின்னி சாலையில் சில காக்கிகள் மட்டும் பாதுகாப்புப் பணியில் இருக்கின்றனர். ஜெயலலிதாவின் அறை, முதல் மாடியில் இருந்தது. ஜெயலலிதா சந்திக்க விரும்பும் நபர்கள் மட்டும் வீட்டுக்குள் அனுமதிக்கப்படுவர். அவர்களும் தரைத்தளத்திலேயே நிறுத்தப்பட்டுவிடுவர். வீட்டுக்கு வருபவர்களுக்கு டீ, காபி, குளிர்பானங்கள் கொடுக்க தரைத்தளத்தில் ஒரு சமையலறை உள்ளது. அதுபோல ஜெயலலிதாவின் அறையின் அருகிலும் சமையலறை உள்ளது. அங்கிருந்தே அவர்களுக்குத் தேவையான உணவுகள் தயாரிக்கப்படும். இதுபோல சசிகலாவின் அறையும் ஜெயலலிதா அறையின் அருகில் அமைந்துள்ளது.

பரபரப்பாகக் காணப்பட்ட வேதா நிலையம் இன்றும் முழுப் பாதுகாப்போடுதான் செயல்படுகிறது. சசிகலாவால் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்டேஷ் ஆகியோர் பகலில் வருகின்றனர். தரைத்தளத்தில் அமர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகும் கார்டனில் ஆலோசனை நடத்தப்பட்டது. சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, கார்டனுக்கு வரும் கட்சியினரின் கூட்டம் குறைந்துவிட்டது. தினகரன், வெங்கடேஷ் ஆகிய இருவரில் யாராவது ஒருவர் கார்டனில் இருந்தால், முக்கியமான நபர்கள் மட்டும் அங்கு வருகின்றனர். இல்லையெனில் பாதுகாவலர்கள், பணிப்பெண்களைத் தவிர யாரும் இருப்பதில்லை. கார்டனுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டாலும், தனியார் செக்யூரிட்டிகள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடக்கின்றன. மீண்டும் சசிகலா அணியினரிடம் ஆட்சி அதிகாரம் வந்துள்ளதால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜெயலலிதா இறந்தபிறகு ஓரளவு குறைந்த கெடுபிடிகள், சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு முற்றிலும் குறைந்துவிட்டது.

ஜெயலலிதாவின் தனித்துவம், விடா முயற்சி, துணிச்சல் இன்னும் அந்த வீட்டுக்குள் இருப்பதாக கட்சியினர் கருதுகின்றனர். எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பொருட்கள், பொது மக்களின் பார்வைக்காக தி.நகர். எம்.ஜி.ஆர். இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதைப் போல ஜெயலலிதாவின் நினைவுகளைச் சுமந்த போயஸ் கார்டன் வேதா இல்லமும் நினைவு இல்லமாக மாற்றப்பட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கையெழுத்து இயக்கம் தொடங்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/coverstory/81571-how-is-poes-garden-now-without-jayalalithaa-and-sasikala--vikatanexclusive.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.