Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

'தினகரன் என்றால் யார்?

Featured Replies

'தினகரன் என்றால் யார்?

அப்படி ஒரு பெயர், எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள்
பட்டியலில் இல்லையே... அவர் பெயரில் எங்களுக்கு ஏன் கடிதம் மூலம் விளக்கம்
அளிக்கிறீர்கள்?' என, சரமாரியான கேள்விகள் அடங்கிய நோட்டீசை, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு அனுப்ப, தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.

 

Tamil_News_large_172152220170301231153_318_219.jpg

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அ.தி.மு.க., வில் ஏராளமான அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன; இருப்பினும், மிக முக்கியமான கேள்வியாக தற்போது உருவெடுத்து நிற்பது, பொதுச் செயலர் நியமனம் செல்லுமா, செல்லாதா என்பது தான்.சசிகலாவை பொதுச் செயலராக நியமிக்க முடிவெடுத்த போது, முதல் எதிர்ப்பு குரலை, ராஜ்யசபா, எம்.பி., சசிகலா புஷ்பா எழுப்பினார்; தேர்தல் கமிஷனிலும் புகார் அளித்தார்.

தனியாளாக அவர் நடத்திய போராட்டம், பெரிதாக கவனம் பெறவில்லை. பன்னீர்செல்வம் போர்க் கொடி உயர்த்தி, முக்கிய நிர்வாகிகள் வெளியேறி, ஆவேசம் காட்டிய பின், பொதுச் செயலர் நியமனம் குறித்த பிரச்னை தீவிரமடைந்தது.கட்சியின் சட்ட விதிகளின்படி இந்த நியமனம் ஏற்கத்தக்கதல்ல என்று தெரிந்தும், சசிகலா தரப்பு, எப்படியோ சமாளித்தபடி இருந்தது. ஊழல் வழக்கில் சிறைக்கு போன பின், இந்த நியமன விவகாரம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
 

ஆர்வம்


ஆட்சி கையைவிட்டு போய்விட்ட நிலையில், பன்னீர்செல்வம் தரப்புக்கு தற்போதுள்ள ஒரே
நம்பிக்கை, இந்த விஷயம் மட்டுமே. எனவே, இந்த விஷயத்தை மிகவும் கவனமாக கையாள
முடிவெடுத்து, அதற்கேற்ப, காய்கள் நகர்த்தப் பட்டு வருகின்றன.நியமனம் செல்லாது என்ற அறிவிப்பை வாங்கிவிட்டால், சசிகலா அணியைச் சேர்ந்த பெரும்பாலான நிர்வாகிகள்,

தங்கள் பக்கம் வந்துவிடுவர்; கட்சி நம் வசம் ஆகும் என்பதால், தேர்தல் கமிஷனின் தீர்ப்பில், பன்னீர்செல்வம் தரப்பு, ஆர்வம் காட்டுகிறது.

இதை சசிகலா தரப்பும் உணர்ந்துள்ளது; மார்ச் 28க்கு பின், விதிகளின்படி, பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடும் தகுதி, சசிகலாவுக்கு வந்துவிடும். எனவே, அதுவரை, ஏதாவது காரணம் காட்டி, மார்ச் 28 வரை, இந்த பிரச்னையை இழுத்தடிக்க பார்க்கிறது. ஆனால், தற்போது, பிரச்னை வேறுவிதமாக உள்ளது. சமீபத்தில், சசிகலா தரப்பில் தேர்தல் கமிஷனுக்கு, அவரதுவழக்கறிஞர்கள் அடங்கிய குழு மூலம், ஒரு, 'கவர்' வந்து சேர்ந்தது.

தேர்தல் கமிஷனின் வரவேற்பு பிரிவிலேயே, அதை யாரோ கொடுத்து விட்டு சென்றிருந் தாலும், அந்த கவர், உடனடியாக அதிகாரி களின் பார்வைக்கு சென்றது. பச்சை நிற கவரில், 72 பக்கங்களுக்கு, விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த விஷயம் தொடர்பாக, அன்று மாலையே, அதிகாரிகளின் ஆலோசனை நடந்தது. அதிகாரிகளுக்கு எழுந்த முதல் சந்தேகமே, 'நாம், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா வுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி யிருந்தோம். விளக்கமோ வேறு ஒருவர் பெயரில் வந்துள்ளதே...' என்பது தான்.

