Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கால அவகாசம் வழங்கவேண்டாம் ஐ.நா.விடம் கூட்டமைப்பு எம்.பி.க்கள் எண்மர் முறைப்பாடு

Featured Replies

கால அவ­காசம் வழங்­க­வேண்டாம்

1-97ae0591a135c855e1e1cffd58a33ac0c301593c.jpg

 

 ஐ.நா.விடம் கூட்­ட­மைப்பு எம்.பி.க்கள் எண்மர் முறைப்­பாடு 
(ஆர்.ராம்)

இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரி­மைமீறல் கள், மனி­தா­பி­மானச் சட்ட மீறல்கள் தொடர் பில் அர­சாங்­கத்தின் பொறுப்­புக்­கூ­றலை மையப் ப­டுத்தி ஐக்­கிய நாடுகள் சபையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்துவ­தற்­காக அர­சாங்­கத்­திற்கு மேல­தி­க­மாக கால அவ­காசம் வழங்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எண்மர் ஐக்­கிய 

நாடுகள் மனித உரி­மைகள் பேர­வை­யி­டத்தில் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 34ஆவது கூட்­டத்­தொடர் இன்று திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இந்­நி­லையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் எட்டாம் திகதி புதிய ஆட்சி ஏற்­பட்­டதன் பின்னர் நடை­பெற்ற மனித உரி­மைகள் கூட்­டத்­தொ­டரில் இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரி­மைகள், மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் குறித்து கலப்­பு­மு­றை­யி­லான விசா­ரணை செய்­யப்­பட்­ட­வேண்டும் என வலி­யு­றுத்தி அமெ­ரிக்கா பிரே­ரணை கொண்டு வந்­தி­ருந்­தது.

இத்­தீர்­மா­னத்­திற்கு இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்கி நிறை­வேற்­றி­யி­ருந்­த­தோடு புதிய அர­சியல் அமைப்பின் ஊடாக தேசிய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும் என்றும் அனை­வரும் இலங்­கை­யர்கள் என்ற அடை­யாளம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­தப்­படும் எனவும் சர்­வ­தே­சத்­திற்கு வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்­தது.

எனினும் வாக்­கு­றுதி வழங்­கப்­பட்டு 18 மாதங்கள் கடந்த நிலையில் அப்­ப­ரிந்­து­ரைகள் அடங்­கிய தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் 18 மாதங்கள் கால அவ­கா­சத்தை தேவை­யா­க­வுள்­ளது என்ற கோரிக்­கையை நிறை­வேற்­றுக்­கொள்­வ­தற்­காக அர­சாங்கம் பல­மு­னை­களில் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது.

இத்­த­கை­ய­தொரு சூழலில் இலங்கை அர­சாங்­கத்தின் கால அவ­கா­சக்­கோ­ரிக்­கையை நிரா­க­ரித்து அவர்­க­ளுக்­கான கால அவ­காசம் மேலும் வழங்­கப்­ப­டக்­கூ­டாது என்­பதை வலி­யு­றுத்தும் முக­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சிவ­ஞானம் சிறி­தரன், சீனித்­தம்பி யோகேஸ்­வரன், சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன், செல்வம் அடைக்­க­ல­நாதன், கவீந்­திரன் கோடீஸ்­வரன், தரு­ம­லிங்கம் சித்­தார்த்தன், எஸ்.வியா­ழேந்­திரன், சிவ­சக்தி ஆனந்தன் ஆகிய எண்­மரும் கையொப்­ப­மிட்டு ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைனின் அலு­வ­ல­கத்­திற்கு கோரிக்கை ஒன்றை அனுப்பி வைத்­துள்­ளனர்.

அந்த முறைப்­பாட்­டு­டன்­கூ­டிய கோரிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள முக்­கிய கோரிக்­கை­களும், முறைப்­பா­டு­களும் வரு­மாறு,

கோரிக்கை

  இலங்கை அர­சாங்­கத்­துக்கு இது­வ­ரைக்­கா­லமும் வழங்­கப்­பட்ட காலத்தை மேலும் நீடிப்­ப­தற்­கான அவ­கா­சத்தை வழங்க கூடாது. இவ்­வ­ருடம் மார்ச் மாதத்­துடன் ஐ. நா.வினால் இலங்கை அர­சாங்­கத்­துக்கு வழங்­கப்­பட்ட காலம் முடி­வ­டைந்­துள்ள நிலையில் தற்­போது மேலு­மொரு கால­நீ­டிப்பை வழங்­கு­வது பொருத்­த­மாக இருக்­காது.

ஐ.நா.மனித உரிமை பேர­வை­யினால் வழங்­கப்­பட்ட பரிந்­து­ரை­களை இலங்கை அர­சாங்கம் முறை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தினால் மட்­டுமே தமிழ் மக்­களின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­படும். சர்­வதே குற்­ற­வியல் நீதி­மன்றம், ஐ.நா மனித உரி­மைகள் பேரவை உள்­ளிட்ட சர்­வ­தேச அமைப்­புக்­களின் கரி­சனை தமிழ் மக்­களின் பாது­காப்­புக்கு மிகவும் அவ­சி­ய­மாகும்.

இலங்கை அர­சாங்கம் இது­வ­ரை­யிலும் தமிழ் மக்­களின் உரி­மைக்­காக காத்­தி­ர­மான விட­யங்கள் எவையும் செய்­யா­தி­ருக்கும் போது மேலு­மொரு கால­நீ­டிப்பு வழங்­கு­வது தமிழ் மக்­களின் பாது­காப்பை மேலும் கேள்­விக்­கு­றி­யாக்­கி­விடும். இது­வ­ரைக்­கா­லமும் வழங்­கப்­பட்ட அவ­கா­சத்தில் எவ்­வித முன்­னேற்­ற­க­ர­மான விட­யங்­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இதன்­மூலம் இலங்கை அர­சாங்­கத்­திடம் முறை­யான அர­சியல் நிலைப்­பா­டொன்று இல்லை என்­பது தெளி­வா­கின்­றது.

 ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர்கள் பலரும் ஐக்கிய நாடுகளினால் பரிந்துரைக்கபட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த முடியாதெனவும் இந்த பரிந்துரைகளை ஏற்க மாட்டோம் எனவும் பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாக தெரிவித்திருந்தனர்.

இலங்கைக்கு கால நீடிப்பு வழங்கப்படுமானால் அது யுத்தக்குற்றம் பாலியல் குற்றங்களை செய்யும் பிற நாடுகளுக்கு இலங்கையை முன்னுதாரணமாகவும் இதுவே ஊக்கத்தையும் வழங்கிவிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்றுள்ளது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-27#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.