Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனின் பொறுமைக்கு வந்திருக்கும் சோதனை

Featured Replies

சம்பந்தனின் பொறுமைக்கு வந்திருக்கும் சோதனை

BC-9ed736e78eeb802840dae0211acb362cb6c04094.jpg

 

பாரா­ளு­மன்­றத்தில் கடந்த புதன்­கி­ழமை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை ஒன்றைக் கொண்டு வந்து உரை­யாற்­றிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன், அர­சாங்கம் மீதான அதி­ருப்­தி­களைக் கொட்டித் தீர்த்­தி­ருந்தார்.

முன்­னைய அர­சாங்­கங்­களைப் போலவே தற்­போ­தைய அர­சாங்­கமும், தம்மை நடத்­து­வ­தாக, தமிழ் மக்கள் உணர்­கி­றார்கள் என்றும், எமது மக்கள் இந்த அர­சாங்­கத்­தினால் நடத்­தப்­ப­டு­கின்ற முறை­யா­னது கடு­மை­யான அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்றும் சம்­பந்தன் தனது உரையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அர­சி­ய­ல­மைப்பு மாற்றம், அர­சியல் கைதிகள் விடு­தலை, காணா­மற்­போனோர் பிரச்­சினை, காணிகள் விடு­விப்பு, போர்க்­குற்ற விசா­ரணை என்­பன போன்­ற­வற்றை, தற்­போ­தைய அர­சாங்கம் தீவி­ர­மாக முன்­னெ­டுக்க வேண்­டிய விட­யங்­க­ளா­கவே தமிழ் மக்கள் கரு­து­கி­றார்கள்.

இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சாங்கம் ஆரம்­பத்தில் இருந்தே முக்­கி­யத்­துவம் அளிப்­பதை தவிர்த்து வந்­தி­ருக்­கி­றது, பாராளு­மன்றத் தேர்­தலைக் காரணம் காட்டி 100 நாள் செயற்­திட்­டத்­துக்குள் இந்த விட­யங்கள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை.

அதற்குப் பின்­னரும், தமிழ் மக்­களின் இத்­த­கைய பிரச்­சி­னை­களில் அர­சாங்கம் தீவிர கவனம் செலுத்தத் தவ­றி­யி­ருக்­கி­றது.

இதனால், தமிழ் மக்கள் மத்­தியில் அதி­ருப்­தியும் வெறுப்பும் அதி­க­ரித்து இப்­போது தொடர் போராட்­டங்­களை நடத்­து­கின்ற அள­வுக்கு இந்த அதி­ருப்தி அலை மாற்­ற­ம­டைந்­தி­ருக்­கி­றது.

இந்தக் கட்­டத்தில், அர­சாங்கம் மாத்­தி­ர­மன்றி, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் கூட நெருக்­க­டி­களைச் சந்­திக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

அர­சி­ய­ல­மைப்பு மாற்றம், போர்க்­குற்ற விசா­ரணை உள்­ளிட்ட விவ­கா­ரங்­களில் அர­சாங்கம் மெது­வா­கவே முன்­ன­கர முனை­கி­றது. மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணியின் கடு­மை­யான பிர­சா­ரங்கள் அர­சாங்­கத்தை திண­ற­டிக்­கின்­றன என்­பதில் சந்­தே­க­மில்லை.

இந்த விட­யங்­களில் அர­சாங்கம் எந்த நகர்வை மேற்­கொண்­டாலும், அதனை தேசிய பாது­காப்­புக்­கான அச்­சு­றுத்­த­லா­கவோ, நாட்டின் இறை­மைக்­கான அச்­சு­றுத்­த­லா­கவோ பிர­சா­ரப்­ப­டுத்­து­வதில் கூட்டு எதி­ரணி கவனம் செலுத்­து­கி­றது.

குற்­றச்­சாட்­டு­களின் பேரில் இரா­ணு­வத்­தி­னரை கைது செய்தால், அவர்­களை சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் நிறுத்த அர­சாங்கம் திட்­ட­மி­டு­கி­றது. போர் வீரர்­களைப் பழி­வாங்­கு­கி­றது என்ற குரல்கள் எழுப்­பப்­ப­டு­கின்­றன.

அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்தில் அதி­கா­ரப்­ப­கிர்வு பற்றிப் பேசத் தொடங்­கி­யதும், நாட்டைப் பிரிக்க சதி என்றும், சமஷ்டி மூலம் நாடு பிரியப் போகி­றது என்றும் பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

தற்­போ­தைய அர­சாங்கம் எந்த முன்­னேற்­றத்­தையும் எட்ட விடாமல், மஹிந்த ராஜ­பக்ஷ அணி­யினர் செய்யும் பிர­சா­ரங்கள், சிங்­கள மக்கள் மத்­தியில் எடு­ப­டவே செய்­கி­றது.

இன்னும் சில மாதங்­களில் உள்­ளூ­ராட்சித் தேர்தல் மற்றும் மாகா­ண­சபைத் தேர்­தல்­களை அடுத்­த­டுத்து சந்­திக்­க­வுள்ள அர­சாங்­கத்­துக்கு கூட்டு எதி­ர­ணியின் பிர­சா­ரங்கள் அச்­சு­றுத்­த­லாக இருக்­கின்­றன.

சிங்­கள மக்கள் தம்மை நிரா­க­ரித்து விடு­வார்­களோ என்ற அச்சம் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு இருக்­கி­றது. அதனால், தமி­ழர்கள் கேட்­கின்ற அனைத்­தையும் கொடுக்­கின்ற அர­சாங்­க­மாக இது இல்லை என்று காட்ட முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது.

அர­சாங்­கத்­தினால், தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் விட­யத்தில் எதையும் வெளிப்­ப­டை­யாகப் பேசவோ, செய்­யவோ முடி­யாத நிலை காணப்­ப­டு­கி­றது.

சிங்­கள மக்­க­ளிடம் எதிர்ப்­பு­ணர்வு தோன்­றாமல் நாசூக்­காக நடந்து கொள்­ளவே அர­சாங்கம் விரும்­பு­கி­றது. அர­சி­ய­ல­மைப்பு மாற்றம், போர்க்­குற்ற விசா­ரணை போன்ற விட­யங்­களில், அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள், மிக மிக மந்­த­மா­கவே உள்­ளன.

இந்த விட­யங்­களில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் வேகம் போதாது என்ற கருத்து சர்­வ­தேச அளவில் காணப்­பட்­டாலும், சிங்­கள மக்­களின் வெறுப்­பு­ணர்வைக் கருத்தில் கொண்டு மெது­வா­கவே நகர முனை­கி­றது.

அதே­வேளை, அர­சாங்­கத்தின் இந்த மந்­த­மான நகர்வு தமிழ் மக்­க­ளுக்கு எரிச்­ச­லையும், அதி­ருப்­தி­யையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்­கை­யீ­னத்தை தொடர்ந்து அதி­க­ரிக்கச் செய்து வரு­கி­றது.

அதனால் தான், இதற்கு முந்­திய அர­சாங்­கங்­களைப் போலவே, இந்த அர­சாங்­கமும் தம்மை நடத்­து­வ­தாக தமிழ் மக்கள் அதி­ருப்­தி­ய­டைந்­தி­ருக்­கின்­றனர் என்ற கருத்தை இரா.சம்­பந்தன் நாடா­ளு­மன்­றத்தில் முன்­வைத்­தி­ருந்தார்.

இலங்­கையில் ஆட்­சியில் இருந்த ஒவ்­வொரு அர­சாங்­கமும், காலத்­துக்குக் காலம் தமிழ் மக்­களை இன்­ன­லுக்­குட்­ப­டுத்தி வந்­தி­ருக்­கின்­றது. உரி­மைகள் பறிப்பு, இனப்­ப­டு­கொ­லைகள், இடம்­பெ­யர்­வுகள், போர் நட­வ­டிக்­கை­கள் என்­ப­ன­வற்­றுக்குக் கார­ண­மாக இருந்த அர­சாங்­கங்கள் மீது தமிழ் மக்கள் வெறுப்­ப­டைந்­தி­ருந்­தனர்.

