Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேர்தல் கமிஷன் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையில், அ.தி.மு.க.,வை கைப்பற்ற, பன்னீர்செல்வம் அணியினர், சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

Featured Replies

 

தேர்தல் கமிஷன் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையில், அ.தி.மு.க.,வை கைப்பற்ற, பன்னீர்செல்வம் அணியினர், சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

 

Tamil_News_large_1718644_318_219.jpg

சசிகலாவின் பொதுச்செயலர் பதவி பறிபோனால், பொதுக்குழுவை கூட்டவும் திட்டமிட்டுள்ளனர். பன்னீர்செல்வம், மார்ச் 1ல், புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என, அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

அ.தி.மு.க.,வினர், சசிகலா அணி, பன்னீர் செல்வம் அணி என, இரண்டாக பிரிந்துள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் ஆட்சியை தக்க வைக்க, பன்னீர்செல்வம் முடிவு செய்தார். ஆனால், சசிகலா தரப்பினர், எம்.எல்.ஏ.,க் களுக்கு ஆசை வார்த்தை கூறி, தங்கள் விசுவாசியான இடைப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி, ஆட்சியை தங்கள் வசமாக்கிவிட்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சசிகலா, சிறைக்கு செல்லும் முன், தங்கள் குடும்பத்தை விட்டு கட்சி போய் விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்.

அதனால்,தன் அக்கா மகன் தினகரனை, துணை பொதுச்செயலராக நியமித்தார்.

கட்சியும் ஆட்சியும், அவர்கள் கட்டுப்பாட்டில் வந்தாலும் தொண்டர்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. பிப்., 24ல், கட்சி அலுவலகத் தில் நடந்த, ஜெ., பிறந்த நாள் விழாவிற்கு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவில்லை. ஆனால், ஆர்.கே.நகரில், பன்னீர் செல்வம் பங்கேற்ற விழாவில், கட்சியினர் பெரும் திரளாக பங்கேற்றனர். இது, பன்னீர் செல்வம் தரப்பிற்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

அதன்தொடர்ச்சியாக, கட்சியை கைப்பற்ற வியூகங்கள் வகுக்கும் பணியை, சுறுசுறுப்பாக துவக்கி உள்ளனர். 'சசிகலா பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது' என அறிவிக்கக் கோரி, தேர்தல் கமிஷனில் மனு கொடுத்துள்ள னர். தேர்தல் கமிஷனும், வரும், 28க்குள் பதில் அளிக்கும்படி, சிறையில் உள்ள சசிகலாவுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

இவ்விவகாரத்தில், சசிகலாவை பொதுச்செய லராக தேர்வு செய்தது செல்லாது என, தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்புடன், பன்னீர்செல்வம் அணியினர் காத்திருக்கின்ற னர். தேர்தல் கமிஷன் அவ்வாறு அறிவித்தால், உடனே பொதுக் குழுவை கூட்டி, பொதுச் செய லர் தேர்தலை அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக, மண்டல வாரியாக, கட்சி நிர்வாகி கள், தொண்டர்கள் மற்றும் பொது மக்களை சந்தித்து பேச, பன்னீர்செல்வம் முடிவு

 

செய்துள்ளார். அதற்கான பயணத் திட்டமும் தயாராகி வருகிறது. பதவியில் உள்ள, எம்.எல். ஏ.,க்கள் தவிர,மற்றவர்களின் ஆதரவு இருப்ப தால், கட்சியை எளிதாக கைப்பற்றி விடலாம் என, பன்னீர் செல்வம் தரப்பினர் நம்புகின்ற னர்.அதே நேரத்தில், தேர்தல் கமிஷனின் நெருக்கடியால் இருந்து, எப்படி தப்புவது என்ற தீவிர ஆலோசனையில் உள்ள சசிகலா தரப்பினர், பன்னீர்செல்வம் அணியினரின் சுறுசுறுப்பை பார்த்து, கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு பாதக மாக தீர்ப்பு வந்தது போல, தேர்தல் கமிஷனும், பொதுச்செயலர் விவகாரத்தில் சிக்கலான தீர்ப்பை அளித்து விட்டால் என்ன செய்வது என்றும் கலக்கம் அடைந்துள்ளனர்.
 

அடுத்த மாதம் புதிய அறிவிப்பு?


அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளில், பெரும்பாலானோர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித் துள்ளனர். அவர்கள், சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக, பல கருத்துக்களை பரப்பி வருகின் றனர். தற்போது, 'ஓ.பி.எஸ்., பார் தமிழ்நாடு' என்ற தலைப்பில், புதிய பதிவை வெளியிட்டுள் ளனர்.அதில், 'இனி லட்சியங்களை அடைய, லட்சங்கள் தேவையில்லை' என்ற வாசகத்
துடன், 'மார்ச் 1 வரை காத்திருங்கள்' என, குறிப் பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மார்ச் 1ல், பன்னீர்செல்வம் புதிய அறிவிப்பை வெளியிடு வார் என, அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1718644

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.