Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்

Featured Replies

ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்

06-13-06HRC-4a0faa7940ff1ce80b06219c451b1c491dce0f73.jpg

 

- லியோ நிரோஷ தர்ஷன் - 

சவால்­களை எதிர்­கொள்ள அர­சாங்கம் பல முனை­களில் வியூகம்

* சர்­வ­தேச அமைப்­புகள் போர்க்­கொடி

*ஆதா­ரத்­துடன் மீண்டும் போர்க்­குற்­றங்கள்

*பொறுப்­புக்­கூ­ற­லுக்கு கால அட்­ட­வணை

பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் அர­சாங்கம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் தொடர்ந்தும் கால அவ­கா­சத்தைக் கோர உள்­ளது. இதற்கு கடு­மை­யாக எதிர்ப்­பு­களை வெளி­யிட்­டுள்ள அரச சார்­பற்ற சர்­வ­தேச அமைப்­புக்கள் தமிழ் மக்கள் மத்­தியில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்தி அவர்­களின் தலை­வி­தியை அவர்­களே நிர்­ண­யிக்கும் சந்­தர்ப்­பத்தை ஐ.நா. ஏற்­ப­டுத்திக் கொடுக்க வேண்டும் என்று கோரி­யுள்­ளன. 

இதே­வேளை, அர­சாங்கம் உறுப்பு நாடு­க­ளுடன் ஏற்­க­னவே இரா­ஜ­தந்­திர ரீதியில் கலந்­தா­லோ­சித்து நெருக்­க­டி­களை எவ்­வாறு எதிர்­கொள்­வது என்­பது தொடர்பில் மேலும் பல முனை­களில் வியூ­கங்­களை வகுத்து செயற்­ப­டு­கின்­றது.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் நாளை திங்கட் கிழமை ஜெனீ­வாவில் ஆரம்­பிக்­கப்­பட உள்­ளது. இந்தக் கூட்­டத்­தொ­டரில் கலந்­து­கொள்­வ­தற்­காக வெளி­வி­வ­கார அமைச்சர் மங்கள சம­ர­வீர தலை­மை­யி­லான குழு ஜெனீவா சென்­றுள்­ளது. தொடர்ந்தும் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரையில் இடம்­பெற உள்ள மனித உரி­மைகள் பேர­வையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பான மூன்று அறிக்­கைகள் மற்றும் ஐ.நா. உறுப்பு நாடு­களின் ஐரோப்­பிய பிரிவின் தீர்­மானம் என பல­முனை நகர்­வுகள் இடம்­பெ­ற­வுள்­ளன. 

இந்­நி­லை­யி­லேயே மார்ச் 22ஆம் திகதி இலங்கை தொடர்­பான ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்கை விவா­தத்­துக்கு எடுத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

இலங்­கையின் நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல் மற்றும் மனித உரி­மைகள் நிலையில் ஏற்­பட்­டுள்ள முன்­னேற்­றங்கள் தொடர்­பான ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்கை இந்தக் கூட்­டத்­தொ­டரின் போது சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

2015ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட 30/1 தீர்­மா­னத்­துக்கு அமை­வாக, இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டு நிலை­மை­களை அவ­தா­னித்த பின்னர், ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் சமர்ப்­பிக்கும் விரி­வான அறிக்கை இது­வாகும்.

இதே­வேளை, இந்தக் கூட்­டத்­தொ­டரில், கடந்த ஆண்டு இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த ஐ.நாவின் சிறப்பு அறிக்­கை­யா­ளர்கள் இரு­வரின் அறிக்­கை­களும் சமர்ப்­பிக்­கப்­பட்டு பேர­வையில் விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளன.

சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பான ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யாளர் நில்ஸ் மெல்சர் சமர்ப்­பிக்கும் இலங்கை தொடர்­பான அறிக்கை மீதும் விவாதம் இடம்­பெ­ற­வுள்­ளது.

மேலும் இலங்கை மற்றும் இரண்டு நாடு­க­ளுக்கு மேற்­கொண்ட பய­ணங்­களின் அடிப்­ப­டையில், சிறு­பான்­மை­யினர் விவ­கா­ரங்­க­ளுக்­கான ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் சமர்ப்­பிக்கும் ஆண்டு அறிக்கை குறித்தும் மார்ச் 15ஆம் திகதி பேர­வையில் விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்பில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களை அமுல்­ப­டுத்­து­வது தொடர்பில் நேர அட்­ட­வ­ணை­யொன்று சமர்ப்­பிக்­கப்­பட வேண்­டு­மென மனித உரிமை கண்­கா­ணிப்­பகம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வை­யினால் இலங்கை தொடர்பில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. இந்தத் தீர்­மா­னத்­திற்கு இலங்­கையும் இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது.

