Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூவத்தூர் கூத்துக்களா? ஜெ. மருத்துவ அறிக்கையா? ஓ.பன்னீர்செல்வம் இன்று போடப்போகும் குண்டு என்ன?

Featured Replies

கூவத்தூர் கூத்துக்களா? ஜெ. மருத்துவ அறிக்கையா? ஓ.பன்னீர்செல்வம் இன்று போடப்போகும் குண்டு என்ன?

 

தமிழகமே திரும்பி பார்க்கும் வகையிலான முடிவை பன்னீர் செல்வம் இன்று எடுப்பார் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி அளித்துள்ள நிலையில் அவரது அறிவிப்பு என்னவாகும் இருக்கும் 

 

 சென்னை: ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எந்த மாதிரியான அறிவிப்புகளை வெளியிடுவார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது.

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவரது ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பங்கேற்பதற்கு பல்வேறு எதிர்ப்புகள் நிலவியது, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுக அமளியில் ஈடுபட்டது, ஜனாதிபதி, ஆளுநரிடம் முறையீடு உள்ளிட்டவை நிகழ்ந்தன.

இந்நிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த தீபக்கோ, தனது ஆதரவு எப்போதும் பன்னீர் அண்ணனுக்குதான் என்றும், அதிமுக துணை பொதுச் செயலாளர் பதவியை அலங்கரிக்க தினகரனுக்கு எந்த வித தகுதியும் இல்லை என்றும் அவர் நேற்று தெரிவித்தார்.

 

ஓபிஎஸ் நிகழ்ச்சியில் தீபா இல்லை

ஜெயலலிதாவின் இறப்புக்குப் பின்னர், முதல்முதலாக கொண்டாடப்படும் பிறந்த நாளான இன்று தீபா, பன்னீர் செல்வம் ஆகியோர் முக்கிய முடிவுகளை வெளியிடலாம் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. இதில் ஒருபடி மேலே போய், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாகவும், ஆர்.கே. நகரில் பன்னீர் செல்வம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள போவதில்லை என்றும் தீபா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதிலிருந்து தீபாவின் ஆதரவு ஓபிஎஸ்-ஸுக்கு இல்லை என்று ஊர்ஜிதமாகியுள்ளது.

 

தீபா தலைமையே வேண்டும்

ஓ.பன்னீர் செல்வத்துக்கு தீபக் ஆதரவு அளித்ததை அடுத்து தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டின் முன் திரண்ட ஆதரவாளர்கள் கட்சியும், ஆட்சியும் தீபாவிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், இன்று அவர் எடுக்கப் போகும் முடிவுக்கு கட்டுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

முக்கிய முடிவு

இதனிடையே, ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் முக்கிய முடிவை அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித் துறையின் முன்னாள் அமைச்சர் மாஃபா ஆர். பாண்டியராஜன் நேற்று பேட்டி அளித்தார். அப்படி அவர் என்னதான் முடிவு எடுக்கப் போகிறார் என்று அவரது ஆதரவாளர்களும், பொதுமக்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 


மக்கள் எதிர்க்கலாம்

அதிமுகவில் இருந்து வழிதவறி சென்றவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்ளப்படுவர் என்று தினகரன், தம்பிதுரை உள்ளிட்டோர் தெரிவித்திருந்த நிலையில் அவர் தாய் கட்சிக்கே மீண்டும் செல்வாரேயானால் சசிகலா மீது உள்ள வெறுப்புகள் மொத்தமாக ஓ.பன்னீர் செல்வத்தின் மீது திரும்பும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதனால் அது போன்ற ஒரு முடிவை அவர் எடுக்கமாட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

 

புளி கரைப்பு

எடப்பாடிக்கு ஆதரவளித்த 122 எம்எல்ஏ-க்களில் யார் யார் தமக்கு சாதகமாக இருந்தார்கள் என்பதை பன்னீர் செல்வம் வெளிப்படையாக தெரிவித்து கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கூவத்தூரில் அடைக்கப்பட்டிருந்த எம்எல்ஏ-க்கள் அடித்து கூத்துகளை ஆதாரத்துடன் வெளியிடவுள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் எம்.பி.சுந்தரம் தெரிவித்து எம்எல்ஏ-க்கள் வயிற்றில் புளியைக் கரைத்தார்.

 

கூவத்தூர் கூத்துகள் வெளியீடு?

