Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலா இல்லாத அ.தி.மு.க! - சீனியர்களை வளைக்கும் பன்னீர்செல்வம் #VikatanExclusive

Featured Replies

சசிகலா இல்லாத அ.தி.மு.க! - சீனியர்களை வளைக்கும் பன்னீர்செல்வம் #VikatanExclusive

ஓ.பன்னீர்செல்வம்

பெங்களூரு சிறையில் இருந்துகொண்டே தமிழக அரசியல் நிலவரங்களைக் கவனித்துவருகிறார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா. 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தீபாவுக்கு வெற்றி கிடைத்துவிட்டால், சசிகலாவின் அரசியல் வாழ்வு முடிவுக்குவந்துவிடும். அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகளை பன்னீர்செல்வம் அணியை நோக்கி இழுக்கும் முயற்சிகளும் வேகம் பெற்றுள்ளன' என்கின்றனர் சசிகலா எதிர்ப்பாளர்கள்.

'ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவேன்' என்ற அறிவிப்பின் மூலம், கார்டன் வட்டாரத்தை கதிகலங்கவைத்திருக்கிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. 'அப்போலோவில் நடந்த சம்பவங்களுக்கு விசாரணைக் கமிஷன் தேவை' எனக் கூடுதல் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார், தீபாவின் சகோதரர் தீபக். "போயஸ் கார்டன் உள்பட ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களுக்கும் இவர்கள் இருவரும்தான் அதிகாரபூர்வ வாரிசுகள். தீபக்கை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆட்டி வைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அவர் எதிர் நிலைப்பாட்டை எடுத்ததில் கூடுதல் அதிர்ச்சி. 'அவருக்குக் கொடுக்கப்பட்ட உத்தரவாதங்களை மீறியதால்தான், எதிர்நிலையை எடுத்தார்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

"ஜெயலலிதாவின் சொத்துக்களை குறிவைத்து அடுத்த ஆட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆட்டம், இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வரலாம். இந்த விவகாரத்தில் மேற்கொள்ளவேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்துவருகிறார் தீபா. இது ஒருபுறம் இருந்தாலும், அரசியல் களத்தில் இருந்து சசிகலா உறவுகளை முழுமையாக அப்புறப்படுத்தும் வேலைகளை முடுக்கிவிட்டிருக்கிறார், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்" என விவரித்த அவரது அணியைச் சேர்ந்த ஆதரவாளர் ஒருவர், "தீபாவின் அரசியல் என்பது முழுக்க தலித், மீனவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை நோக்கி இருக்கிறது. பன்னீர்செல்வத்துக்கு, படித்தவர்கள் மத்தியில் செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது, இருவரும் தனித்தனியாகப் பிரிந்து செயல்படுகின்றனர். அதேநேரம், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தீபாவுக்கு ஆதரவாக களமிறங்க இருக்கிறார், பன்னீர்செல்வம். 'இந்தத் தேர்தலில் தீபா எளிதாக வெற்றி பெற்றுவிடுவார்' என அ.தி.மு.க நிர்வாகிகள் பேச ஆரம்பித்துவிட்டனர். தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அவர் தலைமையில் இயங்குவதற்கும் பன்னீர்செல்வம் தயாராக இருக்கிறார். அவருடைய ஒரே நோக்கம், அரசியல் களத்தில் இருந்து சசிகலா குடும்பத்தை அப்புறப்படுத்துவது ஒன்றுதான்" என்றவர், 