பன்னீர்செல்வம் தரப்பு எழுப்பியிருந்த ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் அளித் திருந்தாலும், பொதுவான விளக்கமென பார்த் தால், 'தற்காலிக முடிவாகவே, சசிகலா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்; அதில் விதி மீறலுக்கு இடமே இல்லை' என, கூறப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
 

பட்டியலில் இல்லை


அ.தி.மு.க.,வின் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ள னவா, இல்லையா என்பது போன்ற கேள்வி களுக்கு போவதற்கு முன், தங்கள் கையில் உள்ள விளக்க கடிதத்தில், துணைப் பொதுச் செயலர் தினகரன் என, கையெழுத்திடப் பட்டுள்ளதை பார்த்து, அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர்.

இதன் அடிப்படையில், தினகரன் என்பவர் யார் என்பதை அறியும் வகையில், அ.தி.மு.க.,வின் நிர்வாகிகள் பட்டியலை எடுத்து,

 

சரிபார்த்துள்ளனர். அதில், தேடிதேடி பார்த்தும் தினகரன் என்ற பெயரைக் காணோம். காரணம், கடைசியாக நடந்த, வானகரம் பொதுக்குழு வில் நிறைவேற்றப் பட்ட தீர்மான அடிப்படை யில் தான் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பொதுக்குழுவில் பங்கேற்ற நிர்வாகிகள் பட்டியலை, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி இருந்தனர்.

எனவே, தேர்தல் கமிஷனின் கையில் அதிகாரப்பூர்வமாக இருப்பது வானகரம் பட்டி யல் தான். அதில், அவைத் தலைவர் மதுசூதனன், பொருளாளர் பன்னீர் செல்வம் என்று தான் வரிசையாக பெயர்கள் உள்ளன.

அந்த பொதுக்குழு நடந்தபோது, கட்சி, காட்சி இரண்டிலுமே, தினகரன் இல்லை. மேலும், தீர்ப்பு வந்ததும், சிறைக்கு கிளம்பிச் செல்ல வேண்டிய நிலையில், சசிகலா, திடீரென, அவசர அவசரமாக துணைப் பொதுச் செயல ராக, தினகரனை நியமித்தார். போகிற போக் கில், தன் இஷ்டப்படி சசிகலா செய்த நியமனம் குறித்த அறிவிப்பை, முறைப்படி தேர்தல் கமிஷனுக்கு, அவர் அனுப்பி வைக்க வில்லை. அனுப்பி வைக்க, அவகாசமும் இல்லாமல் போனதால், தினகரன் நியமனம் பற்றிய தகவலே, தேர்தல் கமிஷனிடம் இல்லை.

நிலைமை இவ்வாறு இருக்க, தாங்கள் பெங்களூருக்கு அனுப்பியிருந்த நோட்டீசிற்கு, சென்னையிலிருந்து தினகரன் என்பவர் பெயரில் விளக்கம் வந்து சேர்ந்திருப்பதால், தங்களது குழப்பத்தை தீர்த்து வைக்கும்படி, மீண்டும் பெங்களூருக்கே நோட்டீஸ் அனுப்ப, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.

'தினகரன் என்பவர் யார்? அந்த பெயர், நீங்கள் அனுப்பியிருந்த கட்சி நிர்வாகிகள் பட்டியலி லேயே இல்லையே? அவர் பெயரில் விளக்கம் அளிப்பதற்கான காரணம் என்ன? அவர் மூலமாக விளக்கம் அளித்தாலும், அதற்கான முறையான அதிகார மாற்றுக் கடிதம் ஏதும் இணைக்கப்படவில்லையே...' என்பது போன்ற கேள்விகளுடன், நோட்டீஸ் தயாராகி வருகிறது.

இதற்கான பதிலை, காலம் தாழ்த்தாமல் விரைந்து அளிக்கும்படியும் உத்தரவிடப்பட வுள்ளது. இந்த நோட்டீஸ், இன்றோ, நாளையோ சசிகலாவுக்கு அனுப்பப்படலாம் என, தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - நமது டில்லி நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1721522

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.