Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டாரா?- அடுக்கடுக்காக சந்தேகங்களை எழுப்பும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

Featured Replies

ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டாரா?- அடுக்கடுக்காக சந்தேகங்களை எழுப்பும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

 

 
முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் (இடது), மனோஜ் பாண்டியன் (வலது) | கோப்புப்படம்: கே.பிச்சுமணி.
முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் (இடது), மனோஜ் பாண்டியன் (வலது) | கோப்புப்படம்: கே.பிச்சுமணி.
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை டிஸ்சார்ஜ் அறிக்கையில் இருப்பதாக கூறியுள்ள முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், இது தொடர்பாக அரசும், மருத்துவமனையும் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிலிருந்து இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார் பி.எச்.பாண்டியன். இந்த சந்திப்பின்போது அவருடன், அவரது மகன் மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவு எம்.பி.க்கள் உடனிருந்தனர்.

செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பி.எச்.பாண்டியன், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதாக அப்போலோ டிஸ்சார்ஜ் அறிக்கையில் இருக்கிறது. அவர் கீழே தள்ளிவிடப்பட்டாரா என்பதை மருத்துவமனை தரப்பு விளக்க வேண்டும்.

ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி இரவு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால் அவர் எந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என்பது மக்களுக்குத் தெரியவரும்.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பின்னர் மருத்துவமனையிலிருந்து 27 சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்தக் கேமராக்களை அகற்ற உத்தரவிட்டது யார் என்பது தெரிய வேண்டும்.

கடந்த 1991-ம் ஆண்டு முதலே ஜெயலலிதாவுக்கு என்.எஸ்.ஜி. பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவருக்கு அந்த பாதுகாப்பு வழங்கப்படவில்லை. என்.எஸ்.ஜி. வீரர்களை பாதுகாப்புப் பணியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு உத்தரவிட்டது யார் என்பது தெரிய வேண்டும்.

மேல் சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையிலிருந்து ஜெயலலிதாவை சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சென்னை விமான நிலையத்துக்கு மத்திய அரசு ஏர் ஆம்புலன்ஸ் அனுப்பியதாகத் தெரிகிறது. ஏர் ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டும், ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க தேவையில்லை என முடிவு செய்தது யார் என்பது தெரிய வேண்டும்.

அப்போலோ மருத்துவமனையிலேயே உயர்தர பிசியோதெரபி சிக்கிச்சை அளிக்கும் நிபுணர்கள் இருக்கும்போது சிங்கப்பூரிலிருந்து பிசியோதெரபிஸ்டுகள் வரவழைக்கப்பட்டது ஏன்?

வேட்பாளர்களுக்கான தேர்தல் ஆணையத்தின் 'பி' படிவத்தில் ஜெயலலிதா கைநாட்டு இடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும். இதேபோல், வேறு என்னென்ன ஆவணங்களில் கைநாட்டு பெறப்பட்டன என்பது அப்போதுதான் தெரியவரும்.

ஜெயலலிதாவுக்கு எக்மோ சிகிச்சை அளிக்க ஒப்புதல் அளித்தது யார் என்பது தெரிய வேண்டும்.

அதேபோல், அப்போலோ மருத்துவமனை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், "ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட எக்மோ மருத்துவ சிகிச்சையை நிறுத்தி அவரது உயிர் இயற்கையான முறையில் பிரிய உரிய அனுமதி பெறப்பட்டது" எனக் கூறப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தால், யார் அந்த அனுமதியை அளித்தது என்பது விளக்கப்பட வேண்டும்.

ஜெயலலிதாவின் முகத்தில் உள்ள 4 துளைகள் எதற்காக இடப்பட்டன என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய, பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன், "பொதுவாக, நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சையை நிறுத்த வேண்டும் என்றால், அவரது ரத்த சொந்தங்களின் எழுத்துப்பூர்வ சம்மதம் பெற வேண்டும். ஜெயலலிதா, அரசு நிர்வாகத்தில் உயர் பதவியில் இருக்கக் கூடியவர் என்பதால் தலைமைச் செயலாளர் மற்றும் அடுத்த நிலையில் உள்ளவர்களிடம் சம்மதம் பெற வேண்டும்.