சசிகலா"சசிகலாவை ஒதுக்கிவைத்துவிட்டால், 'மொத்த அ.தி.மு.க-வும் நம் பக்கம் வந்துவிடும்' என்பதை அறிந்து, அதற்கேற்ப காய்களை நகர்த்திவருகிறார் பன்னீர்செல்வம். அ.தி.மு.க-வின் சீனியர் நிர்வாகிகளை பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சந்தித்துப் பேசிவருகின்றனர். அவர்களிடம் பேசும்போது, 'சசிகலா தலைமையின்கீழ் இருந்தால், மக்கள் மத்தியில் நீங்கள் அவரைப் புகழ்ந்து பேச முடியாது. ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்தான் தினகரன். கட்சிக்குள் நீங்கள் இருந்தாலும், பொதுவெளியில் இவர்கள் இருவரையும் உங்களால் ஆதரிக்க முடியுமா? கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள், 'சின்னம்மா' என்று விளித்துப் பேசுவதற்குப் பின்னணியில் அவர்களுக்கான தேவை இருக்கிறது. எவ்வளவு விளம்பரங்கள் செய்தாலும், சசிகலா தலைமையின்கீழ் உங்களால் தேர்தலை எதிர்கொள்ள முடியாது.

உள்ளாட்சித் தேர்தலுக்குள் சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என்று பிரிந்துகிடக்காமல், ஒரே அணியில் திரள்வோம். மக்கள் மத்தியில் இருக்கும் சசிகலா எதிர்ப்பை உங்களால் மாற்ற முடியாது. தொடக்கத்தில் அவர்களை ஆதரித்த அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும், இப்போது பின்வாங்கிவிட்டனர். அப்போலோ என்ற ஒற்றைப் புள்ளியிலேயே பெரும்பாலான அரசியல் கட்சிகள் இயங்குகின்றன. நாம் அனைவரும் ஒரே அ.தி.மு.க என்ற நிலை வராவிட்டால், தி.மு.க-வுக்கு ஒரு வாய்ப்பு கிடைப்பதைத் தவிர்க்க முடியாது. அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும். அ.தி.மு.க-வின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு முடிவெடுங்கள்' என விளக்கியுள்ளனர். அவர்களது கோரிக்கையில் உள்ள நியாயத்தைக் கட்சியின் சீனியர்கள் உணர்ந்துள்ளனர். மார்ச் மாதத்துக்குள் முக்கிய சீனியர்கள், பன்னீர்செல்வம் பக்கம் வருவார்கள்" என்றார் விரிவாக. 

அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளராக பதவியில் இருந்தாலும், குடும்ப உறவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறிவருகிறார் தினகரன். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணியிட மாற்றம் முதற்கொண்டு அரசின் மிகப் பெரிய ஒப்பந்தங்கள் வரையில், பல முனைகளில் இருந்தும் நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகிறார். 'தினகரனின் முடிவுகளுக்கு எதிராக நீங்கள் செயல்படக் கூடாது' என கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டுச் சென்றிருந்தார், சசிகலா. அதை ஒரு பொருட்டாகவே அவருடைய உறவினர்கள் மதிக்கவில்லை. அவர்களை நோக்கிப் படையெடுக்கும் அதிகாரிகளுக்கும் பஞ்சமில்லை. 'இந்தப் பதவிக்கு இத்தனை கோடி' என பிரதான கிளப்புகளில் தங்கியிருந்து வசூல் வேட்டையில் கொடிகட்டிப் பறக்கின்றனர்.' வரப்போகும் நான்கு ஆண்டுகளில் சம்பாதித்தால்தான் உண்டு. இப்படியொரு வாய்ப்பு இனி கிடைக்குமா?' என அவருடைய ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே பேசிவருகின்றனர். 

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு, அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டாலும், குடும்ப உறவுகளுக்குத் தடை போடும் வித்தை தெரியாமல் தவித்துவருகிறார். 'போயஸ் கார்டனில் ஜெயலலிதா இருந்தபோதே, அதிகாரத்தில் மறைமுகமாக கோலோச்சியவர்கள், இப்போது எப்படி மௌனத்தைக் கடைபிடிப்பார்கள்' என ஆதங்கப்படுகின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

http://www.vikatan.com/news/tamilnadu/82128-o-panneerselvam-silently-gaining-support-in-sasikalas-admk.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.