Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு , கிழக்கு அபிவிருத்திக்கு" புலம்பெயர் அமைப்பு "உதவக்காத்திருக்கிறது

Featured Replies

வடக்கு , கிழக்கு அபிவிருத்திக்கு" புலம்பெயர் அமைப்பு "உதவக்காத்திருக்கிறது

 

வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்தி தொடர்­பாக கன­டாவின் புலம் பெயர் அமைப்பு கடந்த ஜன­வரி மாதத்தில் கருத்துப் பரி­மா­றல்­க­ளுக்­கான சில ஒன்று கூடல்­களை கன­டாவில் ஒழுங்கு செய்­தி­ருந்­தது. இவ்­ ஒன்று கூடலில் பங்கு பற்­று­வ­தற்­காக கூட்­ட­மைப்­பினால் தெரிவு செய்­யப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் ஆகியோர் அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர். அவர்­களில் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜி.ஸ்ரீநே­சனும் ஒருவர். அவர், கன­டாவின் ஒன்றுகூடலில் பங்­கு­பற்­றி­யதன் பின்னர் அதன் விளை­வு­களும் அதன் தாற்­ப­ரி­யங்­களும் பற்றி மட்­டக்­க­ளப்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் முக்­கி­யஸ்­தர்­க­ளுக்கு விளக்­க­ம­ளித்தார். அதன் தொகுப்பு இங்கே தரப்­ப­டு­கி­றது.

மனித சமூகம் தனக்­கென விதம் வித­மான தேவை­களைக் கொண்­டி­ருக்­கி­றது. அவை அத்­தி­யா­வ­சியத் தேவைகள், அவ­சரத் தேவைகள், அடிப்­படைத் தேவைகள் என்று பிரிக்­கப்­பட்டு பின்னர் அவை­களில் இருந்து கல்வி, சௌக்­கியம், பொரு­ளா­தாரம் என்­ற­வாறு கூறு­ப­டுத்­தப்­ப­டலாம். இதைத் தவிர இத்­தே­வைகள் இன்­னொரு நாட்­டோடும் அல்­லது சமூ­கத்­தோடும், மற்றும் காலப்­ப­ரி­மா­ணத்­தோடும் அள­வீடு செய்­யப்­ப­டலாம். மேற்­கூ­றி­ய­வைகள் மனித சமூ­கத்­தின் தேவைகள் பற்­றிய ஒரு பொதுக்­க­ருத்­தாகும்.

இங்கு எடுத்­தா­ளப்­படும் விட­யங்­க­ளுக்கு முன்­ன­தாக கனடா பற்­றிய ஒரு அறி­முகம் தேவைப்­ப­டு­கி­றது. கனடா ஒரு பல்­லின, பல்­ச­மய, பல் கலா­சாரம் குடி­கொண்ட நாடு. அங்கு சுமார் 63-–64 மொழிகள் பேசப்­ப­டு­கின்­றன. அங்கு வாழு­கின்ற வெவ்­வேறு அடை­யாளம் கொண்ட மக்கள் தங்­க­ளது அடை­யா­ளங்­க­ளையோ, வேறு­பாட்­டையோ நினைத்துப் பார்ப்­ப­து­மில்லை, தூக்­கிப்­பி­டிப்­ப­து­மில்லை. அவர்­களுள் புலம்பெயர்ந்­த­வர்கள், நிலை­யான குடி­யு­ரிமை பெற்­ற­வர்கள் என்ற வேறு­பா­டுகள் இல்லை. அங்கு வாழும் எம்­நாட்­ட­வர்­க­ளுக்கு அர­சியல், சமூக, கலா­சார அந்­தஸ்­துகள் இருந்து வரு­கின்­றன. அவர்கள் விட்­டுக்­கொ­டுப்பு, சகிப்­புத்­தன்மை, ஒரு­வரை ஒருவர் மதித்து நடத்தல் என்­ப­வை­க­ளோடு சந்­தோஷ­மாக வாழ்ந்து வரு­வதை காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. ஹரி­சங்­கரி என்ற தமிழர், அவர் நம்­மவர், மாந­க­ர­சபை உறுப்­பி­ன­ராக இருக்­கிறார். முஸ்லிம் ஒரு­வரே அந்த நாட்­டிற்கு பாது­காப்பு அமைச்­ச­ராக இருக்­கிறார். உழைப்பே அவர்­க­ளது தாரக மந்­திரம். உழைக்­கா­த­வர்­களை காண்­பது அரி­திலும் அரிது. அங்­கெல்லாம் அமைச்­சர்­க­ளுக்கும், பிர­தா­னி­க­ளுக்கும் நமது நாட்டைப் போல் விசேட கௌர­விப்­புக்­களோ சலு­கை­களோ கிடை­யாது. அமைச்­சர்கள் மனி­தர்­க­ளோடு மனி­தர்­க­ளாக பய­ணிப்­பார்கள், செயற்­ப­டு­வார்கள். பந்தா என்று கூறு­வார்­களே அது அமைச்­சர்­க­ளுக்கு அங்கு இல்­ல­வே­யில்லை.

