Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் குறித்த தினகரன் பதிலை ஏற்க முடியாது: தேர்தல் ஆணையம்

Featured Replies

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் குறித்த தினகரன் பதிலை ஏற்க முடியாது: தேர்தல் ஆணையம்

 
சசிகலா | கோப்புப் படம்.
சசிகலா | கோப்புப் படம்.
 

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் குறித்த தினகரன் பதிலை ஏற்க முடியாது. அது குறித்த நோட்டீஸுக்கு சசிகலாதான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ''அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் குறித்து தேர்தல் ஆணையம் அளித்த நோட்டீஸுக்கு பதில் அளித்த தினகரன் பதிலை ஏற்க முடியாது.

தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆவணங்களில் அதிமுக நிர்வாகிகள் பட்டியலில் தினகரன் பெயரோ, அவரது பொறுப்பு விவரமோ இல்லை. தினகரன் அதிமுகவில் எந்த ஒரு அதிகாரபூர்வ பதவியிலும் இல்லை. கட்சியில் அதிகாரபூர்வ பதவியில் இருப்பவர் மட்டுமே பதிலளிக்க முடியும்.

நோட்டீஸுக்கு சசிகலாதான் பதிலளிக்க வேண்டும். வரும் 10-ம் தேதிக்குள் சசிகலா கையெழுத்திட்ட பதிலை அனுப்ப வேண்டும்'' என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பின்னணி:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், டிசம்பர் 29-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானார். டிசம்பர் 31-ம் தேதி பொறுப்பேற்றார். ஜெயலலிதா காலமான அன்றே முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், பிப்ரவரி 5-ம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் சசிகலா சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, முதல்வராகும் முயற்சியை எடுத்தார்.

இந்நிலையில், பிப்ரவரி 7-ம் தேதி அதிமுக தலைமையை ஓ.பன்னீர்செல்வம் எதிர்த்தார். அடுத்தநாள் அதிமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அப்போதே, பொருளாளர் பொறுப்பில் இருந்து தன்னை நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை என பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதன்பின், அவைத் தலைவர் மதுசூதனன், ஓ.பன்னீர் செல்வம் பக்கம் வந்தார். அவரையும் கட்சியை விட்டு சசிகலா நீக்கினார். அப்போது, சசிகலா தன்னை நீக்கும் முன் நான் அவரை நீக்கிவிட்டதாக மதுசூதனன் தெரிவித்தார்.

தொடர்ந்து, அதிமுகவின் சட்ட விதிகளை காரணம் காட்டி, சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்தை ஏற்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு மதுசூதனன் கடிதம் எழுதி னார்.

கடந்த 14-ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் சசிகலா சிறைக்கு சென்றார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்பியான வி.மைத்ரேயன் தலைமையில் 11 எம்பிக்கள் கொண்ட குழுவினர் கடந்த 16-ம் தேதி டெல்லியில், இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர். அதில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புகாருக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. சசிகலா இப்போது இருக்கும் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அந்த நோட்டீஸுக்கான பதிலை அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் தினகரன் அனுப்பினார். தற்போது அந்த பதிலை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்று அறிவித்துள்ளது.

நோட்டீஸுக்கு சசிகலாதான் பதிலளிக்க வேண்டும். வரும் 10-ம் தேதிக்குள் சசிகலா கையெழுத்திட்ட பதிலை அனுப்ப வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/அதிமுக-பொதுச்-செயலாளர்-சசிகலா-நியமனம்-குறித்த-தினகரன்-பதிலை-ஏற்க-முடியாது-தேர்தல்-ஆணையம்/article9569738.ece?homepage=true

  • தொடங்கியவர்

பொதுச்செயலர் நியமனம் தொடர்பாக, சசிகலா வுக்கு அனுப்பிய நோட்டீசுக்கு, தினகரன் கையெழுத்திட்டு தரப்பட்ட விளக்கம் செல்லாது. அவர், கட்சியில் எந்த அதிகாரப்பூர்வ பதவியிலும் இல்லை. அதனால், உரிய முறை யில் மீண்டும் விளக்கம் அளிக்க வேண்டும்' என சசிகலாவுக்கு, தேர்தல் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

 

Tamil_News_large_172296020170303230500_318_219.jpg

அ.தி.மு.க.,வில், சசிகலா மற்றும் பன்னீர் செல்வம் அணியினர், தினமும் பல விஷயங் களில் போட்டி போட்டு செயல்பட்டாலும், அவை அனைத்தும், வெளியுலகத்திற்காக மட்டுமே. உண்மையில், அ.தி.மு.க., பொதுச் செயலர் விவகாரத்தில், தேர்தல் ஆணையம் என்ன தீர்ப்பு வழங்கப் போகிறது என்பதே, இரு அணிகளிலும் உள்ளவர்களின் பதைபதைப்பாக உள்ளது.