எம்.பி. சுந்தரம் சேகரித்துள்ளதாக கூறப்படும் ஆதாரங்களை இன்று வெளியிடுவதன் மூலம் ஏற்கெனவே எடப்பாடிக்கு ஆதரவளித்ததால் கொதித்து போயுள்ள மக்கள் மீண்டும் கொந்தளிப்பில் ஈடுபட்டு அந்த எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி ஜல்லிக்கட்டு போன்ற மிகப் பெரும் மக்கள் புரட்சி ஏற்பட வாய்ப்புள்ளது.

 

கட்சி தொடங்க மாட்டார்

நேற்று வந்த தீபாவே புதிய கட்சியைத் தொடங்கும்போது ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்ற, நம்பிக்கைக்குரியவரான தனது தலைவர் பன்னீர் செல்வம் ஏன் புதிய கட்சியைத் தொடங்கக் கூடாது என்று கருதலாம். ஆனால் பன்னீர் செல்வம் தரப்போ அதிமுக என்றால் அது நாங்கள் தான் என்றும், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம்தான் என்றும் கூறுவதால் புதிய கட்சியை அவர் தொடங்கமாட்டார் என்பதை மறுக்க முடியாது.

 

ஜெ. மருத்துவ அறிக்கை

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள்களாக அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திடீரென டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தமிழக மக்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர். ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் நீண்ட நாள்களாக வாய் திறக்காத மருத்துவமனை நிர்வாகமும், லண்டன் மருத்துவர் பீலேவும் சசிகலா பதவியேற்க தயாராக இருந்த நாளுக்கு ஒரு நாள் முன்னர் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ந்தது.

 

பீலே வந்தார்

அப்போது லண்டன் மருத்துவர் பீலே இருந்தார். ஆனால் சசிகலாவின் உறவினர் சிவகுமார் இல்லை. அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு அவர் குடும்ப விழாவில் கலந்து கொள்ளவுள்ளதால் வரவில்லை என்று உப்பு சப்பு இல்லாத காரணத்தை மருத்துவர் பாலாஜி தெரிவித்தார்.

 

விசாரணை குழு

இந்நிலையில் அவரது மரணம் குறித்து விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று ஓபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில் எல்லாம் தலைகீழாக மாறியது. இதனால் ஆர்.கே.நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் உண்மையான மருத்துவ அறிக்கையை ஓபிஎஸ் தரப்பு வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/what-will-be-the-new-announcement-panneer-selvam-275083.html

  • தொடங்கியவர்

"அப்போலோ ரகசியத்தை உடைக்கிறார்!" ஜெ.பிறந்தநாளில் பன்னீர்செல்வத்தின் அடுத்த அவதாரம் #VikatanExclusive

8_11135.jpg

ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அப்போலோ ரகசியத்தை வெளிப்படுத்த போவதாக பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது ஜெயலலிதா கவனித்து வந்த துறைகள் கூடுதல் பொறுப்பாக பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டன. அடுத்து ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பு ஏற்றார். இதன்பிறகு டிசம்பரில் நடந்த அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழுவில் சசிகலா, தற்காலிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டசபைத் தலைவராகவும் சசிகலாவை தேர்வு செய்தனர். அதற்கு முன்பு முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். முதல்வராக சசிகலா பொறுப்பு ஏற்பார் என்று எதிர்பார்த்த நேரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறைக்குச் சென்றுவிட்டார்.  இதற்கிடையில் சசிகலாவுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. ஜெயலலிதா சமாதிக்கு தனி மனிதனாக சென்ற பன்னீர்செல்வம், சசிகலா மீது குற்றம் சுமத்தினார். இதையடுத்து சசிகலா அணியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவை ஏற்கெனவே எதிர்த்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் சந்தித்தனர். அடுத்து இவர்கள் இருவரும் மக்களை சந்திக்கத் தயாராகினர். இதைத்தடுக்கும் வேலையில் சசிகலா தரப்பு களமிறங்கியது. பன்னீர்செல்வத்துக்கும், தீபாவுக்கும் இடையே ஈகோ பிரச்னையை கிளப்பி விட்டனர். இதனால் தீபா, பின்வாங்கினார். சசிகலாவால் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், நேற்று கட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றார். அப்போது அவர் அளித்த பேட்டியில் அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஆனால் அ.தி.மு.க.வுக்கு திரும்பிச் செல்லும் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு இல்லை. ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று பன்னீர்செல்வம், அதிரடியான அறிவிப்பை வெளியிடப்போவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