எனினும் தீர்­மா­னத்தில் முன் வைக்­கப்­பட்­டுள்ள பரிந்­து­ரைகள் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னவா? என்­பது குறித்து ஆராயும் பொதுக் கால அட்­ட­வ­ணையின் அடிப்­ப­டையில் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மென மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

பாலியல் வல்­லு­றவு மற்றும் சித்­தி­ர­வதை குற்­ற­வா­ளி­க­ளான படை அதி­கா­ரிகள் பற்­றிய தக­வல்­க­ளுடன் பெண்­க­ளுக்கு எதி­ரான பாகு­பா­டு­களை அகற்றும் ஐ.நா. குழு­விடம், அனைத்­து­லக உண்மை மற்றும் நீதிக்­கான திட்டம் சமர்ப்­பித்­துள்­ளது.

தென்­னா­பி­ரிக்­காவின் ஜொஹ­னஸ்­பேர்க்கை தலை­மை­ய­க­மாக கொண்­டி­யங்கும் இந்த அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பா­ள­ராக, அனைத்­து­லக மனித உரி­மைகள் சட்ட நிபுணர் யஸ்மின் சூகா பணி­யாற்­று­கிறார்.

நாளைய கூட்­டத்தில், இந்த விட­யத்தை இலங்கை தரப்­பு­க­ளுடன் ஐ.நா. குழு பகிர்ந்து கொள்ளும் என்றும், நம்­ப­க­மான விசா­ர­ணைகள் நடக்கும் வரையில் இந்த அதி­கா­ரி­களை இடை­நி­றுத்­து­மாறு கோரப்­படும் என்றும் யஸ்மின் சூகா தெரி­வித்­துள்ளார்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் பெயர் மற்றும் ஏனைய விப­ரங்­களை பெண்­க­ளுக்கு எதி­ரான பாகு­பா­டு­களை அகற்றும் ஐ.நா. குழுவின் மூல­மாக இலங்கை எம்­மிடம் கோரி­யி­ருந்­தது . ஆனால் நாங்கள் குற்­ற­வா­ளிகள் பற்­றிய தக­வல்­களை அளித்­துள்ளோம்.

பெண்­க­ளுக்கு எதி­ரான பாகு­பா­டு­களை அகற்றும் ஐ.நா. குழு­வுக்கு அனைத்­து­லக உண்மை மற்றும் நீதிக்­கான திட்டம் சமர்ப்­பித்­துள்ள அறிக்கை, சித்­தி­ர­வதை, மோச­மான பாலியல் தாக்­கு­தல்கள், மற்றும் நீண்­ட­காலம் தடுப்­புக்­கா­வலில் பாலியல் அடி­மை­க­ளாக வைக்­கப்­பட்­டி­ருந்த மூவர் உள்­ளிட்ட பாதிக்­கப்­பட்ட 55 பெண்­களின் சாட்­சி­யங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தாகும் என மனித உரி­மைகள் சட்ட நிபுணர் யஸ்மின் சூகா தெரி­வித்­துள்ளார்.

உள்நாட்டு போரின்போது பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் சாட்­சி­யங்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக ஐக்­கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் இலங்­கை­யுடன் ஒப்­பந்­தத்தை மேற்­கொள்ள வேண்டும். இத­னூ­டாக கடு­மை­யான அச்­சு­றுத்­தல்­களை எதிர் கொள்ளும் பாதிக்­கப்­பட்டோர் மற்றும் சாட்­சி­யங்­களை உறுப்பு நாடு­க­ளுக்கு அழைத்து கொள்ள முடியும் என சர்­வ­தேச மன்­னிப்பு சபை தெரி­வித்­துள்­ளது. 

நீதி , உண்மை மற்றும் இழப்­பீ­டுகள் பொறி­மு­றையின் போது பாதிக்­கப்­பட்டோர் மற்றும் சாட்­சி­களின் பாது­காப்பு தொடர்பில் இலங்­கை­யுடன் அவ­சர ஒப்­பந்­தத்தை ஐக்­கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் மேற்­கொள்ள வேண்டும். இதனை வலி­யு­றுத்தி சர்­வ­தேச மன்­னிப்பு சபை ஐ. நா. மனித உரிமைப் பேர­வையில் எழுத்து மூல சமர்ப்­ப­ணத்தை தாக்கல் செய்­துள்­ளது.

இலங்­கையின் நீதி , உண்மை மற்றும் இழப்­பீ­டுகள் பொறி­மு­றைக்கு தேவை­யான நிதி மற்றும் நிபு­ணர்­களின் ஒத்­து­ழைப்­பு­களை ஐக்­கிய நாடுகள் சபை கட்­டா­ய­மாக அனுப்பி வைக்க வேண்டும். அந்த பொறிமுறையின் சர்வதேச தரத்தை உறுதிப்படுத்துவதற்கு இவ்வாறான ஒத்துழைப்புகள் இன்றியமையாததாகும். அத்துடன் சட்ட சீர்திருத்தம் மற்றும் மீண்டும் ஏற்படுதலை தடுப்பதற்கான உறுதிப்பாடுகளும் வழிமுறைகளும் கையாளப்பட வேண்டும். . 

