Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மங்கள தலைமையிலான அரசகுழு ஜெனிவா விரைவு அல் ஹுசைனை சந்திக்கும்;காலஅவகாசம் கிடைக்கும்?

Featured Replies

மங்கள தலைமையிலான அரசகுழு ஜெனிவா விரைவு

05-04d47650892f898671466bfee922b9a569cf9013.jpg

 

அல் ஹுசைனை சந்திக்கும்;காலஅவகாசம் கிடைக்கும்?
(ரொபட் அன்­டனி)

ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள்ளும் நோக்கில் வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தலைமையி லான குழு­வினர் நேற்று ஜெனிவா சென்ற­டைந்­தனர். மேலும் அதி­கா­ரிகள் மட்ட குழுவொன்  

றும் இன்­றைய தினம் இலங்­கை­யிலிருந்து பய­ணிக்­க­வுள்­ளது. நேற்று அதி­காலை ஜெனிவா நோக்கிப் பய­ணித்த மங்­கள சம­ர­வீர தலை­மை­யி­லான குழு­வினர் நேற்று இரவு ஜெனி­வாவை சென்­ற­டைந்­தனர்.

இம்­முறை அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வுடன் தேசிய

சமா­தான பேர­வையின் பணிப்­பாளர் கலா­நிதி ஜெஹான் பெரெ­ராவும் ஜெனிவா சென்­றுள்ளார்.

 அந்­த­வ­கையில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் நாளை 28 ஆம் திகதி மங்­கள சம­ர­வீர இலங்­கையின் சார்பில் உரை­யாற்­ற­வுள்ளார்.

அத்­துடன் அமைச்சர் மங்­கள சம­ர­வீர தலை­மை­யி­லான குழு­வினர் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசை­னையும் சந்­தித்துப் பேச்­சு­வார்தை நடத்­த­வுள்­ளனர். மேலும் இதன்­போது இலங்­கையின் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் கால அவ­கா­சத்தை வழங்­கு­மாறு இலங்­கையின் சார்பில் அமைச்சர் மங்­கள சம­ர­வீர கோர­வுள்ளார்.

இதே­வேளை இலங்­கை­யா­னது நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பா­டு­களில் முன்­னேற்­றத்தை வெ ளிக்­காட்­டு­வ­தற்கு ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை­யினால் மேலும் கால அவ­காசம் வழங்­கப்­படும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்­ப­மா­க­வி­ருக்­கின்­றது. இந்தக் கூட்டத் தொடரின் 22 ஆம் திகதி அமர்வில் இலங்கை தொடர்­பான எழுத்­து­மூல அறிக்­கையை ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் வெளி­யி­ட­வுள்ளார்.

அதா­வது கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையை எவ்­வாறு அர­சாங்கம் அமுல்­ப­டுத்­தி­யது என்­பது குறித்த அறிக்­கை­யையே செய்ட் அல் ஹுசேன் வெ ளியி­ட­வுள்ளார்.

இந்­நி­லையில் இந்த அறிக்­கையில் இலங்­கையின் தற்­போ­தைய அடை­வு­மட்­டத்தை வெளிப்­ப­டுத்­த­வுள்ள செய்ட் அல் ஹுசேன் இலங்­கை­யா­னது நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பா­டு­களில் மேலும் முன்­னேற்­றத்தை வெ ளிக்­காட்­டு­வ­தற்கு கால அவ­காசம் வழங்கும் பரிந்­து­ரையை முன்­வைப்பார் என கூறப்­ப­டு­கின்­றது.

அந்­த­வ­கையில் அல் ஹுசேனின் அறிக்­கையை அடி­யொட்­டி­ய­தாக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையும் இலங்­கைக்கு கால அவ­கா­சத்தை வழங்கும் வகை­யி­லேயே அமை­ய­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

மனித உரிமை விவ­கா­ரத்தில் முன்­னேற்­றங்­களை ஏற்­ப­டுத்­தவும் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் முறை­மையை பரந்­து­பட்ட ரீதியில் முன்­னெ­டுக்­கவும், இலங்­கைக்கு கால அவ­கா­சத்தை வழங்கும் வகையில் இந்தப் பிரே­ரணை அமையும்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்­டத்­தொடர் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 27 ஆம்­தி­கதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் பிரிட்டன் தலை­மையில் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் உறுப்பு நாடுகள் இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை கொண்­டு­வ­ரு­மென தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கடந்த 2012, 2013, 2014, 2015 ஆம் ஆண்­டு­களில் இலங்கை தொடர்­பான பிரே­ர­ணை­களை அமெ­ரிக்கா தலை­மை­யி­லான நாடுகள் கொண்­டு­வந்­தி­ருந்­தன. ஆனால் இம்­முறை பிரிட்டன் தலை­மை­யி­லான நாடு­களே பிரே­ர­ணையை கொண்­டு­வ­ர­வுள்­ளன.

கடந்த 2015 ஆம் ஆண்டு அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணை­யா­னது வாக்­கெ­டுப்­பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. விசேடமாக இலங்கை அரசாங்கமும் இந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியிருந்தது.

அந்தப் பிரேரணையில் பொதுநலவாய சர்வதேச நீதிபதிகள் சட்டத்தரணிகள், வழக்குரைஞர்கள், விசாரணையாளர்களைக் கொண்டு விசாரணைப் பொறிமுறை முன்னெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிவழங்கப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-27#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.