Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணீர்விட்ட பன்னீர்... பழைய அஞ்சாநெஞ்சன் மது!

Featured Replies

கண்ணீர்விட்ட பன்னீர்... பழைய அஞ்சாநெஞ்சன் மது!

 

ஜெயலலிதா பிறந்த நாள் அன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிடுவதாக முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் வாக்குறுதி கொடுத்திருந்தனர். சொன்னபடி அதே நாளில், ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’யைத் தொடங்கிவிட்டதாக அறிவித்தார் தீபா. ஆனால், ஓ.பன்னீர்செல்வம்?

காலையிலேயே ஓ.பி.எஸ் வீட்டில் ஊடகங்கள் குவிந்துவிட்டன. காலை 7 மணிக்கெல்லாம் பளிச் வேட்டி - சட்டையுடன் சிரிப்பும் கும்பிடுமாய் ஆதரவாளர்களின் அரவணைப்பில் திணறிக் கொண்டிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். ‘‘அண்ணே, இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பாத்திடணும்’’ என்று குரல் கொடுத்தவர்களை உதட்டில் கைவைத்து அமைதிகாக்கச் சொன்னார். ஆதரவாளர்கள் கொண்டுவந்த சால்வைகளையும், மாலைகளையும் வாங்கி வைப்பதற்கென்றே தனியாக இரண்டு பேர் இருந்தனர். பன்னீர் முகத்தில் இருந்த மகிழ்ச்சியைப் பார்த்த ஊடகத்தினர், ‘‘அந்த முக்கிய அறிவிப்பை சொல்லுங்கள் சார்’’ என்றதும், உடனிருந்தவர்கள் ‘‘அம்மாவின் தொகுதியான ஆர்.கே நகரில் வைத்துத் தான் அண்ணன் சொல்வார்’’ என்றனர்.

பகல் பன்னிரண்டு மணியைக் கடந்ததும் ஆர்.கே நகர் நோக்கி ஓ.பன்னீர்செல்வம் கார் பயணமானது. அவரது காரைப் பின்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்தன. ஓ.பன்னீர்செல்வம் அணியில் அன்றுதான் இணைந்த நடிகை ஃபாத்திமா பாபு, முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் அந்தப் பயணத்தில் உடனிருந்தனர். ஓ.பன்னீர்செல்வம் கார், வீட்டிலிருந்து புறப்பட்டுவிட்ட தகவலை ஆர்.கே. நகரில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி மதுசூதனன் அறிவித்துக் கொண்டிருந்தார்.

p8a.jpg

ஆதரவாளர்கள் முட்டிக்கொண்டு திமிறியதால் அந்த மேடை ஆட்டம் காண ஆரம்பித்தது. அமைச்சர் டி.ஜெயக்குமாரின் தீவிர ஆதரவாளராக இருந்த ராயபுரம் முன்னாள் பகுதிச் செயலாளர் நா.குமரன், ‘‘அவைத்தலைவர் அண்ணன் மதுசூதனன் சொல்வதைக் கேளுங்கள். நம்முடைய இயக்கம், கட்டுப்பாடான இயக்கம்’’ என்று மைக்கில் சொல்ல ஆரம்பித்தார்.