குறிப்­பாக, ஜே.ஆர்.ஜய­வர்த்­தன, பிரே­ம­தாச, டி.பி.விஜே­துங்க, சந்­தி­ரிகா குமா­ர­ணதுங்க, மஹிந்த ராஜ­பக்ஷ ஆட்­சிக்­கா­லங்­களில் தமிழ் மக்கள் பெரும் சோத­னை­க­ளையும் வேத­னை­க­ளையும் அனு­ப­வித்­தனர். இந்த அர­சாங்­கங்­களைத் தெரிவு செய்­வ­தற்கு தமிழ் மக்கள் தமது நேர­டி­யான பங்­க­ளிப்பை வழங்­கி­யி­ருக்­க­வில்லை.

ஆனால், தற்­போ­தைய மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்­கத்தின் தெரிவில் தமிழ் மக்கள் கூடுதல் நம்­பிக்­கையை வைத்து வாக்­க­ளித்­தி­ருந்­தனர். தமிழ் மக்­களின் அதி­க­பட்ச வாக்­கு­களால் தான் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாகும் வாய்ப்புக் கிடைத்­தது.

ஆனால் இன்று எதிர்­பார்ப்­புகள் பொய்த்துப் போன நிலையில் தமிழ் மக்கள் இருக்­கி­றார்கள். சிங்­கள மக்­களின் எதிர்ப்பைச் சந்­திக்கக் கூடாது என்­ப­தற்­காக, தமிழ் மக்­களின் வெறுப்பை அர­சாங்கம் சம்­பா­தித்துக் கொண்­டி­ருக்­கி­றது.

பெரும்­பான்மைச் சிங்­க­ள­வர்­களின் ஆத­ரவு அர­சாங்­கத்­துக்குத் தேவை என்­பது மறுக்க முடி­யாத உண்மை. அதற்­காக, சிங்­க­ள­வர்­களை அதி­ருப்­திக்­குள்­ளாக்கக் கூடாது என்­ப­தற்­கான அர­சாங்கம் அதி­க­பட்ச பொறு­மையைக் கடைப்­பி­டிப்­பதும், தமி­ழர்­களின் அதிக பட்ச பொறுமை சோத­னைக்­குள்­ளாக்­கப்­ப­டு­வதும் நியா­ய­மற்­றது.

இந்தக் கட்­டத்தில் தான் அர­சாங்கம் மீது தமிழ் மக்கள் நம்­பிக்கை இழக்­கின்ற நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது,

இந்­த­நிலை அர­சாங்­கத்­துக்கு மாத்­திரம் ஏற்­ப­ட­வில்லை. இந்த அர­சாங்­கத்தைப் பத­விக்குக் கொண்டு வரு­வதில் முக்­கிய பங்­காற்­றிய, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டு­கின்ற போதிலும் தமது பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைக்­கின்ற திரா­ணி­யற்­ற­தாக இருக்­கி­றது என்ற காட்­ட­மான விமர்­ச­னமும், அதி­ருப்­தியும் தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

அண்­மையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற போராட்­டங்­களில் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற கருத்­துக்கள், அர­சாங்­கத்­துக்கு மாத்­தி­ர­மன்றி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் கூட, எதி­ரா­னவை தான்.

ஆட்­சியை மாற்­று­கின்ற அதி­காரம் படைத்­த­வர்­க­ளாக இருந்த கூட்­ட­மைப்பு இன்று தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க முடி­யாத கையறு நிலை­யிலா இருக்­கி­றது என்ற கேள்வி தமிழ் மக்­க­ளிடம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

தேசிய நல்­லி­ணக்­கத்­துக்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அதி­க­பட்ச பொறு­மை­யையும், சகிப்­புத்­தன்­மை­யையும் கடைப்­பி­டிக்க முனைந்­ததன் ஒரு விளை­வாகக் கூட இது இருக்­கலாம்.

தொடர்ச்­சி­யாக, முரண் அர­சியல் செய்து வந்த கூட்­ட­மைப்பு, தமது வழக்­க­மான பாதையில் இருந்து சற்று விலகத் தொடங்­கி­ய­துமே, கடு­மை­யான விமர்­ச­னங்­களைச் சந்­திக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்வு காணப்­ப­டு­வ­தற்கு சிங்­கள மக்­களின் முழு­மை­யான ஆத­ரவு அவ­சியம் என்­பதால் தான், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அதிகம் அடக்கி வாசிக்­கி­றது. இதனை சம்­பந்தன், சுமந்­திரன் போன்­ற­வர்கள் பல­த­ட­வைகள் எடுத்துக் கூறி­யுள்­ளனர்.