புலம்­பெ­யர்ந்­த­வர்கள் அங்கு நிலை­பே­றான பொரு­ளா­தார பலம் பெற்று வாழ்­கி­றார்கள். அவர்கள் அங்கு சந்­தோஷம்,, கௌரவம், அந்­தஸ்து என்று வாழ்ந்த போதிலும் நமது வடக்கு, கிழக்கின் நிலை அறிந்து வேத­னைப்­ப­டு­கி­றார்கள். எவ்­வாறு வடக்கு, கிழக்­கிற்கு உத­வு­வது? எப்­படி வடக்­கையும் கிழக்­கையும் மேலோங்கச் செய்­வது என்று சிந்­திக்­கி­றார்கள். இது நமக்­கெல்லாம் சந்­தோ­ஷத்தை தரக்­கூ­டி­யது.

நமது அரசு பற்றி நான் சிலா­கிக்க வேண்­டி­ய­வ­னாக இருக்­கிறேன். இலங்­கையின் பிர­தான அர­சியல் கட்­சிகள் இரண்டும் இணைந்து இந்த நல்­லாட்­சியைத் தோற்­று­வித்­தி­ருக்­கின்­றன. நல்­லாட்சி அர­சிற்கு சவால்­களும், முட்­டுக்­கட்­டை­களும், எதிர்ப்­பு­களும் இல்­லாமல் இல்லை. இவை­களை சமா­ளிக்க வேண்­டிய நிலைக்கு அரசு தள்­ளப்­பட்டு இருக்­கி­றது. சமா­ளிக்க தவ­றினால் அரசு சறுக்கி விழுந்து விடும். அதைத்­தாண்­டியே தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­றவும் அவர்­க­ளுக்­கான அபி­வி­ருத்­தியில் இறங்­கவும் அது தயா­ராக வேண்­டி­யி­ருக்­கி­றது. இது சாதா­ரண பிர­யத்­த­ன­மா­காது என்­பது எல்­லோ­ருக்கும் தெரிந்த விடயம். தாங்­க­மு­டியாத ஒரு சுமையை அரசு தாங்­கித்தான் ஆக­வேண்டும். அது தவிர்க்க முடி­யா­த­துதான்.

வடக்கு, கிழக்கு 30 வரு­ட­கா­ல­மான போரின் பிடி­யி­லி­ருந்து விடு­பட்டு இருக்­கி­றது. இருந்தும் போரின் எச்­சங்­களும், சொச்­சங்­களும் அங்­கி­ருந்து விடை­பெற்­ற­தாக இல்லை. தமிழர் தாய­கத்தில் இன்­னமும் இரா­ணுவம் நிலை­கொண்டு இருக்­கி­றது. அங்கு இரா­ணுவம் தோட்டம் செய்­கி­றது, கடை வைத்து வியா­பாரம் செய்­கி­றது. இவை இரண்டும் அங்கு நடை­பெறும் மொத்த செயற்­பா­டு­க­ளுக்­கான சில உதா­ர­ணங்­களே.

