Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா மரண வழக்கில், அப்போலோ முக்கிய பதில் மனு தாக்கல்!

Featured Replies

 

ஜெயலலிதா மரண வழக்கில், அப்போலோ முக்கிய பதில் மனு தாக்கல்!

apollo-_jaya_12502.jpg

புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என ஜெயலலிதா கேட்டுக்கொண்டதால், அவரது படத்தை வெளியிடவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை பதில் மனு தாக்கல்செய்துள்ளது.

சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இரவு மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியும், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக அறிக்கை தாக்கல்செய்ய அப்போலோ மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்போலோ மருத்துவமனை சார்பில் அறிக்கைக்குப் பதிலாக பதில் மனு தாக்கல்செய்யப்பட்டது. அதில், எம்சிஐ விதிகளின்படி, நோயாளிகுறித்த விவரங்களை வெளியிடவில்லை என்றும், புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என ஜெயலலிதா கோரினார் என்றும், சிகிச்சை விவரங்கள் வேண்டும் என நீதிமன்றம் விரும்பினால், தரத் தயார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதையே தமிழக அரசும் பதில் மனுவில் தெரிவித்துள்ளது என்று கூறினார். இதையடுத்து, வழக்கு விசாரணையை மார்ச் 13-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

http://www.vikatan.com/news/tamilnadu/81760-apollo-hospitals-file-plea-in-jayalalithaa-death-case.html

  • தொடங்கியவர்
புகைப்படம் வெளியிட ஜெ., விரும்பவில்லை:
ஐகோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை பதில்
 
 
 

சென்னை:'என் புகைப்படங்களை வெளியிடக் கூடாது' என, மறைந்த முதல்வர் ஜெய
லலிதா விருப்பம் தெரிவித்திருந்ததாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், பதில் மனு தாக்கல் செய்துஉள்ளது.

 

Tamil_News_large_171705920170223230630_318_219.jpg

சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க., உறுப்பினர் ஜோசப் தாக்கல் செய்த மனு:
உடல்நலக் குறைவால், 2016 செப்., 22ல், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா சேர்க்கப்பட்டார். 75 நாட்களுக்கு பின், டிச., 5ல் அவர் இறந்தார். ஜெ., மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்து, விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

மனு, நீதிபதி வைத்தியநாதன் அடங்கிய, 'டிவி ஷன் பெஞ்ச்' முன், ஏற்கனவே விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதி பதிகள், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கும் படி உத்தரவிட்டிருந்தனர்.
 

அவகாசம்


இந்நிலையில், இவ்வழக்கு, தற்காலிக தலைமை நீதிபதி ரமேஷ் ஹுலுவாடி, நீதிபதி மகாதேவன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பிலும், அப்பல்லோ மருத்துவமனை சார்பிலும், பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.மத்திய அரசு சார்பில், மூத்த வழக்கறிஞர் மதனகோபால் ராவ், ''வழக்கில், பிரதமர் மற்றும் அமைச்சர் களை தேவையின்றி சேர்த்துள்ளனர்; மத்திய

உள்துறை அமைச்சகமே போதுமானது; மற்ற வர்களை, வழக்கில் இருந்து நீக்க வேண்டும்; பதில் மனு தாக்கல் செய்ய, இரண்டு வாரம் அவகாசம் வேண்டும்,'' என்றார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜயன், ''பிரதமரின் கீழ் தான், அமைச்சர்கள் பணியாற்றுகின்றனர். அதனால், பிரதமரை வழக் கில் சேர்த்ததில் தவறில்லை,'' என்றார்.இதை யடுத்து, இரண்டு வாரம் அவகாசம் வழங்கி, விசாரணையை, மார்ச், 13க்கு முதல் பெஞ்ச் தள்ளிவைத்தது.

இதற்கிடையில், அப்பல்லோ மருத்துவமனை நிர் வாகம், தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறி யுள்ளதாவது:நோயாளிகளின் ரகசியத்தை பேண வேண்டிய பொறுப்பு, மருத்துவமனைக்கு உள்ளது. அரசு மற்றும் நீதிமன்றங்களின் உத்தரவு தவிர்த்து, ஒரு நோயாளியின் சம்மதம் இல்லாமல், அவர் தொடர்பான மருத்துவ தகவல்களை வெளியிட முடியாது.

மறைந்த முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை யில், இந்திய மருத்துவ கவுன்சில் நெறிமுறைகள், சர்வதேச இணை ஆணையத்தின் தரம் பின்பற்றப் பட்டது. ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர் பாக, மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அனைத்து தகவல்களும், அவரது விருப்பப்படியே நடந்தது. புகைப்படங்களை வெளியிடக் கூடாது என, ஜெயலலிதா விருப்பம் தெரிவித்திருந்தார்.
 

முன்னேற்றம் இல்லை


வதந்திகளை கட்டுப்படுத்தவும், பொது அமைதியை பேணவும், அரசு கேட்டுக் கொண்டதால் மட்டுமே, மருத்துவமனை சார்பில் தகவல் வெளியிடப் பட்டது. மருத்துவமனை டாக்டர்கள் மட்டுமின்றி, மத்திய அரசால் அனுப்பப்பட்ட, 'எய்ம்ஸ்'மருத்துவ மனை டாக்டர்கள் குழுவினரும், ஜெயலலிதாவை நன்கு கவனித்தனர். சர்வதேச நிபுணர்களும், ஈடுபடுத்தப்பட்டனர்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின், ஆரம்ப சிகிச்சையில் முன்னேற்றம் தெரிந்தது. தொடர்ந்து பரிசோதனை, சிகிச்சை என, சரியாக தான் சென்று கொண்டிருந்தது. திடீரென, டிச., 4ல் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக, சிகிச்சை அளிக்கப்பட்டும்,

 

தொடர்ந்து முன் னேற்றம் இல்லை. டிச., 5ல், உயிர் பிரிந்தது.

எங்கள் தரப்பில், தவறான, திசை திருப்பும் தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டால், மறைந்த முதல் வர் தொடர்பான, மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்கிறோம். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

அரசு தரப்பில், சுகாதாரத் துறை முதன்மை செயலர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சார்பில், அரசு பிளீடர் எம்.கே.சுப்ரமணியன் தாக்கல் செய்த பதில் மனு:

ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமை யில், விசாரணை ஆணையம் அமைக்க கோரி யிருப்பது தேவையற்றது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து, டாக்டர்கள் குழு தொடர் சிகிச்சை அளித்தது. லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலேவின் கருத்தும் பெறப்பட்டது.
 

மாரடைப்பு


உணவு சாப்பிடும் அளவுக்கு, அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடல்நிலை சீராக, முயற்சிகள் எடுக்கப்பட்டன. இருந்தும், டிச., 5 இரவு, 11:30க்கு மறைந்தார். இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி, நோயாளிகள் தொடர்பான தகவல்களை, டாக்டர்கள் வெளியிடக் கூடாது.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1717059

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.