Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“எம்.எல்.ஏ-க்களை இழுக்க முடியாதா என்று கேட்கிறார்கள்!’’ – ஸ்டாலின் கலகல

Featured Replies

“எம்.எல்.ஏ-க்களை இழுக்க முடியாதா என்று கேட்கிறார்கள்!’’ – ஸ்டாலின் கலகல

 

ட்டமன்றத்தில் தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் வெளியேற்றப் பட்டதைக் கண்டித்து, கடந்த 22-ம் தேதி தமிழகம் முழுவதும், தி.மு.க சார்பில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். சென்னையில் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் போராட்டத்தில் குதித்தார்கள்.

p34a1.jpg

இந்தப் போராட்டத்துக்காக, முதல் நாள் இரவே திருச்சி வந்துவிட்ட ஸ்டாலின், உண்ணாவிரதப் பந்தலுக்கு காலை 8.40 மணிக்கு வந்தார். 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ-க்கள் லால்குடி சவுந்தர்ராஜன், துறையூர் ஸ்டாலின் குமார், திருவெறும்பூர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கிய ராஜ், ஆர்.சி.பாபு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விவசாய சங்கத் தலைவர்கள் பூ.விஸ்வநாதன், அய்யாக்கண்ணு ஆகியோர் கலந்துகொண்டனர்.

சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு, அன்றைய தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விவரங்களை உண்ணாவிரதப்பந்தலில் இருந்து கொண்டே அப்டேட் செய்து கொண்டிருந்தார் ஸ்டாலின்.

p34.jpg

போராட்டத்தில் பேசிய பலரும் ‘ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்’ என புகழ்ந்து தள்ளினார்கள். ‘‘தலித்துகள் தேர்தலில் போட்டியிட முடியாமல் இருந்த பாப்பாப்பட்டி, கீரிப்பட்டியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்திய இயக்கம், அருந்ததிய சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக 3 சதவிகிதம் உள்ஒதுக்கீடு தந்த இயக்கம்... தி.மு.க! இப்படிப்பட்ட பேரியக்கத்தைச் சார்ந்த எங்களை நோக்கி, சாதி பார்த்து தன்னை இழிவுபடுத்திவிட்டதாக சபாநாயகர் சொல்வதா?’’ என தனபாலுக்குப் பதிலடி கொடுத்தார் திருச்சி சிவா.

பள்ளிக் குழந்தைகள், மாணவர்கள், பெண்கள் எனப் பலரும் உண்ணாவிரத மேடைக்கே வந்து, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். ஆதரவு தெரிவிக்க வந்த மாணவர்கள், சசிகலாவுக்கு எதிராக கோஷங்கள் போட்டனர். திருச்சி சிவா, அவர்களுக்கு வாசகங்களை எழுதிக் கொடுத்தார்.

இறுதியாகப் பேசிய ஸ்டாலின், “இந்தப் போராட்டம் தி.மு.க-வின் போராட்டம் அல்ல. தமிழகத்தில் நடைபெறும் பினாமி ஆட்சியை அப்புறப்படுத்தக்கூடிய ஒரு போராட்டம். இதற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இனி தி.மு.க-வினர், ‘மன்னார்குடி மாஃபியா’ என அழைக்கக்கூடாது. அந்தப் பகுதி மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, இனி ‘மாஃபியா கும்பல்’ என்றுதான் அழைக்க வேண்டும். தமிழகத்தில் பினாமி ஆட்சி நடைபெறுகிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு, தி.மு.க நினைத்திருந்தால் இந்த ஆட்சியைக் கலைக்கச் செய்திருக்க முடியும். ‘20 எம்.எல்.ஏ-க்களை உங்களால் இழுக்க முடியாதா?’ என எல்லோரும் கேட்கிறார்கள். ஆனால், தேர்தலை சந்தித்துத்தான் தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும்.

இந்த ஆட்சியின் ரிமோட் கன்ட்ரோல் பெங்களூரு சிறையில் உள்ளது. ஒருபோதும் இந்த பினாமி ஆட்சியை ஏற்கமாட்டோம். தி.மு.க-வுக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துத்தான் நாங்கள் போராடுகிறோம்.

ஜெயலலிதா இறந்தவுடன் ஓ.பி.எஸ் முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டார். கொஞ்சநாளில், முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்த கையோடு ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தவர், சசிகலா தன்னை மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கியதாகக் கூறினார். ‘இப்போது 10 சதவிகித உண்மைகளை மட்டுமே தெரிவித்துள்ளேன். மீதியை விரைவில் சொல்வேன்’ என்றார். 10 சதவிகிதத்துக்கே இப்படி என்றால், மீதி 90 சதவிகிதத்துக்கு எப்படி இருக்குமோ! அப்பப்பா...
p34b.jpg
புதிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தில் இருந்தால், திராணி இருந்தால், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தட்டும். இந்த ஆட்சி நீடித்து நிலைக்காது. விரைவில் மக்கள் உங்களைத் தூக்கி வீசுவார்கள். அப்படித் தூக்கி எறிந்ததும் தி.மு.க ஆட்சி அமைக்கும். எங்களது முதல் கையெழுத்து ‘ஜெயலலிதா மரணத்தின் மீதான நீதி விசாரணை நடத்தப்படும்’ என்பதாகத்தான் இருக்கும். இது உறுதி!’’ என்றார்.

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்


திருமண நாளில் உண்ணாவிரதம் இருந்தவர்!

ண்ணாவிரதம் நடைபெற்ற பிப்ரவரி 22-ம் தேதி திருவெறும்பூர் எம்.எல்.ஏ-வும், தி.மு.க இளைஞரணி மாநில துணைச் செயலாளருமான அன்பில் மகேஷுக்கு திருமண நாள். அன்று காலை முதல் மாலை வரை உண்ணாவிரதப் பந்தலிலேயே உட்கார்ந்திருந்தவர், தமிழகம் முழுவதும் நடைபெற்றுவந்த போராட்டங்கள் குறித்து ஸ்டாலினுக்கு அப்டேட் செய்துகொண்டிருந்தார்.

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.