ரத்த சொந்தங்கள் நிச்சயமாக ஜெயலலிதாவை பார்க்கவில்லை. எனவே, சிகிச்சையை நிறுத்த யார் முடிவெடுத்தது, அவருக்கு யார் அதிகாரம் அளித்தது என்பது குறித்தும் விரிவாக விசாரிக்க வேண்டும்" என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/ஜெயலலிதா-கீழே-தள்ளிவிடப்பட்டாரா-அடுக்கடுக்காக-சந்தேகங்களை-எழுப்பும்-ஓபிஎஸ்-ஆதரவாளர்கள்/article9567090.ece?homepage=true

  • தொடங்கியவர்
gallerye_232735702_1722306.jpg

''அப்பல்லோ மருத்துவமனை வருவதற்கு முன், ஜெயலலிதா தாக்கப்பட்டுள்ளார்; அவரது மரணத்திற்கு காரணமான, குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்,'' என, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறியுள்ளது, அ.தி.மு.க., வட்டாரத்தில், அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

 

Tamil_News_large_172230620170302232327_318_219.jpg

தமிழக சட்டசபையின் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன் ஆகியோர், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டில், நேற்று அளித்த பேட்டி:
கடந்த, 2016 செப்., 22ல், சென்னை, போயஸ் கார்டன் வீட்டில், ஜெயலலிதா கீழே தள்ளி விடப்பட்டுள்ளார் என, அப்பல்லோ மருத்துவமனையின், 'டிஸ்சார்ஜ் சம்மரி'யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரை மருத்துவமனையில் சேர்க்கும் முன், போயஸ் கார்டனுக்கு ஆம்புலன்ஸ் அனுப்பும் படி, அப்பல்லோ மருத்துவமனைக்கு ஒருவர் போன் செய்துள்ளார். அந்த டி.எஸ்.பி., யார்; அவர் பெயர் என்ன என்பது எங்களுக்கு தெரியாது.
 

கண்காணிப்பு கேமரா


மருத்துவமனையில் இருந்து, ஆம்புலன்ஸ் எத்தனை மணிக்கு கிளம்பியது; எப்போது போயஸ் கார்டன் சென்றது. எத்தனை மணிக்கு ஜெ.,வை அழைத்துக் கொண்டு, மருத்துவ மனைக்கு வந்தது; உடன் வந்தது யார் என்பதை தெரிவிக்க வேண்டும்.ஆம்புலன்ஸ் வேன் வந்த காட்சிகள், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும்.

போயஸ் கார்டனிலும், கண்காணிப்பு கேமரா உள்ளது; அவற்றின் பதிவுகளை வெளியிட வேண்டும். அப்போது தான், ஜெ., எப்படி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்ற உண்மைகளை அறிய முடியும்.மருத்துவ மனையில் பொருத்தப்பட்டிருந்த, 27 கண்காணிப்பு கேமராக்கள், ஜெ., வந்த பின் அகற்றப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற உத்தர விட்டது யார் என்பதை தெரிவிக்க வேண்டும்.

2016 மே மாதம், ஜெ.,க்கு சிகிச்சை அளித்த, பிரபல டாக்டர் சாந்தாராம், 'வீட்டில் தருகிற சிகிச்சை, உங்களுக்கு மாரடைப்பை

வரவழைக்கும்' என, தெரிவித்துள்ளார்.மறு நாளில் இருந்து, அந்த டாக்டரை உள்ளே அனுமதிக்கவில்லை; அவரை வெளியேற்றி விட்டனர். இதற்கும் பதில் கூற வேண்டும். அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், ஜெ., மறைவு தொடர்பான வழக்கில்,சென்னை உயர் நீதிமன்றத்தில், பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது. அதில், ஜெ., உயிரை எடுக்க, சிகிச்சையை நிறுத்திய தாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு, அனுமதி அளித்தது யார்; உயிரை எடுக்க சொன்னது யார்; இது, புரியாத புதிராக உள்ளது. ஜெயலலிதாவின் முடிவை நிர்ணயித்த சக்தி யார்; குடும்ப உறுப்பினர் அல்லாத ஒருவர், இந்த உத்தரவை பிறப்பிக்க, அதிகாரம் உண்டா என்பதை தெரிவிக்க வேண்டும்.
 

தடுத்தது யார்?


மத்திய அரசு,2015 மே, ஜூன் மாதங்களில், ரகசியமாக ஒரு கடிதத்தை அனுப்பியது. அத்துடன், ஜெ.,வை சிகிச்சைக்காக, சிங்கப்பூரில் உள்ள செயின்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, 'பாரா ஆம்புலன்ஸ்' ஹெலிகாப்டரை, சென்னைக்கு அனுப்பியது. ஆனால், அவர் அங்கு அழைத்து செல்லப்படவில்லை; அதை தடுத்தது யார்?

டில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், ஜெ.,க்கு சிகிச்சை அளித்தனர். அந்த மருத்துவ அறிக்கையை, மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். ஜெ.,க்கு, 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஜெ., மருத்துவமனைக்கு வந்த போது, தேசிய பாதுகாப்பு படையினரை, வீட்டுக்கு போகும்படி சொன்னது யார்?

