Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"மூன்றில் ஒரு பங்குதான் கொடுத்தார்கள்!" - முடிவுக்கு வராத கூவத்தூர் கணக்கு

Featured Replies

"மூன்றில் ஒரு பங்குதான் கொடுத்தார்கள்!" - முடிவுக்கு வராத கூவத்தூர் கணக்கு

கோல்டன் பே ரிசார்ட்

மிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பதற்காக, எம்.எல்.ஏக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை வழங்கினார் சசிகலா. 'நாங்கள் யாரும் பன்னீர்செல்வம் அணிப் பக்கம் சாய்ந்துவிடக் கூடாது என்பதற்காக கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கினார்கள். அதில் இரண்டு பங்கு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

அ.தி.மு.க அரசியல் வரலாற்றில் கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டை அவ்வளவு எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் வரிந்து கட்டிக் கிளம்பிய மறுநாளே எம்.எல்.ஏக்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார் சசிகலா. 11 நாட்களாக தொடர்ந்து பிரேக்கிங் செய்திகளில் இடம் பிடித்தது கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட். "எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றனர். பன்னீர்செல்வம் அணியின் பக்கம் 12 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். 'அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்' என அறிவித்தார் அ.தி.மு.க சட்டமன்ற கொறடா ராஜேந்திரன். இதை பன்னீர்செல்வம் அணியினர் ஏற்கவில்லை. பெருத்த ரகளைக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த தீர்மானம் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பின்னால் கவர்ச்சிகரமான பல வாக்குறுதிகள் உள்ளன" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

"அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காலத்திலேயே, தனக்கான ஆதரவு எம்.எல்.ஏக்களை உருவாக்கி வைத்திருந்தார் பன்னீர்செல்வம். அந்தநேரத்தில் சீனியர் அமைச்சர்கள் பன்னீர்செல்வத்திற்கு உரிய மரியாதையைக் கொடுக்கவில்லை. இதை அறிந்த எம்.எல்.ஏக்களில் பெரும் பகுதியினர், 'பன்னீர்செல்வத்தோடு இருந்தால் அமைச்சர் பதவி வந்து சேரும்' என்ற கனவில் இருந்தனர். ஜெயலலிதா சமாதியில் அவர் அமர்ந்ததும், எம்.எல்.ஏக்களை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார் சசிகலா. தினகரன் ஆலோசனையின்பேரில், 90 சதவீத எம்.எல்.ஏக்கள் கோல்டன் பே ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதில், 20 எம்.எல்.ஏக்களை மட்டும் பூந்தண்டலத்தில் உள்ள வில்லேஜ் ரிசார்ட்டில் தங்க வைத்தனர். இவர்களில் முப்பதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள், சசிகலா தரப்பில் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்காமல் முரண்டு பிடித்தனர். இவர்கள் 20 பேர் உண்ணாவிரதம் இருப்பதாகவும் தகவல் பரவியது. பன்னீர்செல்வம் ஆதரவு மனநிலையில் இருந்த எம்.எல்.ஏக்களுக்கு மட்டும் தனி வகுப்பு எடுக்கப்பட்டது. 'ஆட்சி கவிழ்ந்துவிட்டால், மீண்டும் உங்களால் எம்.எல்.ஏ ஆக முடியாது. உங்களுக்குத் தேவையானதை வழங்குவோம்' என சமசரம் பேசினார் தினகரன்.

அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுடன் சசிகலா

கார்டன் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகளை அவர்கள் முழுதாக நிறைவேற்றவில்லை. குறிப்பாக, 'மாவட்டத்தில் அரசு சார்பில் நிறைவேற்றப்படும் ஒப்பந்தங்களில், நீங்கள் சொல்பவருக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும். அந்தப் பணிக்கு அமைச்சர்கள் வேறு யாரையாவது நியமித்தாலும், உங்களுக்குத் தேவையான தொகை வந்து சேரும். தவிர, வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் பணம் அன்பளிப்பாக வந்து சேரும். முதல்கட்டமாக, ஐந்து கோடியைக் கொடுக்க இருக்கிறோம். பணமதிப்பு நீக்க விவகாரத்தால் சிக்கல் இருப்பதால், அதற்குரிய வகையில் தங்கம் வழங்கப்படும்' என குலுக்கல் லாட்டரி ரேஞ்சுக்கு பேரம் பேசினார்கள். அதற்கேற்ப நம்பிக்கை அளிக்கும் வகையில், வீடுகளுக்கே சென்று முதற்கட்ட தொகையை விநியோகம் செய்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த பிறகு, எதிர்பார்த்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இன்னும் இரண்டு பங்கு வந்து சேர வேண்டியிருக்கிறது" என்றார் ஆதங்கத்தோடு. 

"எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் பெரும் தயக்கம் ஏற்பட்டுள்ளது. காரணம். எந்தப் பரிவர்த்தனை நடந்தாலும் வருமான வரித்துறையின் புலனாய்வு அதிகாரிகள் கண்கொத்திப் பாம்பாக கவனித்து வருவதுதான். சட்டமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 'தங்கமோ, பணமோ அவசர கதியில் வழங்காமல் படிப்படியாக வழங்கினால் சிக்கல் இருக்காது' என அ.தி.மு.க தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

'எங்கே ஏமாற்றிவிடுவார்களோ?' என எம்.எல்.ஏக்கள் அச்சப்படுகின்றனர். தீபக் விவகாரத்தையும் இந்தக் கோணத்தில்தான் அவர்கள் இணைத்துப் பார்க்கிறார்கள். 'பட்ஜெட்டுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என தலைமைக் கழக நிர்வாகிகள் நம்பிக்கையோடு பேசினாலும், அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் இல்லை. இவர்களில் பலர் பன்னீர்செல்வத்தை நோக்கிப் படையெடுக்கும் முடிவில் இருக்கிறார்கள். ஒவ்வொரு எம்.எல்.ஏவும் உளவுத்துறை அதிகாரிகளால் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்" என்கிறார் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர். 

http://www.vikatan.com/news/tamilnadu/82136-they-paid-only-one-third-of-the-amount---kuvathur-case.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.