Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெ. மரணத்தில் நீதி கிடைக்கும் வரை தர்மயுத்தம் தொடரும்! ஆர்.கே.நகரில் பன்னீர்செல்வம் சூளுரை

Featured Replies

ஜெ. மரணத்தில் நீதி கிடைக்கும் வரை தர்மயுத்தம் தொடரும்! ஆர்.கே.நகரில் பன்னீர்செல்வம் சூளுரை

10_13384.jpg

ஜெயலலிதா மரணத்தில் நீதி கிடைக்கும் வரை தர்மயுத்தம் தொடரும் என்று ஆர்.கே.நகரில் பன்னீர்செல்வம் ஆவேசமாக பேசினார்.

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சென்னை ஆர்.கே.நகரில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. ஒன்றரை கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்டதுதான் அ.தி.மு.க. ஆட்சியும், கட்சியும் நம்மிடத்தில் தந்து விட்டு ஜெயலலிதா மறைந்து இருக்கிறார். யாருடைய குடும்பத்தில் கட்சியும், ஆட்சியும் சென்று விடக்கூடாது என்று எண்ணி அவர்கள் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். அவர்களையெல்லாம் வீட்டை விட்டு வெளியேற்றி, தனது காலம் வரைரையிலும் அதில் உறுதியாக நின்று கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் பிடியில் சென்றுவிடாமல் காத்து வந்தவர் ஜெயலலிதா.

ஆனால், இன்றைக்கு நிலைமை ஜெயலலிதாவின் கொள்கைக்கும் கோட்பாடுகளுக்கும் மாறாக ஆட்சியும் கட்சியும் ஒரு குடும்பத்தின் கையில் சென்றிருக்கிறது. அந்த குடும்பத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் கட்சியை மக்கள் இயக்கமாக, தொண்டர்களின் இயக்கமாக ஜெயலலிதா மாற்றினார்.

11_13071.jpg

ஜெயலலிதாவின் மரணம் பற்றிய சந்தேகங்கள் தமிழக மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் காஞ்சிபுரத்தை சேர்ந்த தொண்டர் ஒருவர் தீக்குளித்து படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு நான் சென்று பார்த்து திரும்பியபோது மிகக்பெரிய கூட்டம் இருந்தது. அப்போது, ஒரு தாய் என்னை பார்த்து ஓடிவந்தார்கள். ஐயா, அம்மாவின் மரணத்துக்கான காரணத்தை நீங்கள் உறுதியாக சட்டத்தின் மூலமாக நிரூபிக்க வேண்டும். அதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். நான் முதலமைச்சராக இருந்தபோது அதற்கான பூர்வாங்க பணிகள் மேற்கொண்டபோதுதான் நிலை தலைகீழாக மாறியது.

யாருடைய கையில் கட்சியும் ஆட்சியும் இருக்கக்கூடாது என்று ஜெயலலிதா நினைத்து இந்த இயக்கத்தை வலியுறுத்தி சென்றார்களோ அதை நிறைவேற்றத்தான் இந்த தர்ம யுத்தம். இந்த தர்ம யுத்தத்தில் வெற்றி பெறப்போவது நாம்தான். உடனடியாக மாநில அரசும், மத்திய அரசும் தலையிட்டு ஜெயலலிதாவின் மரணத்தில் புதைந்திருக்கிற அந்த சந்தேகங்களை உரிய நீதிவிசாரணை வைத்து தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் தமிழக மக்களுடைய ஒட்டுமொத்த கோரிக்கை. அந்த கோரிக்கை நிறைவேறும் வரை தர்மயுத்தம் தொடரும். ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலரும். அ.தி.மு.க தொண்டர்கள் இருக்கும் வரும் வரை இந்த தர்மயுத்தம் தொடரும்" என்று பேசினார்.