காரணம், தேர்தல் ஆணையம் வழங்கும் தீர்ப்பு தான், எதிர்காலத்தில் கட்சியும், சின்னமும் யாருக்கு சொந்தம் என்பதை நிர்ணயிக்கும்.
 

'சஸ்பென்ஸ்'


கிரிக்கெட் விளையாட்டில், களத்தில் உள்ள இரு அம்பயர்களும், முடிவை தீர்மானிக்க இயலாத நிலையில், மூன்றாவது அம்பயரின் கையில் முடிவு விடப்படும். அப்போது, இரு அணிகளின் வீரர்கள் மட்டுமின்றி, பார்வையாளர்கள் அனை வரின் கவனமும், பெரிய, 'ரிசல்ட்' பலகையை நோக்கியே இருக்கும். கிட்டத்தட்ட அதே நிலையில் தான், அ.தி.மு.க.,வின் முன்னணி

தலைவர்கள் முதல், அடிமட்ட தொண்டர்கள் வரை, தேர்தல் ஆணையம் என்ற, மூன்றாவது அம்பயரின் தீர்ப்புக்காக,உச்சகட்ட,'சஸ்பென்ஸ்' உடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், சசிகலாவை பொதுச்செயலராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பன்னீர் செல்வம் அணியினர் கொடுத்த புகார் மனு தொடர்பாக, சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அந்த நோட்டீசுக்கான சசிகலாவின் விளக்கம், தேர்தல் ஆணையத்திற்குவந்து சேர்ந்திருந்தாலும், அது, தினகரன் சார்பில் தரப்பட்டு இருந்தது.

வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடந்த போது இருந்த, நிர்வாகிகள் பட்டியல் தான், தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. அதில், தினகரனின் பெயர் இல்லை.அதனால், தினகரன் கையெழுத்துடன் தேர்தல் ஆணையத்தில் தரப்பட்ட விளக்கம் செல்லாது. தேர்தல் ஆணை யத்திற்கு,அவர் விளக்கம் தர முடியாது. எனவே, 'நீங்கள் தான் உரிய முறையில் விளக்கம் தர வேண்டும்' என, சசிகலாவுக்கு தேர்தல் ஆணை யம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக, டில்லி தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் நேற்று கூறியதாவது:

அ.தி.மு.க., பொதுச் செயலர் நியமன பிரச்னையில், சசிகலாவுக்கு அனுப்பியிருந்த நோட்டீசிற்கு, தினகரன் பெயரில், விளக்கம் வந்தது. அதை தலைமைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை.சசிகலா சார்பில், தினகரன் கொடுத்த விளக்கத்தை விரிவான முறையில், ஆய்வு செய்த அதிகாரிகள், அதை ஏற்க முடியாது என தீர்மானித்துள்ளனர்.
 

ஏற்க முடியாது


தினகரன் கையெழுத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட

 

அந்த விளக்கம் செல்லாது என, முடிவு செய்து உள்ளனர். அதனால், சசிகலாவுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கோர முடிவு செய்யப் பட்டது. அதன்படி, சசிகலாவுக்கு தேர்தல் கமிஷனின் செயலர் பிரமோத் குமார் சர்மா, மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில் கூறப்பட்டுஉள்ளதாவது:

தினகரன் யார் என்றே தெரியாத சூழ்நிலையில், உங்கள் சார்பில், அவர் பெயரில் விளக்கம் கொடுத்ததை ஏற்க முடியாது. எங்களிடம் உள்ள அதிகாரப்பூர்வ ஆவணங்களில், தினகரனின் பெயர் இல்லாததால், தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் அளிக்க, அவருக்கு அதிகாரமோ, உரிமையோ கிடையாது. எனவே, நீங்கள் தான் உரிய முறையில் விளக்கம் தர வேண்டும்.

நீங்கள் சிறையில் இருப்பதால், தினகரன் விளக்கம் கொடுத்தார் என, சொன்னாலும், அதை ஏற்பதற்கு இல்லை. உங்களின் கையெழுத்திட்ட விளக்க கடிதம் தான் எங்க ளுக்கு தேவை. விளக்கம் இல்லை யெனில், பொதுக்குழுவின் போது, அ.தி.மு.க., நிர்வாகி கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த, மூத்த தலைவர் அல்லது நிர்வாகிகளில் யாராவது ஒருவர் விளக்கம் தரலாம்.

அப்படி விளக்கம் தரும் போது, அவர் விளக்கம் தருவதற்கு, நீங்கள் அதிகாரம் அளித்துள்ள தற்கான சான்றும், உடனிருக்க வேண்டும். அப்போது தான், உங்களது விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படும். தற்போது அனுப்பப் பட்டுள்ள புதிய நோட்டீ சுக்கான, உங்களின் விளக்கம், வரும், ௧௦ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத் திற்கு வந்து சேர வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1722960

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.