தமிழ் மக்­க­ளுக்கு உடல் பசி, உளப்­பசி என்று வெவ்­வேறு பட்ட பசிகள் இருக்­கின்­றன, போர்க்­கா­லத்­திலும் இவைகள் இருந்­தன. போரின் இருளால் அவை தங்­களை மறைத்துக் கொண்­டன. போர் முடி­வுற்­றதால், அவை இப்­போது தலையை நீட்­டிப்­பார்க்­கின்­றன. அவை­க­ளுக்கு தீனி போட்­டே­யா­க ­வேண்டும். அவை பிற்­போட முடி­யா­த­வை தட்­டிக்­க­ழிக்க முடி­யா­த­வை. பிள்­ளை­க­ளுக்கு கல்வி வேண்டும், சுகா­தார வசதி வேண்டும், வதி­விடம் வேண்டும். இவை­க­ளுக்­கான வச­திகள் தாம­த­மின்றி ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். இதற்கு மேலாக உழைப்பு வேண்டும். உழைப்­பில்­லை­யென்றால் அனைத்­துமே இல்­லாமல் போய்­வி­டும் அல்­லவா? உழைப்­பிற்­கான தொழில் வாய்ப்பு இல்­லாமல் எவ்­வாறு உழைப்­பது? எவ்­வாறு பணம் சம்­பா­திப்­பது? இவை­களே எம்­முன்னே உள்ள விரை­வாக தீர்க்­கப்­பட வேண்­டிய பிரச்­சி­னைகள் ஆகும்,

வயது வந்­த­வர்கள் அனை­வரும் ஒன்றோ அல்­லது ஒரு சில தொழி­ல்களைச் செய்தோ ஊதியம் பெற­வேண்டும் அப்­போ­துதான் அவர்­களின் சீவியம் சிறப்­பா­கவும் சுமு­க­மா­கவும் நேர்­வ­ழியில் செல்லும். இதுவே வள­மான வாழ்­வுக்கு வழி. அவை இல்­லாத வாழ்வு வாழ்­வா­காது.

நமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் நீர்­வளம் , நில­வளம், வன­வளம், கடல்­வளம் என்று வளங்­களை இப்­ப­டியே அடுக்கிக் கூறலாம். இருந்தும் நமக்கு பொருத்­த­மான நவீ­ன தொழில்நுட்ப அறிவு இல்­லா­மையால் உழைப்­பிலும் வரு­மா­னத்­திலும், இலாபத்­திலும் பின்­தங்கி நிற்­கிறோம். நமது பிர­தே­சத்தைப் பொறுத்­த­வ­ரையில் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் தொழிலும்,அவர்­க­ளுக்­கெல்லாம் ஆங்­காங்கே தொழிற்­சா­லைகளும் இருக்­கின்­றன என்ற நிலை உரு­வா­க­வேண்டும். அது ஏற்­று­ம­தியை உரு­வாக்க வேண்டும். வடக்கும், கிழக்கும் வள­மான வாழ்வு பெற­வேண்டும் என்ற எண்ணம் அல்­லது அபி­லாஷை புலம்­பெயர் அமைப்­பு­க்­களின் மனதில் துளிர்­வி­டு­வதை உண­ரக்­கூ­டி­யதாக இருக்­கி­றது.