குறிப்­பாக, சமஷ்டி பற்­றிய நிலைப்­பா­டு­களை பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்த தயங்­கு­கின்­றமை, இதில் முக்­கி­ய­மா­னது. சமஷ்டி என்­றாலே பிரி­வினை தான் என்று சிங்­கள மக்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்ற கருத்தை உடைக்க முனை­யாமல், சமஷ்டி பற்­றிய பேசாமல் தவிர்க்கும் உத்­தியை சம்­பந்தன் கையா­ளு­கிறார்.

இது சம்­பந்தன் சமஷ்­டியைக் கைவிட்டு ஒற்­றை­யாட்சித் தீர்­வுக்குத் தயா­ரா­கிறார் என்ற குற்­றச்­சாட்டை எதிர்­கொள்ளும் நிலையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

போர்க்­குற்ற விசா­ரணை விவ­கா­ரத்­திலும், ஒட்­டு­மொத்த இரா­ணு­வத்தின் மீதும் போர்க்­குற்றம் சுமத்­த­வில்லை என்றும், தவ­றி­ழைத்த சில படை­யினர் மீது நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்­து­கிறோம் என்றும் சம்­பந்தன் சமா­ளிக்க முயன்­றி­ருக்­கிறார்.

திட்­ட­மிட்ட இனப்­ப­டு­கொலை நிகழ்த்­தப்­பட்­ட­தாக தமிழர் தரப்பு தொடர்ச்­சி­யாக கூறி வந்த குற்­றச்­சாட்டை, சம்­பந்­தனின் இந்தக் கருத்து உடைக்கும் வகையில் இருக்­கி­றது. ஒட்­டு­மொத்த அர­ச­ப­டை­க­ளையும் பகைத்துக் கொள்ளக் கூடாது என்று அவர் கரு­தி­யி­ருக்­கலாம்.

ஆனால், போரின் போது, இரா­ணுவம் எவ்­வாறு நடந்து கொண்­டது என்­பதை அறிந்த தமிழ் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில், சம்­பந்­தனின் இந்தக் கருத்து நிச்­சயம் ஏமாற்­றத்தை அளித்­தி­ருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு சிங்­கள மக்­களின் ஆத­ரவு அவ­சியம் என்­பதால், சமஷ்டி பற்றிப் பேசாமலும், இராணுவத்தினர் குழப்பி விடக் கூடாது என்பதற்காக, ஒட்டுமொத்த இராணுவம் மீதும் போர்க்குற்றம் சுமத்தாமலும், இருந்து விடப் பார்க்கிறார் சம்பந்தன்.

இதன் விளைவு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான நம்பகத்தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் கவனிக்கத் தவறியிருக்கிறார்.

சிங்கள மக்களிடம் அரசாங்கமும், தமிழ் மக்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அவநம்பிக்கைகளைச் சம்பாதிக்கத் தொடங்கியுள்ள நிலையானது, நல்லிணக்கம் பற்றிய சந்தேகங்களை வலுப்படுத்துகிறது.

இரண்டு தரப்பு மக்களுக்கும் இடையில் உள்ள புரிதலின்மையையும், இடைவெளியையும் தான் இது காட்டுகிறது. இந்தக் கிணறைத் தாண்டுவது ஒன்றும் சுலபமானதல்ல.

தமிழ் மக்களுக்கான உரிமைகளை அரசாங்கமும் சிங்கள மக்களும் விட்டுக்கொடுக்க முன்வராத வரையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொறுமை வீணானதாகவே இருக்கும்.

கூட்டமைப்பின் இந்த அசாதாரண பொறுமையை, தமிழ் மக்கள் அதன் பலவீனமாக எடை போடும் நிலை ஏற்பட்டால், அண்ணனிடம் இருந்து திண்ணையைக் கைப்பற்றத் தயாராக இருக்கும் தரப்புகளுக்குத் தான் வாய்ப்பாக அமையும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-02-26#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.