‘மிரட்டல் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்’ என்று மதுசூதனன், சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்திருந்தார். இரண்டு துணை கமிஷனர்கள், நான்கு உதவி கமிஷனர்கள் என்று போலீஸார் குவிந்திருந்தும்கூட, மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த ரொம்பவே திணறிப் போயினர். ஒரு கட்டத்தில் மேடை ஏறிய மதுசூதனன், “டேய் அசோக்கு (வேளச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ) தம்பி, எல்லாரையும் உம்பாட்டுக்கு மேடையில ஏத்தி விட்டுக்கிட்டே இருக்கே... இது நல்லதுக்கில்லே, பாத்துக்க. செங்கல்களை அடுக்கி வெச்சு டெம்பரரியா போட்டிருக்கிற ஸ்டேஜ் இது. ஓ.பி.எஸ் அண்ணன் வந்து போற வரைக்கும் எந்த அசம்பாவிதமும் ஆகிடாம பாத்துக்கோணும். நான் உன் மேலேதான் பழியைப் போடுவேன். சொன்னாக் கேளு, கொஞ்சம் ஹெல்ப் பண்ணு. இதே மாதிரிதான் அண்ணா நகர்ல ஒருமுறை மேடை சரிஞ்சு போச்சு...”  என்று எச்சரித்துக்கொண்டே இருந்தார். மேடையின் கீழே நின்றிருந்த ஆர்.கே நகர் ர.ர-க்கள்,  ‘‘வாங்கண்ணே! இப்பத்தாண்ணே நீங்க பழைய அஞ்சாநெஞ்சன்... அப்படியே மெய்ன்டெய்ன் பண்ணுங்கண்ணே...’’ என்று மதுசூதனனின் பேச்சை ரசித்து விசிலடித்தனர்.

இங்கு திரண்டிருந்த ஆதரவாளர்களால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக்கொண்டே போக, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அன்னதானம், நலத்திட்ட உதவிகள் என்று அமர்க்களப்படுத்தியிருந்தார் வட சென்னை மாவட்ட ஜெயலலிதா பேரவையின் செயலாளரான ஆர்.எஸ்.ராஜேஷ். இவர் மதுசூதனனின் தீவிர ஆதரவாளர் என்பதால், இவருடைய பதவியில் கை வைக்க சசிகலா தரப்பு பயப்படுவதாக அங்கிருந்த ர.ர-க்கள் தெரிவித்தனர். ஊனமுற்றோருக்கான ஸ்கூட்டர்கள், தையல் எந்திரங்கள், வேட்டி-புடவைகள், மீனவர்களுக்கான அன்னக்கூடை பாத்திரங்கள்... என்று பொருள்களை தனி மேடை போட்டு குவித்திருந்தனர்.

p8.jpg

பகல் ஒரு மணியளவில் ஓ.பன்னீர்செல்வம், மேடைக்கு வந்து சேர்ந்தார். ‘ஓ.பன்னீர்செல்வம் பாதுகாப்பு அணி’ என்ற ஒன்றை உருவாக்கி, ஜீப்பில் ஆட்களை ஏற்றிக்கொண்டு காரின் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையாக நின்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெண்கள் ஆரத்தி எடுத்ததால்,  அவர் அங்கிருந்து மேடைக்கு வரவே அரை மணி நேரம் பிடித்தது. இங்கு போட்டியிட்டபோது வந்த ஜெயலலிதாவை வரவேற்று வைத்திருந்ததைவிட பன்னீரை வரவேற்று வைத்திருந்த பேனர்கள் கூடுதலாய் மிரட்டின. ஆரத்தி, சால்வைகள், சாக்லேட்டுகள் என்று பெண்கள் காட்டிய ஆதரவில் திக்குமுக்காடிப் போனார் பன்னீர். ஆரத்தி எடுத்த பெண்களைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டபோது கண்களில் நீர் கசிந்திருந்தது.

ஒருவழியாக பன்னீர் மேடையில் ஏறியதும், வடசென்னை மாவட்ட ம.தி.மு.க பொருளாளர் வழக்கறிஞர் எம்.எம் கோபியின் தலைமையில், ஈ.பி சிவா, மின்னல் மோகன் என்று 14 வட்டச் செயலாளர்கள் உள்பட ஆயிரம் பேர் பன்னீர் அணியில் இணைந்தனர். அந்த மேடையில் பேசியபோதும், பின்னர் அங்கிருந்த திருமண மண்டபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோதும், அந்த ‘வரலாற்று சிறப்புமிக்க’ அறிவிப்பை பன்னீர்செல்வம் வெளியிடவே இல்லை.

பயந்து விட்டாரா, பயமுறுத்திவிட்டார்களா என்பது தெரியவில்லை!

http://www.vikatan.com/juniorvikatan/2017-mar-05/politics/129177-panneerselvam-celebrate-jayalalitha-birdhday.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.