Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சியில் கர்ப்பவதிகளே அவதானம்!வேகமாக பரவுகிறது பன்றிக் காய்ச்சல்

Featured Replies

கிளிநொச்சியில் கர்ப்பவதிகளே அவதானம்!வேகமாக பரவுகிறது பன்றிக் காய்ச்சல்
 
 
கிளிநொச்சியில் கர்ப்பவதிகளே அவதானம்!வேகமாக பரவுகிறது பன்றிக் காய்ச்சல்
கிளிநொச்சி மாவட்டத்தில் இம்மாதம் 10ம் திகதி முதல் தற்போது வரை பத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று இருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்தியதுறை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. 
 
இது தொடர்பில் மாவட்ட மருத்துவதுறை பொது மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் 
 
கிளிநொச்சி மாவட்டத்தில் 10.02.2017 இலிருந்து 25.02.2017 வரையான காலப்பகுதியில் பத்து கர்ப்பிணிப் பெண்கள் பன்றிக் காய்ச்சல் எனப்படும் H1N1 இன்புளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை, கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தினால் உறுதி ப்படுத்தப்பட்டுள்ளது. 
 
இவர்கள் அனைவரும் காய்ச்சல் தொடங்கிய முதல் நாளிலேயே அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதால் தகுந்த சிகி ச்சையினைப் பெற்றுக் குணமடைந்துள்ளனர். 
 
எனவே எந்தவொரு கர்ப்பிணிக்கோ அல்லது சிசுவை பிரசவித்த தாயாருக்கோ காய்ச்சல் ஏற்படின், உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும். 
 
அத்துடன் பன்றிக் காய்ச்சல் தொற்றானது குறைவடையும் வரையில் கர்ப்பவதிகள் சனங்கள் கூடும் இடங்கள், பேருந்துப் பயண ங்கள், புகையிரதப் பயணங்கள் போன்றவற்றையும், இந்த நோயினால் பாதிப்புற்றோரைப் பராமரித்தல் என்பவற்றையும் தவிர்ப்ப தால் நோய் தொற்றுவதிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். 
 
கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக வருகைதரும் பொது மக்களுக்கு உடனடியாக உதவும் வகையிலும் ஏனையவர்களுக்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையிலும் காய்ச்சல் நோயாளருக்கான விசேட வெளிநோயாளர் சேவைப் பிரிவானது 26.02.2017 அன்றில் இருந்து இயங்கவுள்ளது. 
 
கிளிநொச்சி மாவட்டத்தில் எந்தவொரு கர்ப்பவதியோ அல்லது பிரசவத்தின் பின்னரான தாயாரோ காய்ச்சல் ஏற்பட்டவுடன் அருகி லுள்ள அரச மருத்துவமனையை நாடவும். அங்கிருந்து மாவட்ட பொதுமருத்துவமனைக்கு உங்களை பாதுகாப்பாகவும் உடனடியா கவும் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 
மேலதிக விபரங்களுக்கு உங்களது குடும்பநல உத்தியோகத்தரையோ அல்லது பொதுச் சுகாதார பரிசோதகரையோ நாடவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.onlineuthayan.com/news/24362

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.