திட்­டங்­களை தீட்­டி­வி­டலாம், அது இல­கு­வா­னது. அத்­திட்­டங்­களை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு நிதி வேண்­டுமே என்று எம்­மக்கள் அங்­க­லாய்க்­கலாம், அதனை வழங்­கு­வ­தற்­கா­கவே கன­டாவில் ஸ்தாபிக்­கப்­பட்டு இயங்­கி­வ­ரு­கின்ற கனடா தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு கைகொ­டுத்­தி­ருக்­கி­றது. திட்­டங்­களை தீட்டி அத்­திட்­டங்­க­ளுக்கு முத­லீடு செய்­வ­தற்­கென அது கொள்­கை­ய­ளவில் இணக்கம் தெரிவித்­துள்­ளது. இதற்­கா­கவே எமது வட­க்கு, கி­ழக்குப் பிர­தி­நி­திகள் அவர்­களால் அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர். சுமார் இரு­வா­ர­காலம் அங்கு எமது பிர­தி­நி­திகள் தங்­கி­யி­ருந்­தனர். அங்­கே­யுள்ள முத­லீட்­டா­ளர்­க­ளுடன் இது தொடர்­பாக பல சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டனர். இக்­கு­ழுவில் கிழக்கு மாகா­ண­ச­பையின் கல்­வி­ய­மைச்சர் சி.தண்­டா­யு­த­பாணி, மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜி.ஸ்ரீ­நேசன், அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கே.கோடீஸ்­வரன், வட­மா­காண சபை கல்வி அமைச்சர் த.குரு­கு­ல­ராஜா, வட­மா­காண சபை உறுப்­பினர் அஸ்மின், வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் திரு­மதி சாந்தி ஸ்ரீ­ஸ்­கந்­த­ராஜா ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர். மறு­பக்­கத்தில் புலம் பெயர் அமைப்­புக்­க­ளோடு நிபு­ணத்­துவ ரீதி­யான ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக அனு­பவம், ஆற்றல், அறிவு கைவ­ரப்­பெற்ற தொழில்சார் ஆலோ­ச­கர்கள் இருந்­தனர். அவர்கள் முழுக்க முழுக்க துறை­சார்ந்த வினாக்­களை முன்­னி­றுத்தி தேவைப்­படும் விப­ரங்­களை எமது பிர­தி­நி­தி­க­ளி­ட­மி­ருந்து பெற்றுக் கொண்­டனர். இதி­லி­ருந்து அவர்கள் முத­லீடு செய்­வ­தற்கு முன்­ன­தாக அது தொடர்­பான முழுத்­த­க­வல்­க­ளையும் திரட்டி அணு அ­ணுவாக ஆராய்ந்த பின்­னரே முத­லீடு செய்­வார்கள் என்­பது தெளிவு­று­கி­றது. இது இரு தரப்­புக்கும் பொருத்­த­மான விவே­க­மான செயல். இதில் யாரும் குற்­றம்­பி­டிக்­கவோ, குறை­கா­ணவோ முடி­யாது. தொடக்கம் கோணல்­மா­ண­லின்றி தொடங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதில் இரு­ த­ரப்பினரும் கரி­சனை காட்­டு­வது நல்­லதே.

இரண்டு விதங்­களில் எமது குழு­வி­னரை அவர்கள் வழிப்­ப­டுத்­தி­னார்கள். ஒரு விதத்தில் கலந்­து­ரை­யா­டல்கள், மறு­வி­தத்தில் வெளிக்­க­ளப்­ப­யணம் என்­றி­ருந்­தது. கலந்­து­ரை­யா­ட­லி­னூ­டாக இரு­த­ரப்­பி­ன­ரதும் கருத்­துக்கள் வெளிப்­பட்­டன, உள்­வாங்­கப்­பட்­டன எனலாம், வெளிக்­க­ளப்­ப­ய­ணத்­தி­னூ­டாக கனே­டிய நாடு எவ்­வாறு முன்­னே­றி­யி­ருக்­கி­றது, அம்­முன்­னேற்­றத்­திற்கு என்­னென்ன அணுகு முறைகள் கடைப்­பி­டிக்­கப்­பட்­டன என்­ப­வைகள் எம் மனத்­திற்குள் சிந்­திப்­ப­தற்­காக புகுத்­தப்­பட்­டன எனலாம். எமது நாட்டில் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்ற வழி­மு­றை­க­ளுக்கும் அங்­குள்ள செயற்­பா­டு­க­ளுக்­கு­மி­டை­யி­லான வேறு­பா­டு­க­ளையும், அவ்­வே­று­பா­டுகள் செலுத்­து­கின்ற தாக்­கங்­க­ளையும் அத­னூ­டான நேர், எதிர்­வி­ளை­வு­க­ளையும் வெளிக்­க­ளப்­ப­யணம் எமக்கு தெளிவாக உணர்த்­தி­யது எனலாம்.