சர்­வ­தேச சட்­டத்தின் அல்­லது கடு­மை­யான மனித உரிமை மீறல்கள், நியா­ய­மான விசா­ரணை, பாது­காப்பு மற்றும் மரண தண்­ட­னையை சுமத்­து­வ­தற்கு உட்­பட்டும் குற்­றங்கள் சந்­தே­கிக்­கப்­படும் நபர்கள் மீது வழக்குத் தொடர, முயற்­சி­களை ஆத­ரிக்க இலங்கை ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்­ப­துடன் பரஸ்­பர சட்ட உதவி வழங்க சர்­வ­தேச சமூகம் வலி­யு­றுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-02-26#page-1

  • தொடங்கியவர்

ஜெனிவா சமர் இன்று ஆரம்பம்

 

(ரொபட் அன்­டனி)

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்­கட்­கி­ழமை ஐ.நா.மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைனின் உரை­யுடன் ஆரம்­ப­மா­கின்­றது.   

எதிர்­வரும் மார்ச் மாதம் 24 ஆம் திக­தி ­வரை நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடரில் உலக நாடு­களின் மனித உரிமை நிலை­மைகள் குறித்து ஆரா­யப்­ப­ட­வு­டள்­ளது.   

அத்­துடன் இலங்கை தொடர்­பான ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்கை பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் இலங்கை தொடர்­பான பிரே­ரணை ஒன்றும் பிரிட்டன் உள்­ளிட்ட ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க­ளினால் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

இன்று திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்ள முத­லா­வது அமர்வில் ஐக்­கிய நாடு­களின் பொதுச் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ கட்ரஸ் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் உள்­ளிட்டோர் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

மேலும் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர எதிர்­வரும் 28 ஆம் திகதி ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்­கையின் சார்பில் உரை­யாற்­ற­வுள்ளார்.

இம்­முறை கூட்டத் தொடர் இலங்­கைக்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக அமை­ய­வுள்­ளது. விசே­ட­மாக கடந்த 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான ஜெனிவா பிரே­ர­ணையை அர­சாங்கம் எவ்­வாறு அமுல்­ப­டுத்­தி­யது என்­பது தொடர்­பாக ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் எழுத்­து­மூல அறிக்­கையை எதிர்­வரும் 22 ஆம் திகதி சமர்ப்­பிக்­க­வுள்ளார்.

அது­மட்­டு­மன்றி ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­தி­களும் சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­தி­களும் இலங்கை தொடர்­பாக உரை­யாற்­ற­வுள்­ளனர்.

எதிர்­வரும் இரண்டாம் திக­தியும் 15 ஆம் திக­தியும் ஐ.நா. விசேட நிபு­ணர்­களின் இலங்கை தொடர்­பான அறிக்­கைகள் குறித்த விவா­தமும் 23 ஆம் திகதி இலங்கை தொடர்­பான பிரே­ரணை குறித்த விவா­தங்­களும் நடை­பெ­ற­வுள்­ளன. மேலும் 22 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்கை மீதான விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது.

சிறு­பான்மை மக்­களின் விட­யங்­களை ஆராயும் ஐக்­கிய நாடுகள் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் நாடி­யாவின் இலங்கை தொடர்­பான அறிக்கை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்­பான விவாதம் எதிர்­வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

இதன்­போது தனது இலங்கை தொடர்­பான அறிக்­கையின் சுருக்­கத்தை ஐ.நா. விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் மனித உரிமை பேர­வையில் முன்­மொ­ழிவார். தொடர்ந்து உறுப்பு நாடுகள் தமது நிலைப்­பா­டு­களை முன்­வைக்கும்.

 சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் விசேட நிபுணர் வோன் மென்டோஸ் முன்­வைத்த அறிக்கை தொடர்­பான விவாதம் எதிர்­வரும் மார்ச் மாதம் இரண்டாம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

இந்த விவா­தத்­திலும் இலங்கை தொடர்­பாக சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் விசேட நிபுணர் வோன் மென்டோஸ் முன்­வைத்த அறிக்­கையின் பரிந்­து­ரை­களை மேற்­கோள்­காட்டி உறுப்பு நாடுகள் உரை­யாற்­ற­வுள்­ளன.

