Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் 1972ல் நடந்தது மீண்டும் திரும்புமா?

Featured Replies

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
1972ல் நடந்தது மீண்டும் திரும்புமா?
 
 
 

சபாநாயகர் தனபால் மீது, தி.மு.க., கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம், விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டால், சட்டசபையில், 1972ல் நடந்த சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளது.

 

Tamil_News_large_171843820170226001042_318_219.jpg

தி.மு.க.,வில் இருந்து, எம்.ஜி.ஆர்., வெளி யேற்றப்பட்ட நேரத்தில், 1972 டிசம்பர், 2ல், சட்ட சபை கூட்டம் கூடியது. கருணாநிதி தலைமை யிலான அமைச்சரவை மீது, நம்பிக்கை யில்லா தீர்மானத்தை,எம்.ஜி.ஆர்., கொண்டு வந்தார். அவருக்கு ஆதரவாக, சபாநாயகர் மதியழகன் செயல்பட்டார்.

எம்.ஜி.ஆர்., கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில், 'முதல்வர் பதவியை, கருணாநிதி ராஜினாமா செய்யலாம்' என, மதியழகன் அறிவித்தார். ஆனால், சட்டசபை முன்னவரும்,அமைச்சருமான நெடுஞ்செழியன், சபாநாயகர் மதியழகன் மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து,

உடனே விவாதத்துக்கு எடுக்க வேண்டும் என, பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் விரும்புவதாக தெரிவித்தார்.

'துணை சபாநாயகர் சீனிவாசன், சபாநாயகராக செயல்படுவார்' என, அறிவித்தார். உடனே, சபாநாயகரின் இருக்கையில், சீனிவாசன் அமர்ந்தார். அதை பார்த்த, சபாநாயகர் மதியழகன், அருகில் இருந்த நாற்காலியில்அமர்ந்தார். ஒரே நேரத்தில், சீனிவாசனும், மதியழகனும் சபையை நடத்த பெரும் குழப்பம் ஏற்பட்டது.

அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்து கொள்வதாக கூறி, எம்.ஜி.ஆரை பேசும்படி, மதியழகன் கூறினார். இதற்கிடையில், சபாநாயகர் மதியழகன் மீது, நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார் சீனிவாசன். எம்.ஜி.ஆருக்கும், மதியழகனுக்கும், 'மைக்' இணைப்பு துண்டிக்கப்பட்டது. சிறிது நேரத் துக்குள், 176 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன், சபா நாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறை வேறியதாக அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆரும், மதியழகனும் சபையில் இருந்து வெளியேறினர். பின், 1977 தேர்த லில்,வெற்றி பெற்று முதல்வரானதும், எம்.ஜி.ஆர்., சட்டசபைக்குள் சென்றார்.

கடந்த, 2006 - 11, தி.மு.க., ஆட்சி காலத்தில், சபாநாயகர் ஆவுடையப்பன் மீது, அ.தி.மு.க., நம்பிக்கை யில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது.

 

அதன் மீதான விவாதம், துணை சபாநாயகர் துரைசாமி முன்னிலையில் நடந்தது.முடிவில், குரல் ஓட்டெடுப்பில், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. சட்டசபை யில், முதல்வர் இடைப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீதான, நம்பிக்கை ஓட்டெடுப்பு, பிப்., 18ல் நடந்தது. அப்போது, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப் பட்டனர்.

இதையடுத்து, சபாநாயகர் தனபால் மீது, தி.மு.க., நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. தற்போது, தி.மு.க., கூட்டணி, அதிக, எம்.எல்.ஏ.,க்களை பெற்று இருப்பதாலும், 11 அ.தி.மு.க., அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்களும், அரசுக்கு எதிராக இருப்ப தால், தனபால் மீதான நம்பிக்கை யில்லா தீர்மானத்தின் போது, கடும் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1718438

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.