Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்சி பிரச்னையில் தேர்தல் கமிஷன் தலையிட முடியாது: நவநீதகிருஷ்ணன்

Featured Replies

கட்சி பிரச்னையில் தேர்தல் கமிஷன்
தலையிட முடியாது: நவநீதகிருஷ்ணன்
 
 
 

சென்னை:''அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னையில், நீதிமன்றமோ, தேர்தல் கமிஷனோ தலையிட முடியாது,'' என, அ.தி.மு.க., - எம்.பி., நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

Tamil_News_large_1722320_318_219.jpg

 

அவர் அளித்த பேட்டி:


ஜெ., மரணம் தொடர்பான வழக்கு, நீதிமன்றத் தில் நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவை யில் இருக்கும் போது, அதுகுறித்து பேசக் கூடாது. இது தொடர்பாக, பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் இருப்பது, சட்டப்படி தவறு; நீதிமன்ற அவமதிப்புக்கு ஆட்பட வாய்ப்புண்டு.

ஜெ., மருத்துவமனையில் இருந்த, 75 நாட்கள் உடன் இருந்தவர். முதல்வராக இருந்த இரண்டு மாதங்கள், ஏன் மவுனமாக இருந்தார்; அதற்கான காரணத்தை, அவர் தெரியப்படுத்த வேண்டும். அவர் போலியாக, நீலிக்கண்ணீர் வடிக்கிறார்; நாடகமாட பார்க்கிறார்.

தண்டனை பெற்றவர்கள், கட்சியின் பொதுச் செயலராக இருக்கக் கூடாது என, எந்த

சட்டமும் கிடையாது. லாலு பிரசாத் யாதவ், சிறை யில் இருந்த போதும், கட்சி தலைவராக இருந்தார். தண்டனை பெற்றவர்கள், அ.தி.மு.க., பொதுச்செய லராக இருக்க, தடை கிடையாது. சசிகலா, பொதுக் குழுவால் ஏற்று கொள்ளப் பட்டு, பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார்; மூத்த நிர்வாகிகள் வற்புறுத்தல் காரணமாக, பொதுச் செயலரானார். தேர்தல் கமிஷனுக்கு, உரிய பதில் வழங்கப்பட்டுள்ளது.

உட்கட்சி விவகாரத்தில், நீதிமன்றமோ, தேர்தல் கமிஷனோ தலையிட முடியாது. 'நான்
நீதிமன்றத்திற்கு செல்ல மாட்டேன்' என, உறுதி அளித்து தான், எல்லாரும் கட்சியின் உறுப்பின
ராகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

அ.தி.மு.க.,வினர் கொதிப்பு


அ.தி.மு.க., - எம்.பி., நவநீதகிருஷ்ணன், நேற்று அளித்த பேட்டியில், ''தண்டனை பெற்றவர்கள், கட்சியின் பொதுச்செயலராக இருக்கக் கூடாது என, எந்த சட்டமும் கிடையாது. லாலு பிரசாத் யாதவ், சிறையில் இருந்த போதும், கட்சி தலைவராக இருந்தார். தண்டனை பெற்றவர், அ.தி.மு.க., பொதுச்செயலராக இருக்க, தடை கிடையாது,'' என தெரிவித்தார்.இது, அ.தி.மு.க.,வினரிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
 

இதுகுறித்து, நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:


சசிகலா மீது, மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, நவநீத கிருஷ்ணன் பேச்சு அமைந்துள்ளது. சசிகலா தவறு செய்யவில்லை

 

என கூறுவதற்கு பதில், தண்டனை பெற்றவர், பதவியில் இருக்கலாம் எனக்கூறியது, மக்கள் கோபத்தை அதிகரிப்பதாக உள்ளது.

மேலும், கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிக்கிய, லாலு பிரசாத் யாதவுடன், சசிகலாவை ஒப்பிட்டு பேசி உள்ளார். லாலு பிரசாத் யாதவ் மேல்முறையீடு வழக்கு, இன்னும் நிலுவை யில் உள்ளது. அதன் காரணமாக, அவர் பதவியில் உள்ளார்.

ஆனால், சசிகலாவிற்கு, உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்து விட்டது. அது தெரியாமல், தேவையின்றி அவருடன் ஒப்பிட்டு பேசி உள்ளார். தவறு செய்த சசிகலா, தலைவர் பதவியில் இருப்பது தவறில்லை என்ற ரீதியில், அவர் பேசியது, மக்களின் கோபத்தை அதிகரிக்க செய்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1722320

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.