தலைவர்களை பாதுகாக்கும், தேசிய பாதுகாப்பு படை வீரர்கள், தலைவரை பாதுகாக்க தவறி னால், துாக்கு தண்டனை வழங்க வேண்டும் என, சட்டம் உள்ளது. தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் இல்லாமல், அப்பல்லோவில் ஜெய லலிதா இருந்துள்ளார். இதனால், குறிப்பிட்ட குடும்பத்தினர், அங்கு சர்வ சாதாரணமாக நடமாடி உள்ளனர். ஜெ., மறைவுக்கு காரண மான குற்றவாளிகளை, நாங்கள் நெருங்கி விட்டோம். ஜெ.,க்கு பல் வேறு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை களை வழங்க, அனுமதி அளித்தது யார்; ஜெ., இட்லி சாப்பிட்டார், தோசை சாப்பிட்டார் என, கூறினர். 'இசட்' பிரிவு பாதுகாப்புள்ள ஜெ.,க்கு கொடுக்கப் படும் உணவு, ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்யப்பட்ட, உணவு அறிக்கைகளை வெளியிட வேண்டும்.

ஜெ., சிகிச்சையில் இருந்த நாட்களில், நவ., 2 முதல், டிச., 5 வரை, வெளிநாட்டு மருத்துவர் கள் வரவில்லை; அதற்கு, என்ன காரணம்?

ஜெ.,க்கு சிகிச்சை அளித்த வெளி நாட்டு டாக்டர்களுக்கு, தமிழ் தெரியாது; ஆங்கிலம் மட்டும் தெரியும். அருகில் இருந்த வர்களுக்கு, ஆங்கிலம் தெரியாது. அப்படிப் பட்ட நிலையில், ஜெ.,க்கு சிகிச்சை அளிக்க, அனுமதி அளித்தது யார்?

ஜெ., கன்னத்தில் நான்கு ஓட்டைகள் இருந்தன. 'பிளாஸ்திரி' ஒட்டப்பட்டு, தோல் கிழிந்துள்ள தாக தெரிவித்தனர். 'எம்பார்மிங்' செய்த டாக்டர், அதை பார்க்கவில்லை என, தெரிவித் தார். அந்த ஓட்டை விழ காரணம் என்ன; அதை தெரிவிக்க வேண்டும்.கவர்னர், மத்திய அமைச்சர்கள் என, யாரும் ஜெ.,வை பார்க்க வில்லை. அவர்கள் வருகையை, போலீசார் குறித்து வைத்துள்ளனர். ஜெ.,வால் விலக்கி வைக்கப்பட்டவர்கள் வந்த விபரமும் இருக்கும். அதை, அரசு வெளியிட வேண்டும்.

ஜெ.,க்கு, 'எக்மோ' சிகிச்சை அளிக்க, குடும்ப உறுப்பினர்கள் அனுமதி அளிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் எனக்கூற வழங்கப்பட்ட ஆதாரங்கள் எவை; அவற்றை வெளியிட வேண்டும்.

ஜெ., மறைவில் எழுப்பப்பட்ட சந்தேகங்கள் அடிப்படையில், அவர், 2016 டிச., 4 மாலை, 4:30 மணிக்கு இறந்துள்ளார். அதன்பின், எக்மோ சிகிச்சை துவக்கப்பட்டு, டிச., 5 வரை நடந்துள்ளது. அந்த விபரங்களுக்கு எந்த பதிலும் இல்லை. அதை, நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.

இடைத்தேர்தலின் போது, படிவங்களில் ஜெ., கையை எடுத்து, கட்டை விரல் ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போதிருந்த டாக்டர் பாலாஜி, விசாரிக்கப்பட வேண்டும். அப்போது, வேறு என்ன ஆவணங்களில் கையெழுத்து வாங்கப்பட்டது என்பது தெரிய வேண்டும். அப்பல்லோ மருத்துவமனையில், உலகத்தரம் வாய்ந்த, 'பிசியோதெரபிஸ்ட்'கள் இருக்கும் போது, சிங்கப்பூரில் இருந்து ஏன் வரவழைக்க வேண்டும்; இதற்கான பதில், நாட்டு மக்களுக்கு தேவை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பிப்ரவரி, ௭ம் தேதி, சென்னை அண்ணாநகரில் உள்ள தன் வீட்டில், நிருபர்களுக்கு பேட்டி அளித்த பி.எச்.பாண்டியன், 'அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்படு வதற்கு முன், அவரது வீட்டில் வாக்குவாதம் நடந்துள்ளது. மன அழுத்தத்தில் கீழே விழுந்த அவர், துாக்கி விடக்கூட ஆளில்லாமல் தவித்துள்ளார்' என, தெரிவித்தார்.

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை வருவதற்கு முன், ஜெ., தாக்கப்பட்டுள்ளார் என, மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது, அ.தி.மு.க., வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1722306

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.