Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னை எதிர்ப்பது யாருயா? விழிபிதுங்கி நிற்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ.

Featured Replies

என்னை எதிர்ப்பது யாருயா? விழிபிதுங்கி நிற்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ.

Rajendran_mla_10307.jpg

சசிகலா ஆதரவாளரும் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் போகும் இடமெல்லாம், அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டியும், அவரது கொடும்பாவியை எரித்தும் போராட்டம் நடக்கிறது. தன்னை எதிர்ப்பது தீபா ஆதரவாளர்களா, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களா, பொது மக்களா என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார், கொறடா.

எம்.எல்.ஏ-க்கள், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து, எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களித்ததால், மக்கள் கடும் கோபத்தில் இருந்துவருகிறார்கள். அதன் வெளிப்பாடாகத் தொகுதிகளுக்கு வரும் எம்.எல்.ஏ-க்களை மக்கள் சிறைப்பிடிப்பது, கறுப்புக்கொடி காட்டி முற்றுகையிடுவது எனப் பல விதத்தில் பல நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறார்கள் எம்.எல்.ஏ க்கள். அதேபோல அ.தி.மு.க கொறடா தாமரை ராஜேந்திரன், பெரும்பாடுபட்டுவருகிறார்.

Rajendran_mla-_people_protest_10572.jpg

அரியலூர் அதிமுக மாவட்டச்செயலாளர், எம்எல்ஏ, அரசு கொறடா எனப் பல பதவிகளை வகித்துவரும் தாமரை ராஜேந்திரன், தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழாவை பள்ளிக்கல்வித்துறையினர் ஏற்பாடு செய்து இருந்தனர். அதன்படி கீழப்பழுவூர், திருமானூர், இலந்தைக்கூடம், திருமழப்பாடி, ஏலாக்குறிச்சி, கோவிலூர் ஐந்து இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் முதற்கட்ட விழா கீழப்பழுவூரில் நடந்தது. அப்போது, கொறடா தாமரை ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிக்கொண்டிருந்தபோது, மக்கள் கூட்டமாகக் கூடி கொறடா வெளியே வந்தவுடன் முற்றுகையிட்டு கறுப்புக்கொடி காட்டத் திட்டமிட்டிருந்துள்ளனர். இதனைத் தெரிந்துகொண்ட காவல்துறையினர், பிரச்னை எதுவும்  நடத்துவிடக்கூடாது என்பதற்காக போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மக்களைக் களையவைத்தனர்.

Rajendran_mla-_people_protest_1_10202.jp

அடுத்ததாக, ஏலாக்குறிச்சியில் நடக்கும் விழாவுக்கு கொறடா வரப்போகிறார் என்று தெரிந்துகொண்ட பொதுமக்களும், தீபா பேரவையினரும் தெரு முழுக்க கறுப்புக்கொடி ஏற்றியும், எங்கள் ஊர்க்குள் நுழைய கொறடாவுக்குத் தகுதியில்லை என்ற வாசகம் பொருந்திய பதாகைகளுடன் போராட்டம் நடத்த தயாராக இருந்தனர். இதைக் காவல்துறை மூலமாக அறிந்த தாமரை ராஜேந்திரன், திருமானூர், இலந்தைக்கூடம் ஆகிய பகுதிகளுக்கு மட்டும் இலவச சைக்கிள் வழங்கிவிட்டு, பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக ஏலாக்குறிச்சி பகுதிக்குச் செல்லாமல் விழாவை ரத்து செய்து பாதியிலே சென்றுவிட்டார். இதனைத் தெரிந்துகொண்ட பொதுமக்கள், கொறடாவின் கொடும்பாவியைக் கொளுத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு, 'இப்பகுதிக்கு எம்.எல்.ஏ எப்போது வந்தாலும் நாங்கள் எதிர்ப்போம்' என்று எச்சரித்துள்ளனர்.

அதேபோல் அஸ்தினாபுரம் அரசுப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழாவுக்கு கொறடா வந்தபோது அந்த கிராமமக்கள் கறுப்புக்கொடி காட்டி தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்ய முயன்றுள்ளனர். பின்பு காவலர்கள் தலையிட்டு பிரச்னையைத் தீர்த்துவைத்துள்ளார்கள். 'கொறடா எப்போது வந்தாலும் கறுப்புக்கொடி காட்டுவோம்' என்று எச்சரித்துள்ளனர் அஸ்தினாபுரம் மக்கள். மக்களின் தொடர் எதிர்ப்பால் எங்குபோனாலும் பொதுமக்கள் முற்றுகையிடுவதால் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையே தவிர்த்துவருகிறாராம் ராஜேந்திரன். எப்போது எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வலம் வருகிறார் ராஜேந்திரன்.

Rajendran_mla-_people_protest_1a_10439.j

எம்.எல்.ஏ தாமரை ராஜேந்திரன் மீது ஏன் இவ்வளவு கோபம் என்று ஏலாக்குறிச்சியில் போராட்டம் நடத்திய எஸ்.எஸ்.ராஜன் என்பவரிடம் பேசியபோது, "அவரது உருவபொம்மை எரித்து போராட்டம் நடத்தியது எங்களுடைய சொந்த விருப்புவெறுப்புக்காக அல்ல. இவரை நம்பியிருந்த மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் கொறடா. இதற்கு முன்பு கூட இம்மாவட்டத்தில் இப்படிப்பட்ட  எதிர்ப்பு இல்லையே. இப்போது மட்டும் அதிக அளவில் எதிர்ப்பு கிளம்பி இருப்பதற்கு என்ன காரணம் என்று நீங்களே சிந்தித்துக்கொள்ளுங்கள். கூவத்தூர் விடுதியில் சொகுசு வாழ்க்கையை அனுபவித்துவிட்டு, மக்களின் எதிர்ப்பார்ப்பை அவர் மதிக்கவில்லை. மக்கள் கருத்துக்களை கேட்காத எம்.எல்.ஏ எங்களுக்குத் தேவையில்லை.

கோவை எம்.எல்.ஏ அருண்குமார், "அம்மாவை ஏற்றுகொண்டவன் நான். என்னைத் தேர்ந்தெடுத்தவர்கள் மக்கள்தான். அவர்கள் அறிவுரையால் நான் யாருக்கும் ஆதரவாக வாக்களிக்க மாட்டேன்" என்று கம்பீரமாகப் பேட்டிக்கொடுத்துவிட்டு வெளியே சென்றார். அதுபோல் இவரும் யாருக்கும் வாக்களிக்காமல் வந்திருந்தால் இவரை தங்கத்தட்டில் வைத்துக் கொண்டாடியிருப்போம். அடுத்தமுறையும் எம்.எல்.ஏ.வாக நாங்களே தேர்ந்தெடுத்திருப்போம். அதை விட்டுவிட்டு அம்மாவை நயவஞ்சமாகக் கொன்ற குற்றவாளிகளோடு பணத்துக்கும், பதவிக்கும் ஆசைபட்டு நயவஞ்சகர்களோடு சேர்ந்துகொண்டு மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார். அவர் இந்தப் பகுதிக்கு எப்போது வந்தாலும் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம்" என்று ஆவேசப்பட்டார்.

http://www.vikatan.com/news/tamilnadu/82802-people-showing-black-flag-against-admk-mla-thamarai-rajendran.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.