இனி, கலந்­து­ரை­ய­டல்­க­ளைப்­பற்றி கொஞ்சம் ஆழ­மாக பார்ப்போம். கலந்­து­ரை­யா­ட­ல்கள் தனித்­த­னி­யான தொனிப்­பொ­ருளில் தனித்­த­னி­யாக நடத்­தப்­பட்­டன. ஒவ்­வொரு கலந்­து­ரை­யா­ட­ல­்க­ளுக்கும் வெவ்­வேறு ஆலோ­ச­கர்கள் கலந்து கொண்­டனர். அதே­போன்று எங்­க­ளையும் தனித்­தனி குழு­வாக பிரித்­தி­ருந்­தனர். பேசிய விட­யங்­களும் இறு­தி­யாக எட்­டப்­பெற்ற தீர்­மா­னங்­களும் பதி­வேடு­களில் பதி­யப்­பட்­டன. வட­மா­காண கல்வி அமைச்­சரும் கிழக்கு மாகாண கல்வி அமைச்­சரும் குறிப்­பாக கல்­வித்­து­றைசார் குழுக்­க­லந்­து­ரை­யா­டல்­களில் மட்­டுமே கலந்து கொண்­டனர். அதே­போன்று சுகா­தாரம், பொருண்­மியம் ஆகிய துறைசார் குழுக்­களின் கலந்­து­ரை­யா­டல்­களும் இதே பாணியில் இடம் பெற்­றன.

இனி, வெளிக்­க­ளங்­களில் எங்­க­ளுக்கு பண்­ணை­களும், பாட­சா­லை­களும் தொழிற்­சா­லை­களும் காண்­பிக்­கப்­பட்­டன. விவ­சா­யப்­பண்­ணைகள், கால்­ந­டைப்­பண்­ணைகள் என்­பன அவை­களுள் பிர­தா­ன­மா­ன­வை. அதே போன்று பாட­சா­லை­களும் காண்­பிக்­கப்­பட்­டன. பாட­சா­லை­களில் கோட்­பாட்­டுக்­கல்வி முறைமை பிர­யோ­கிக்­கப்­பட்­ட­போ­திலும், செயல்­மு­றைக்­கல்­வி­யி­னூ­டா­கவே மாண­வர்கள் அதிகம் ஈடு­பாடு காட்­டு­வ­தற்கு ஊக்கு­விக்­கப்­ப­டு­வதை நேர­டி­யாக கண்டோம். இலங்­கை­யில் கோட்­­பாட்­டுக்­கல்­வியும், பரீட்­சை­க­ளுமே இருக்­கின்­றன. இதற்கு மறு­த­லை­யா­கவே கன­டாவில் கோட்­பாட்­க்­கல்­வி­யோடு செயற்­பாட்­டுக்­கல்­வியும் இணைந்து போதிக்­கப்­ப­டு­கின்­றது.

அடுத்­த­தாக வைத்­திய வச­திகள் பற்­றிய கலந்­து­ரை­யா­டலை எடுத்­துக்­கொண்டால் புலம்­பெயர் சமூ­கத்தின் ஆழ­மான கரி­ச­னையும், ஈர்ப்பும் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்டு அங­்க­வீ­ன­ம­டைந்­த­வர்­க­ளின்மேல் இருக்­கி­றது. இவர்­க­ளுக்கு எப்­படி வைத்­திய வசதி வழங்­கலாம்? எப்­படி இவர்­களை சமூ­கத்­திற்கு பிர­யோச­ன­மான உழைப்­பா­ளி­க­ளாக மாற்­றலாம் என்று நினைக்­கி­றார்கள். இதை­விட தொற்றா நோயின் தாக்­கத்தை அடுத்த பரம்­ப­ரைக்கு எடுத்­துச்­செல்லா வண்ணம் எப்­படி தவிர்ப்­பது என்றும் சிந்­திக்­க­ிறார்கள். சில கிரா­மத்து மக்­க­ளுக்கு நோய்கள் பற்­றியும், நோய்­வ­ராமல் தடுப்­பது பற்­றியும் நோய்­வந்­தால் எப்­படி எப்­ப­டி­யான சிகிச்­சை­களை வழங்­க­வேண்டும் என்ற பரந்த ஆழ­மான அறி­வில்­லாத நிலையை நீக்­கி­விட வழி­வகை செய்ய வேண்டும் என்ற மனோ­நிலை அவர்­க­ளிடம் காணப்­ப­டு­கி­றது.

