Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“அவைக்குள் நுழைந்த ஐ.பி.எஸ்.கள்... இனி போலீஸ் வேலை பார்க்க முடியாது!”

Featured Replies

“அவைக்குள் நுழைந்த ஐ.பி.எஸ்.கள்... இனி போலீஸ் வேலை பார்க்க முடியாது!”

 

ம்பிக்கை வாக்கெடுப்பின்போது தி.மு.க எம்.எல்.ஏ-க்களை வெளியேற்றுவதற்காக, தமிழக சட்டசபைக்குள் அவைக் காவலர்களின் சீருடையில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் நுழைந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

‘தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்றுவதற்காக சபாநாயகர் தனபால் உத்தரவின் பேரில்,  ஒன்பது போலீஸ் அதிகாரிகளை தமிழக சட்டசபைக்குள் அவைக் காவலர்களின் சீருடையில் நுழைய அனுமதிக்கிறேன்’ என தமிழக சட்டமன்றச் செயலாளர் ஜமாலுதீன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு அனுப்பிய கடித நகல் வெளியானது. இதில், மாநகர போலீஸ் கூடுதல் கமிஷனர் ஸ்ரீதர், இணை கமிஷனர்களான சந்தோஷ்குமார், ஜோஷி நிர்மல்குமார், துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர்களான ரவி, கோவிந்தராஜ், சிவபாஸ்கர், முத்தழகு, தேவராஜ் ஆகிய ஒன்பது அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

p40b.jpg

சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் இந்த விவகாரம் குறித்து துணை கமிஷனர் சுதாகரிடம் கேட்டோம். ‘‘எனக்கு மேலே உள்ள அதிகாரிகளிடம் இதுகுறித்து நீங்கள் விளக்கம் கேட்பதே சிறந்தது’’ என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். கூடுதல் கமிஷனரான ஸ்ரீதர், ‘‘இதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை’’ என்பதோடு நிறுத்திக் கொண்டார்.

சட்டமன்றச் செயலாளர் ஜமாலுதீன், ‘சபாநாயகர் உத்தரவின்படி...’ என்று குறுஞ்செய்தி வழியாகப் பதில் அளித்தார்.

1991-96 வரையிலான ஐந்து ஆண்டுகள் தமிழக சபாநாயகராக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா. அவரிடம் இந்த விஷயம் குறித்துக் கேட்டோம்.

p40a.jpg

“இதுவரையில் இல்லாத விதிமீறலை தமிழக சட்டசபை கடந்த 18-ம் தேதிதான் சந்தித்துள்ளது. ‘எங்களுக்கு அவையைப் பாதுகாப்புடன் நடத்த இத்தனைக் காவல் அதிகாரிகள் வேண்டும்’ என்று அன்றே கேட்டு அன்றே வாங்கியுள்ளது மரபிலேயே இல்லாதது.

எனக்கு முன்னரோ, அதற்கும் முன்னரோ சபாநாயகர்களாக இருந்தவர்கள், சட்டசபை கூடும் தேதி அறிவிப்புக்கு முன்னரே, இத்தனை அவைக்காவலர்கள் வேண்டும்’ என்று சொல்லிவிடுவோம். சட்டமன்றக் கூட்டத்தொடர் முடியும் வரை, அவைக் காவலராகப் பணியாற்ற விருப்பம் தெரிவிக்கும் போலீஸாருக்கு உரிய வெள்ளைச் சீருடை, அளவு பார்த்துத் தைக்கப்படும். இவ்வளவு வேலை இருக்கிறது.

ஒரு சப் இன்ஸ்பெக்டர் சீருடையை ஐ.பி.எஸ் அதிகாரி சுதாகர் அணிவதுபோல் எல்லாம் யாரும் அவசரத்துக்கு அணிந்துகொள்ள முடியாது. யாராவது ஒரு சப் இன்ஸ்பெக்டரின் வெள்ளைச் சீருடையை சுதாகர் அணிவதற்கு வசதியாகக் கழற்றி இருக்க வேண்டும்... அல்லது முன்கூட்டியே சுதாகருக்கு வெள்ளைச் சீருடை தைத்துக் கொடுத்திருக்க வேண்டும். ஐ.பி.எஸ் அதிகாரிகளைப் பணிக்கு வரச்சொல்லி, சட்டசபைச் செயலாளர் மதியம் ஆர்டர் போட்டு, மதியமே வெள்ளைச் சீருடையைக் கொடுத்துவிட முடியாது. அதேபோல், ‘அவை பாதுகாப்புப் பணிக்கு இந்தக் காவலர்தான் வேண்டும்’ என்று குறிப்பிட்டும் கேட்க முடியாது.

p40.jpgசொல்லப்போனால், ஐ.பி.எஸ் அதிகாரிகளை, சபாநாயகரோ, சட்டமன்றச் செயலாளரோ கேட்டு வாங்க முடியாது. எப்போது அப்படிக் கேட்டு வாங்கினார்களோ, அந்த அதிகாரிகள் அதன்பிறகு தங்களது காவல் பணியில் தொடர முடியாது போய்விடும். மேலும், ‘போலீஸ் ஸ்டேண்டிங் ஆக்ட்’ படியும் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், எப்போது தன்னுடைய பதவிக்குப் பொருத்த மில்லாத, தகுதிக்குக் கீழான சீருடையை அணிந்து காவல் பணி செய்கிறாரோ... அப்போதே அவர் தன்னுடைய காவல் பணியைத் தொடரத் தகுதியற்றவராகி விடுகிறார். எனவே, துறைரீதியான விசாரணையை இந்த அதிகாரிகள் மீது மேற்கொள்ள வேண்டும். அவர்களை, அதுவரையில் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும்.

மெரினா போராட்டத்தின்போது மாணவர் களை ஒடுக்க, இதே காவல் அதிகாரிகள்தான் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடும் என்ற ஐயம் எனக்கு மட்டுமல்ல... பலருக்கும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இன்னொன்றும் சொல்கிறேன்... 1991 முதல் 96-ம் ஆண்டு முடிய நான் சபாநாயகராக இருந்தபோது 61 பேரை அவையில் இருந்து வெளியேற்றினேன். 61 பேரையும் தனித்தனியாகத்தான் பெயர் சொல்லி வெளியேற்றினேன். அதுதான் மரபு. ‘மொத்தமாக தி.மு.க உறுப்பினர்களை அவையைவிட்டு வெளியேற்றுகிறேன்’ என்று சொல்லி, 18-ம் தேதியன்று வெளியேற்றியதும் செல்லாது. வெளியேற்றிய பின் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லாது’’ என்றார் உறுதியாக.

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.