Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழ மக்களுக்கு வலுச்சேர்க்க பிரித்தானியாவில் அறவளிப்போர்: 6 அம்சக் கோரிக்கைகளுடன் காலவரையறையற்ற உண்ணாவிரதம்

Featured Replies

ஈழ மக்களுக்கு வலுச்சேர்க்க  பிரித்தானியாவில் அறவளிப்போர்:  6 அம்சக் கோரிக்கைகளுடன் காலவரையறையற்ற உண்ணாவிரதம்

 

 

 

தமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாகவும் தமது சொந்த காணிகளை விடுவிக்கக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாப்புலவு மக்களுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களினால் காலவரையறையற்ற தொடர் அறவளி உண்ணாவிரதப் போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.D000d5d55555.jpg

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 34 ஆவது அமர்வு இன்று nஐனிவாவில் ஆரம்பமாகின்ற நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவின் வெஸ்மினிஸ்டர் நகரில் இவ்வறவழிப்போராட்டம் நடைபெற்று வருகின்றது.

1.எமது நிலம் எமக்கு வேண்டும். கேப்பாப்புலவு மக்களின் காணியை விட்டு இராணுவமே வெளியேறு.

2. சரணடைந்த போர் கைதிகள் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி வேண்டும்.

3. பயங்கரவாத சட்டத்தை நீக்கு. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலைசெய்த போராளிகளையும் மக்களையும் மீண்டும் கைது செய்வதை நிறுத்து. 

4. சிறிலங்காவின் தமிழின அழிப்புக்குத் துணைபோன சிங்களப் பேரினவாதத் தலைவர்களையும் இராணுவத்தையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த சர்வதேச விசாரணை வேண்டும்.

5. பிரித்தானியா அரசாங்கமே தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு காலவகாசம் கொடுக்க துணை போகாதே.

6. வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு தமிழரின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஏன்ற ஆறு அம்சக்கோரிக்கைகளே முன்வைக்கப்பட்டுள்ளன.DDD05dddd.jpg

மாலை 4.30 மணியளவில் ஆரம்பமான இவ்வறவளிப்போராட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திர குமார் தொலைபேசி மூலமாக தொடக்க உரையினை நிகழ்த்தினார். 

அதில் அவர், இவ்வறவளிப் போராட்டம் எந்தவொரு நாட்டுக்கு எதிரானதோ அல்லது ஐக்கிய நாடுகள் சபைக்கெதிரான போராட்டமோ அல்ல. மாறாக ஐக்கியராச்சியமும் ஐ.நா. சபையும் எம் மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் வகையிலான போராட்டம் என குறிப்பிட்டார். 

DDD202dff.jpg

அதனைத்தொடர்ந்து மாணவர் பேரவையின் முன்னால் தலைவர் பொன். சத்தியசீலன் பொதுச்சுடர் ஏற்றி போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசலிங்கம் திருக்குமரனுடன் இணைந்து சுப்பிரமணியம் அருணகுமார், பிராட்ஹரிஸ், நாகேந்திரன் சிந்துஐன்இ கோவிந்தப்பிள்ளை லிங்கேஸ்வரன், பெரியசாமி காண்டீபன், தர்மராஜா கெங்காதரன் ஆகிய ஆறு செயற்பாட்டாளர்கள் நேற்றிலிருந்து காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 34 ஆவது அமர்வு இன்று திங்கட்கிழமை nஐனிவாவில் ஆரம்பமாகின்ற நிலையில் இலங்கை தொடர்பில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சியாக நம்பகத்தன்மையான புதிய தீர்மானத்தைக் கொண்டு வருமாறும் அதில் ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான கால அட்டவணையை உள்ளடக்குமாறும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளிடம் சர்வNதுச மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.Dddd540ff.jpg

 

 

http://www.virakesari.lk/article/17116

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.