இவை­க­ளுக்கு மேலாக இவை அனைத்­தையும் எமது நாட்டில் செயற்­ப­டுத்­து­வ­தற்கு எமது அரசு அனு­ம­திக்க வேண்டும். அடுத்­த­தாக இவை­க­ளுக்­கான திட்­டங்கள் தீட்­டப்­ப­ட­வெண்டும். திட்­டங்­களை தீட்­டு­வ­தற்கு சரி­யான புள்­ளி­வி­வரங்கள் சேக­ரிக்­கப்­ப­ட­வேண்டும், புள்­ளி­வி­வ­ரங்­க­ளி­னூ­டாக செயற்­பா­ட்டுத்திட்­டங்­களை வரை­வுக்­குட்­ப­டுத்தும் போதுதான் எவ்­வ­ளவு நிதி தேவைப்­படும் என்­பது தெரிய­வரும். இந்­த ­நி­தியை வெளிநாட்­டி­லி­ருந்து பெற­வேண்டும்.

இதற்­கு­மே­லாக, இவ்­வா­றான நிதியை கையாள்­வ­தற்கும் செயற்­பாட்­டுக்­கு­மான செய­லணி ஒன்­றி­ருத்தல் வேண்டும். இவை­யெல்லாம் ஒரு சின்­னக்­கா­ரி­ய­மா­காது. வடக்கு, கிழக்கில் ஊன­முற்­ற­வர்­களை கணக்­கெ­டுப்­பது என்பது ஒரு சின்னக்காரியமா? இல்லவேஇல்லை! அதேபோன்று எம்மத்தியிலுள்ள இயற்கைவளங்கள் என்ன? அவ்வளங்களை வைத்து என்ன தொழில் செய்யலாம்? அவ்வாறான தொழில்களைச் செய்வதற்கு நம்மவர்களுக்கு அறிவு, ஆற்றல், அனுபவம் இருக்கிறதா? உற்பத்திப்பொருளுக்கு சந்தை வாய்ப்பு உள்ளதா என்பவைகளை ஆராய வேண்டும். அந்தந்த விபரங்களை வெவ்வேறாக திரட்டினால்தான் ஒரு செயற்பாட்டு மதிப்பீடு, நிதி மதிப்பீடு ஆகிய அறிக்கைகளை தயாரிக்கமுடியும். இது ஒருதனிமனிதனால் செய்யக்கூடிய காரியமன்று. ஆகையினால் இதனை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சாதுரியமாகவும், இலாவகமாகவும் கையாளும் என்று நம்புகிறேன்.புலம் பெயர் கனடா தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்தளவுக்கு துரிதமாக இயங்கி நமக்கு உதவ வந்திருப்பதையிட்டு நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். இதே நேரத்தில் அரசோடு பேசி அரசை நமது வழிக்கு கொண்டுவருவதையோ எம்மோடு அரசை இணங்கவைப்பதையோ எமது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கையாளும்என்று கூறிக்கொள்கிறேன்.

இதைவிட கனடாவின் சில மாநிலங்களுக்கு நாங்கள் அழைக்கப்பட்டிருந்தோம். அங்கு எங்களுக்கு ஆங்காங்கே வாழுகின்ற மக்களால் வரவேற்பு அளிக்கப்பட்டு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இது முதலீட்டுக்கு அங்கு வாழ்கின்ற புலம்பெயர் மக்களை ஒரு வகையில் உசுப்பேற்றுவதாகவும் இருந்தது. உண்மையில் அவர்கள் எங்களை அழைத்து விழாக்களை நடத்தியது அவர்களுக்கு ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்தியது என்பதை நாங்கள் உணர்ந்தோம். அந்த உறவை இன்னும் இன்னும் மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்திவருகிறோம் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-02-25#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.