Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலா புஷ்பா மீதான புகாரை வாபஸ் பெற்ற இளம்பெண் கடத்தல்? அதிமுக சேர்மன் மீது சகோதரி புகார்

Featured Replies

சசிகலா புஷ்பா மீதான புகாரை வாபஸ் பெற்ற இளம்பெண் கடத்தல்? அதிமுக சேர்மன் மீது சகோதரி புகார்

sasikala_pushpa_complaint_womens_17118.j

சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், புகாரை வாபஸ் பெற்ற பெண்ணைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் போலீஸாரிடம் புகார் அளித்தனர்.

அ.தி.மு.க பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மீது பரபரப்புப் புகார்களைத் தெரிவித்து அரசியல் அரங்கில் சூட்டைக் கிளப்பியவர், சசிகலா புஷ்பா. அ.தி.மு.க சார்பாக மாநிலங்களவை உறுப்பினரான இவர், ஜெயலலிதாவின் மரணத்தில் சதி இருக்கிறது எனத் தெரிவித்ததுடன், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி சர்ச்சையை உருவாக்கினார். அத்துடன், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டது, கட்சி விதிகளுக்கு முரணானது என்று தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தார்.

சர்ச்சைகளுக்குப் பஞ்சம் இல்லாத சசிகலா புஷ்பா மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகின. பணம் மோசடி, பாலியல் குற்றச்சாட்டு என அவர் மீது தொடரப்பட்ட வழக்குகளை அவர் எதிர்கொண்டுவருகிறார். சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகர், மகன் ஆகியோர் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனைத் தெரிவித்தபோது சசிகலா புஷ்பா அடித்து உதைத்ததாகவும், அவரது வீட்டில் வேலை செய்த பணிப்பெண்களான ஜான்சிராணி, பானுமதி ஆகியோர் போலீஸில் புகார் செய்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், சசிகலா புஷ்பா உட்பட மூவரும் முன் ஜாமீன் பெற்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கைத் தொடர்ந்த பணிப்பெண்கள் ஜான்சிராணி, பானுமதி ஆகியோர் தற்போது புகாரை வாபஸ் பெறுவதாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யான அஸ்வின் கோட்னிஸுக்கு மனு அனுப்பினர். அதில், "எங்களுக்கு சசிகலா புஷ்பாவோ, அவரது குடும்பத்தினரோ எந்தத் தொல்லையும் கொடுக்கவில்லை. நாங்கள் அவரது வீட்டில் சுதந்திரமாக நடத்தப்பட்டோம். எங்களை சிலர் சந்தித்து சசிகலா புஷ்பா மீது புகார் கொடுக்குமாறு வற்புறுத்தினார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்காவிட்டால், பல பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என மிரட்டினார்கள். அதனால் அவர்கள் சொன்னபடி நாங்கள் புகார் செய்தோம். தற்போது எந்த நெருக்கடியும் இல்லாமல் இப்போது அந்தப் புகாரை வாபஸ் பெற விரும்புகிறோம்" எனக் கேட்டுக்கொண்டனர்.

இந்த மனு தபாலில் அனுப்பியிருந்த நிலையில், அதனைப் பெற்றுக் கொண்டதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "சசிகலா புஷ்பா மீது புகார் கொடுத்திருந்த ஜான்சிராணி, பானுமதி ஆகியோர் பெயரில் அனுப்பப்பட்ட ஒரு கடிதம் கிடைத்தது. அந்தக் கடிதத்தை தபாலில் அனுப்பியிருப்பதால், அதனை அவர்கள்தான் அனுப்பினார்களா என்பது பற்றி ஆய்வு செய்கிறோம். அதில் உள்ள கையெழுத்தும், ஏற்கெனவே கொடுக்கப்பட்ட புகார் மனுவில் உள்ள கையெழுத்தும் ஒரே மாதிரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து வருகிறோம். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால், நீதிமன்றத்தின் முடிவுக்குப் பின்னரே எதையும் சொல்ல இயலும்" என முடித்துக்கொண்டார்.

இதனிடையே, சசிகலா புஷ்பா மீதான புகாரை வாபஸ் பெற்றதில் இருந்து தனது தங்கையைக் காணவில்லை என ஜான்சிராணி நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், "எங்களை சிலர் மிரட்டியதால் சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கொடுத்தோம். அரசியல் நெருக்கடி காரணமாக எங்களை சிலர் அச்சுறுத்தி இந்தப் புகாரைக் கொடுக்கச் சொன்னதால் அவர்கள் கேட்டுக்கொண்டபடி செயல்பட்டோம். தற்போது, நாங்கள் எங்கள் குடும்பத்தினருடன் இருக்கிறோம். இப்போதைய சூழலில், உண்மையைத் தெரிவிப்பது நல்லது என்பதால் புகாரை வாபஸ் பெற்றோம். நாங்கள் புகார் மனுவை வாபஸ் பெற்ற பின்னர், எங்களை தொலைபேசி வாயிலாகவும் நேரிலும் சிலர் மிரட்டி வருகிறார்கள். புகாரை வாபஸ் பெற்றதில் இருந்து என் தங்கை பானுமதியைக் காணவில்லை. ஆனைக்குடி கிராமத்தில் இருந்த அவரை, அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் யூனியன் சேர்மனான ஆனந்தராஜ் என்பவர் கடத்திச் சென்றிருப்பாரோ என்கிற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. அதனால், காணாமல் போன என் தங்கையை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

புகார் அளித்தவர்களே அதனை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்த பின்னரும் போலீஸார் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது சசிகலா புஷ்பா தரப்பினருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், வேறு வழக்குகளில் தாங்கள் சிக்கக் கூடும் என்கிற கலக்கத்தில் சசிகலா புஷ்பாவும் அவரது ஆதரவாளர்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/82502-minor-girls-kidnapped-who-complaints-about-sasikala-pushpa.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.