-சகாயராஜ்

படங்கள்: வி.ஶ்ரீநிவாசுலு

 

ENGLISH OVERVIEW

'We will continue our battle untill Truth behind Jayalalithaa's death conspiracy reveal'- O.Paneerselvam

http://www.vikatan.com/news/tamilnadu/81902-we-will-continue-our-battle-untill-truth-behind-jayalalithaas-death-conspiracy-reveal--opaneerselvam.html

  • தொடங்கியவர்

உறுப்பினராக இல்லாதவர் எனக்கு அழைப்பு விடுப்பதா? டி.டி.வி.தினகரனை விளாசும் பன்னீர்செல்வம்

ஜெயலலிதா இருக்கும் வரை கட்சி உறுப்பினராக இல்லாதவர் எல்லாம், எனக்கு அழைப்பு விடுப்பதா என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பன்னீர்செல்வம்,  "அதிமுக உடையவில்லை. எம்.எல்.ஏக்கள் மட்டும்தான் எங்களிடம் இல்லை; தொண்டர்கள் எங்களிடம்தான் உள்ளனர். தீபக் கூறியது தனிப்பட்ட கருத்து. அவரது உள்ளத்தில் இருந்ததை அவர் கூறியுள்ளார். நாங்கள் தீபாவை வரவேற்கிறோம். இரட்டை இலை சின்னத்தை மீட்டு ஆட்சி அமைப்பதே எங்களது இலக்கு.

Panneerselvam

குடும்ப இயக்கத்தை எதிர்த்து வளர்ந்த இயக்கம் அதிமுக. அது எப்போதும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் போய்விடக் கூடாது. அசாதாரண சூழல் நிலவும்போது தற்காலிக பொதுச்செயலாளரை நியமிக்க முடியும். அவரை நியமித்ததே கழக சட்ட விதிகளுக்கு புறம்பானது. அவர் நியமிக்கப்பட்டதும், அவரால் நியமிக்கப்பட்ட உத்தரவும் செல்லாது. அவர் சிலரை நீக்கியதும் செல்லாது. நிரந்தப் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, ஜெயலலிதா தான் பொதுச்செயலாளர். அதுவரை அந்த பொறுப்பில் அமர யாருக்கும் தகுதி இல்லை. ஜெயலலிதா உயிரிழக்கும் வரை கழக உறுப்பினராக இல்லாதவர் எல்லாம், எனக்கு அழைப்பு விடுப்பதா. அவர் எப்படி துணைப் பொதுச்செயலாளர் ஆக முடியும்.

ஜெயலலிதா மரணம் குறித்து மக்களிடையே, பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. ஜெயலலிதா மீது பற்று இருந்தால் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாடுக்கு கீழ்தான் விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும்.  தற்போதைய அரசு புதிய அறிவிப்பை வெளியிடவில்லை. ஜெயலலிதாவின் திட்டங்களை வைத்துதான் ஆட்சி நடத்த முடியும். 123 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் எங்களுக்கு இல்லை. ஒன்றரை கோடி தொண்டர்கள் ஆதரவு எங்களுக்குதான் உள்ளது. எங்களுக்குத்தான் கட்சி. விரைவில் அதிமுக தலைமை அலுவலகம் எங்களைத் தேடிவரும். பொறுத்தார் பூமியாள்வார்" என்றார்.

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம்: சீனிவாசலு

http://www.vikatan.com/news/tamilnadu/81911-panneerselvam-slams-ttv-dinakaran.html

  • தொடங்கியவர்

சென்னை:ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை ஒட்டி, நேற்று மாநிலம் முழுவதும் விமரிசையான ஏற்பாடுகளை செய்திருந்த, பன்னீர்செல்வம் அணியினர், ஆர்.கே.நகர் விழாவில், களைகட்டிய தொண்டர் கூட்டத்தை பார்த்து, பெரும் உற்சாகம் அடைந்தனர்.

 

Tamil_News_large_1717764_318_219.jpg

அவர்கள் மத்தியில் பேசிய, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சசி குடும்பத்தின் பிடியில் இருந்து, கட்சியை மீட்பேன் என்றும், அதுவரை தர்மயுத்தம் தொடரும் என்றும் சூளுரைத்தார்.