"சசிகலா அணியினர் சட்டசபை ஜனநாயகத்தை மீறி மெஜாரிட்டியை நிரூபித்துள்ளனர். இதுதொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இது சசிகலா தரப்பிற்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். மக்களும், கட்சியின் தொண்டர்களும் சசிகலா தரப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. மக்களை நாங்கள் சந்திக்க செல்வதை தடுக்க பலவகையில் முயற்சித்து வருகின்றனர். அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது என்ன நடந்தது என்பது மருத்துவர்களுக்கும், சசிகலாவுக்கும் மட்டுமல்ல எங்களுக்கும் தெரியும். அதையெல்லாம் சொன்னால் கட்சி நிச்சயம் உடையும். சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்குக்கு அப்போலோ விவரம் தெரியும். ஆனால் அவர் அதை வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார். அதை தடுக்கும் சக்தி யார் என்று மக்களுக்கே தெரியும். சசிகலா குடும்ப உறவுகளில் ஏற்பட்ட விரிசல் காரணமாக டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோருக்கு எதிராக தீபக் குரல் கொடுத்துள்ளார். அவர் மேலும் பேசத் தொடங்கினால் சசிகலா குடும்பத்தினரின் முகத்திரை கிழிந்து விடும்.

அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சசிகலா தரப்பு அவசர அவசரமாக மருத்துவர்களை பேட்டி கொடுக்க வைத்தனர். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மருத்துவ ரீதியாக மருத்துவர்கள் விளக்கினார்கள். இதற்காக லண்டன் டாக்டர் ரிச்சர்டு பிலே, சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இது எல்லாம் சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் பேரிலேயே நடந்தது. ஆனால், ஜெயலலிதா விவகாரத்தில் இன்னும் அப்போலோவில் மர்மங்கள் ஒளிந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதுகுறித்த தகவல்கள் வெளியே வந்தால் நிச்சயம் சசிகலா தரப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பன்னீர்செல்வத்துக்கு தெரிந்த உண்மைகளை இன்று அவர் சொல்ல முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக பன்னீர்செல்வம் தரப்பினர் அவரது இல்லத்தில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதன்பிறகு அவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளனர். அப்போது, சசிகலா தரப்பு குறித்த முழுவிவரம் வெளிச்சத்துக்கு வரும்" என்றனர் ஆதரவாளர்கள்.

இதுகுறித்து பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவர் ஒருவர் கூறுகையில், "அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அவரது புகைப்படம் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் அப்போலோ மருத்துவமனை நிர்வாகமும், சசிகலா தரப்பும், ஜெயலலிதா நலமாக இருப்பதாக தெரிவித்தனர். அந்த சமயத்தில் நடந்த இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்றது.  வேட்பாளர்களின் தேர்வு சசிகலாவின் சாய்ஸாகத்தான் இருந்தது. ஜெயலலிதாவின் ஆசைகள், எண்ணங்களை சசிகலா நிறைவேற்றவில்லை. அதையும் வெளிப்படுத்த உள்ளோம். அடுத்து கட்சியில் உள்ள தொண்டர்கள், மக்களின் ஆதரவு எங்களுக்கு இருப்பதால் அ.தி.மு.க.வில் இருந்து எங்களை நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை. ஏனெனில் அவரது நியமனமே செல்லாது. அப்படியிருக்கும் போது அவரால் நியமிக்கப்பட்டவர்களுக்கும் அதே கதிதான். இதனால் சட்டரீதியாக அ.தி.மு.க.வை கைப்பற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காக தேர்தல் ஆணையம் வரை சென்றுள்ளோம். சசிகலா, சிறையிலிருக்கும் இந்த நேரத்தில் ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட டி.டி.வி.தினகரனும், வெங்கடேஷிம் கட்சியில் ஆதிக்கம் செலுத்துவதை நாங்கள் மட்டுமல்ல கட்சியினரும் விரும்பவில்லை. இதன்விளைவு ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் எதிரொலித்துள்ளது. முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியும் சூழ்நிலை காரணமாக அந்தப்பக்கத்தில் இருக்கிறார். அவருக்கும் எல்லா உண்மைகளும் தெரியும். பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்ட நிலைமை அவருக்கு ஏற்பட அதிக நாள்கள் இல்லை. அப்போது அவரும் உண்மைகளை சொல்வார்" என்றார். 

http://www.vikatan.com/news/tamilnadu/81884-opanneerselvam-to-expose-apollo-mystery-on-jayalalithaas-birthday.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.