Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு எழுதிய கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு எழுதிய கடிதம்

1263559144palani5.jpg

 

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளதாக தமிழக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது, 

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் மீண்டும் நடந்திருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். 

நாகப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 9 மீனவர்களும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து 4 மீனவர்களும் நேற்று மீன்பிடிக்கச் சென்ற வேளை அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து கங்கேசன்துறைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

அவர்களின் படகுகளும் பிடிபட்டுள்ளன. தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பிடிக்கப்படுவதும் தமிழக அரசுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது இலங்கையின் பிடியில் 48 தமிழக மீனவர்கள் உள்ளனர். மேலும், 122 மீன்பிடி படகுகளும் உள்ளன. ஏழை மீனவர்களின் ஒரே வாழ்வாதாரமான படகுகளை இலங்கை அரசு தன்வசம் வைத்துள்ளது. இப்படியொரு நிலைப்பாட்டை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

இதை ஒரு முக்கிய பிரச்சினையாக எடுத்துக்கொண்டு, அந்த படகுகள் மேலும் மேலும் சேதமடையாமல் அவற்றை விரைவாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இதற்காக இலங்கை அரசின் உயர் அதிகாரிகளுடன் பேச வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

http://tamil.adaderana.lk/news.php?nid=88691

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.