மறைந்த ஜெயலலிதாவின், 69வது பிறந்த நாளை ஒட்டி, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் வந்திருந்தனர். ஆனால், தொண்டர்கள் பெருமளவில் வரவில்லை.

இந்நிலையில், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், ஜெ., பிறந்த நாளை ஒட்டி,

பன்னீர்செல்வம் அணி சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அதற்கு, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர். அதனால், பன்னீர் அணியினர் உற்சாகம் அடைந்தனர்.விழாவில், ஏழை மக்களுக்கு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின், தொண்டர்கள் மத்தியில், பன்னீர்செல்வம் பேசியதாவது:

எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், அ.தி.மு.க.,விற்கு வந்த சோதனைகளை, ஜெ., தகர்த்தெறிந்தார். அ.தி.மு.க.,வை, எந்தகொம்பனாலும் அசைக்க முடியாத இயக்கமாக உருவாக்கி, ஆட்சியை யும், கட்சியையும் நம் கையில் தந்தார்.ஒரு குடும்பத்தின் பிடியில், கட்சியும், ஆட்சியும் சென்று விடக்கூடாது என எண்ணி, கடும் நடவடிக்கை எடுத்தார்; அந்த குடும்பத்தினரை, வீட்டை விட்டு வெளியேற்றினார்.

அவர் மறையும் வரை, அதில் உறுதியாக நின்று, கட்சியையும், ஆட்சியையும், குடும்பத்தின் பிடிக்குள் சென்று விடாமல் காத்தார்.இன்று நிலைமை என்ன; ஜெ., கொள்கைக்கு, கோட் பாடுகளுக்கு மாறாக, ஆட்சியும், கட்சியும், ஒரு குடும்பத்தின் கையில் சென்றுள்ளது. அந்த குடும்பத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக தான், இந்த கட்சியை மக்கள் இயக்கமாக, ஜெ., மாற்றினார்.

ஜெ., மரணத்தில் உள்ள மர்மம், மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. சில

 

தினங்களுக்கு முன், மூசா என்ற தொண்டர், தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்தார். அவரை பார்த்து விட்டு திரும்பிய போது, மருத்துவமனைக்கு வெளியே, மிகப்பெரிய கூட்டம் கூடியிருந்தது.

அப்போது, ஒரு தாய் என்னை பார்த்து ஓடி வந்து, 'ஜெ., மரணத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை கண்டறியுங்கள்; அதற்கு காரணமானவர்களுக்கு, உரிய தண்டனை வழங்குங்கள்' என்றார்.

நான் முதல்வராக இருந்த போது, அதற்கான பூர்வாங்க பணிகளை துவக்கியபோது தான், நிலைமை தலைகீழாக மாறியது. யாரிடம் கட்சி இருக்கக் கூடாது என, ஜெ., நினைத்தாரோ, அவர்களிடம் சென்றுள்ள கட்சியையும், ஆட்சியையும் மீட்டெடுக்க, தர்மயுத்தம் துவக்கி உள்ளோம்.

உடனடியாக, மாநில அரசும், மத்திய அரசும், ஜெ., மரணத்தில் புதைந்துள்ள சந்தேகங்களை, உரிய நீதி விசாரணை வைத்து, தீர்க்க வேண்டும். இது, தமிழக மக்களின் ஒட்டு மொத்த கோரிக்கை. அந்த கோரிக்கை நிறை வேறும் வரை, தர்மயுத்தம் தொடரும். ஜெ., ஆட்சி மீண்டும் மலரும் வரை, சசி குடும்பத் தின் பிடியில் இருந்து கட்சியை மீட்டு, தொண்டர்கள் கைக்கு வரும் வரை, இந்த தர்மயுத்தம் தொடரும்.இவ்வாறு பன்னீர்செல்வம் பேசினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1717764

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.