Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிரஞ்சன் மார்டி நியமனத்துக்குப் பின்னால்... உளவுத்துறையின் உள்விவகாரங்கள் #VikatanExclusive

Featured Replies

நிரஞ்சன் மார்டி நியமனத்துக்குப் பின்னால்... உளவுத்துறையின் உள்விவகாரங்கள் #VikatanExclusive

Niranjan_Mardi-_Apurva_varma_11104.jpg

ஜெயலலிதாவால் இடமாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி நிரஞ்சன் மார்டிக்கு, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னணியில் பல உள்விவகாரங்கள் இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. 

அதிரடி இடமாற்றம்

தமிழக உள்துறை முதன்மைச் செயலாளராக அபூர்வ வர்மா இருந்தார். இது தவிர, இவர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆகியவற்றையும் கவனித்துவந்தார். இந்நிலையில், அபூர்வ வர்மாவை அந்தப் பதவியிலிருந்து நேற்று (மார்ச் 3) தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இடமாற்றி உத்தரவிட்டுள்ளார். உள்துறை முதன்மைச் செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்குப் பின்னால், பல உள்விவகாரங்கள் இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

''உள்துறை முதன்மைச் செயலாளராக இருந்த அபூர்வ வர்மா, சுற்றுலா, கலை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளராக இடமாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவர், முதன்மைச் செயல் அலுவலர், தமிழ்நாடு சாலைப்பகுதி திட்ட இயக்குநர் பொறுப்பு ஆகியவற்றைக் கவனித்துவந்த நிரஞ்சன் மார்டி, உள்துறைச் செயலாளராகவும்  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை முதன்மைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

அசைக்க முடியாத அபூர்வ வர்மா 

நிரஞ்சன் மார்டிக்கு உள்துறைச் செயலாளர் பதவி புதியதல்ல. இவர், ஏற்கெனவே கடந்த 2013-ம் ஆண்டு இந்தப் பதவியில் இருந்தவர். உள்துறை முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்தபோது, சில உள்விவகாரங்களில் நிரஞ்சன் மார்டியின் பெயர் சிக்கியதால், உள்துறை முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து ஜெயலலிதாவால் இடமாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக அபூர்வ வர்மா, அந்தப் பதவிக்கு வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு மேல் அவர் அந்தப் பதவியில் இருந்தார்.  உள்துறை முதன்மைச் செயலாளர் பதவி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அந்தப் பதவியில் ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்டவர்களை நியமிப்பது வழக்கம். அந்த வகையில் அபூர்வ வர்மாவும் ஆளுங்கட்சிக்கு விசுவாசமாகவே இருந்தார். பீகாரைச் சேர்ந்த அபூர்வ வர்மா மீதும் சில குற்றச்சாட்டுக்கள் சொல்லப்பட்டன. 
குறிப்பாக, ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றத்தில் ஆளுங்கட்சியினரின் பேச்சைக்கூட சில நேரங்களில் கேட்காமல், தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு உள்ளது. அதே நேரத்தில் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம் பிடித்திருந்த அபூர்வ வர்மாவை அமைச்சர்களால்கூட எதுவும் செய்யமுடியவில்லை. 

வில்லங்க ஐ.பி.எஸ். அதிகாரி 

நீதிமன்றங்களில் தமிழக அரசு குட்டு வாங்கிய விவகாரங்களில், அபூர்வ வர்மாவும் ஒரு காரணம். நீதிமன்றத்தின் வழக்குகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காமல், பல கோப்புகள் ஆலோசனைப் பெயரில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கடைசி நேரத்தில் அதற்கு எடுக்கப்படும் முயற்சியால், அவைகள் நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால், தமிழக அரசுக்கு கெட்டபெயர் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, ஒரு வழக்கில் சிக்கிய வில்லங்க ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு, பதவி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் இதுவரை அவருக்குப் போஸ்டிங் போடவில்லை. தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு இடமாற்றம் கேட்ட ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர், சில 'சி' க்கள் கொடுத்த பிறகே இடமாறுதல் கிடைத்துள்ளது. முதல்வராகப் பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கும், நிரஞ்சன் மார்டிக்கும் நல்ல அறிமுகம் உள்ளது. இதனால், அவரை உள்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலக்கம் 

இதற்கிடையில், காபந்து முதல்வராக இருந்தபோது ஓ.பன்னீர்செல்வம், போலீஸ் கமிஷனர் ஜார்ஜை மாற்றவும், உளவுப்பிரிவு ஐஜியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தையும் நியமிக்கவும் உத்தரவிட்டார். உடனடியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை உளவுப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டார். இதற்கு அபூர்வ வர்மா தரப்பு காட்டிய ஆர்வம், சசிகலா தரப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றதும் டேவிட்சன் தேவாசீர்வாதத்தை இடமாற்றினார். அந்தப்  பதவிக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை. அப்போதே, அபூர்வ வர்மாவையும் இடமாற்ற ஃபைல்கள் மூவ் ஆகின. டேவிட்சன் தேவாசீர்வாதத்தைத் தொடர்ந்து, அபூர்வ வர்மா என்ற அடுத்த விக்கெட் வீழ்த்தப்பட்டுள்ளது. இதன்பிறகு ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது. இதற்காக, ஐ.பி.எஸ். இடமாற்ற உத்தரவு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது. இதனால், ஐபிஎஸ் அதிகாரிகளில் சிலர் கலக்கத்தில் உள்ளனர்" என்றனர். 

 ஜார்ஜுக்கு அதிர்ஷ்டம் 

சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனராக இருக்கும் ஜார்ஜ், தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி-யாக நியமிக்கப்பட உள்ளார். அதற்கான முன் ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இதன்மூலம், ஜார்ஜுக்கு இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பும் வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதாவால் சென்னை போலீஸ் கமிஷ்னர் பதவியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட ஜார்ஜ், மீண்டும் அதே பதவியில் பணியமர்த்தப்பட்டார். தற்போது, டிஜிபி-யாகவும் அமர உள்ளார். அதிர்ஷ்ட காற்று ஜார்ஜை நோக்கி வீசுவதாக போலீஸ்  வட்டாரங்கள் தெரிவித்தன. உளவுப்பிரிவு ஐஜி-யாகவும் ஜார்ஜுக்கு வேண்டப்பட்ட ஒரு ஐபிஎஸ்  அதிகாரியின் பெயர்தான் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம். 

மார்ச் மாத 'மார்டி'

2011ல் தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர். அதே ஆண்டில் சிறு, குறு. நடுத்தரத் தொழில்கள் துறையின் செயலாளர். 2012ல் நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறைச் செயலாளர். 2013 மார்ச்சில் உள்துறைச் செயலாளர். பிறகு புள்ளியியல் மற்றும் பொருளியல் துறையின் ஆணையாளர். 4 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே மார்ச்சில் நிரஞ்சன் மார்டிக்கு உள்துறை முதன்மைச் செயலாளர் பதவி கிடைத்துள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/82678-important-revelations-behind-niranjan-martis-appointment.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.