இம்­முறை கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்பில் உயர்­மட்ட தூதுக்­கு­ழு­வினர் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உள்­ளிட்ட உயர் மட்ட அதி­கா­ரிகள் இந்தக் கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்பில் கலந்­து­கொள்­வார்கள் என எதிர்­பார்க்­கப்­டு­கி­றது. ஜெனி­வா­வி­லுள்ள ஐ.நா. மனித உரிமை பேர­வையில் இலங்கை அலு­வ­ல­கத்தின் பிர­தி­நி­தி­களும் இலங்கை தூதுக்­கு­ழு­வுடன் இணைந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

இம்­முறை இலங்­கையின் சார்பில் முன்­னேற்­றங்­களை வெ ளிப்­ப­டுத்த 18 மாத கால அக­வாசம் கோரப்­ப­ட­வுள்­ளது. அதா­வது பேர­வையில் நாளை உரை­யாற்­ற­வுள்ள அமைச்சர் மங்­கள சம­ர­வீர கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்­கையில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்தின் பின்னர் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் நல்­லி­ணக்க வேலைத்­திட்­டங்கள் மற்றும் தேசிய ஒற்­று­மையை பலப்­ப­டுத்­துதல் ஜன­நா­ய­கத்தை வலுப்­ப­டுத்­துதல் உள்­ளிட்­டவை தொடர்பில் விளக்­க­ம­ளிக்­க­வுள்ளார்.

அத்­துடன் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் அவ­காசம் வேண்டும் என்றும் அமைச்சர் மங்­கள சம­ர­வீர கோரிக்கை விடுக்­க­வுள்ளார்.

இதே­வேளை 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் கால அவ­கா­சத்தை வழங்கும் வகை­யி­லான பிரே­ரணை ஒன்று பிரிட்டன் உள்­ளிட்ட ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க­ளினால் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

அதா­வது இலங்­கைக்கு நல்­லி­ணக்­கத்­தையும் பொறுப்­புக்­கூ­ற­லையும் முன்­னெ­டுக்க மேலும் கால அவ­கா­சத்தை வழங்கும் நோக்­கி­லேயே இவ்­வாறு பிரே­ர­ணை­யொன்று முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த பிரே­ரணை குறித்த வாக்­கெ­டுப்பு மார்ச் மாதம் 23 ஆம் திகதி நடை­பெறும். இலங்கை அதற்கு இணை அனு­ச­ரணை வழங்­கினால் ஒரு­வேளை வாக்­கெ­டுப்­புக்கு விடப்­ப­டாமல் கடந்த 2015 ஆம் ஆண்டில் நடை­பெற்­றதைப் போன்று ஏக­ம­ன­தாக பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­டலாம்.

மேலும் செய்ட் அல் ஹுசேனின் இலங்கை தொடர்­பான அறிக்­கை­யிலும் நல்­லி­ணக்­கத்­தையும் பொறுப்­புக்­கூ­ற­லையும் முன்­னெ­டுக்க இலங்­கைக்கு கால அவ­கா­சத்­தையும் பிரே­ரிப்பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அதனை அடி­யொட்­டி­ய­தா­கவே பிரிட்டன் கொண்­டு­வ­ர­வுள்ள பிரே­ரணை அமையும் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. "

பல்­வேறு நாடுகள் பங்­கேற்பு

கூட்டத் தொடரில் பிரிட்டன், அவுஸ்­தி­ரே­லியா, சுவிடன், பிரான்ஸ், டென்மார்க், நெதர்­லாந்து, கனடா, பெல்­ஜியம் உள்­ளிட்ட நாடு­களின் பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்ள நிலையில் அவர்கள் இலங்கை விக­வாரம் தொடர்­பிலும் பிரஸ்­தா­பிப்­பார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

டென்­மார்க்கின் வெளி­வி­வ­கார அமைச்சர் அன்டஸ் சாமுவேல் சென், நெதர்­லாந்தின் வெளி­வி­வ­கார அமைச்சர் பேர்ட் கொன்டஸ், கன­டாவின் வெளி­வி­வ­கார அமைச்சர் கிரிஸ்­டியா பீரிலன், பிரான்ஸின் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீன் மார்க், பிரிட்­டனின் உள்­ளிட்­டோரும் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

சுவீ­டனின் வெளி­வி­வ­கார அமைச்சர் மாகட் வோல்ஸ்ட்ரோம், பொது­ந­ல­வாய அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் பற்றீசியா ஸ்கொட்லன்ட், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பீட்டர் மோரேர் ஆகியோரும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் ஆரம்ப அமர்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

இதேவேளை சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித கண்காணிப்பகம் என்பன இம்முறை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் பல யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக சர்வதேச பங்களிப்புடன் கூடிய விசாரணை பொறிமுறையை இந்த அமைப்புக்கள் முன்வைக்கும் என கூறப்படுகின்றது. எனினும் அரசாங்கம் கால அவகாசத்தையே கோரும் என கூறப்படுகின்றது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-27#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.