Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலாவுக்கு எதிராக விசாரணைக் கமிஷன்! - எடப்பாடி பழனிசாமியை எகிற வைக்கும் கடிதம் #VikatanExclusive

Featured Replies

சசிகலாவுக்கு எதிராக விசாரணைக் கமிஷன்! - எடப்பாடி பழனிசாமியை எகிற வைக்கும் கடிதம் #VikatanExclusive

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதேநேரத்தில், 'சசிகலா மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக விசாரணைக் கமிஷன் அமையுங்கள்' என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி.

எடப்பாடி பழனிசாமி 

ஆர்.கே.நகரில் நலத்திட்ட பணிகள், மாவட்டங்களில் சுற்றுப் பயணம் என இடைத்தேர்தல் பிளஸ் உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'அம்மாவுக்குக் கிடைத்த வரவேற்பு எங்களுக்கும் கிடைக்கும்' என்ற நம்பிக்கையில் கோட்டையில் வலம் வருகிறார். புதிய அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அணி வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளது. 'இந்த ஆட்சி எத்தனை நாள் என்று பாருங்கள்' என பா.ஜ.க நிர்வாகிகளும் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், பன்னீர்செல்வத்தைப் போலவே, புன்னகை மாறாத முகத்துடன் வலம் வருகிறார் எடப்பாடி பழனிசாமி. "ஆட்சி அதிகாரத்திற்குள் எந்தவித சிக்கலும் வந்துவிடக் கூடாது என்ற நோக்கில், ஆளும்கட்சி எம்.எல்.ஏக்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு எம்.எல்.ஏக்களின் பின்னாலும், உளவுத்துறை காவலர்கள் எந்த நேரமும் வலம் வருகின்றனர். சந்தேக வளையத்தில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர். மாநில அரசின் நிதிநிலை மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவும் எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன. அதை எதிர்கொள்வது குறித்தும் அ.தி.மு.க வட்டாரத்தில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், ஆட்சிக்கு எதிரானவர்களை சரிக்கட்டும் வேலைகளிலும் எடப்பாடியின் ஆட்கள் களமிறங்கியுள்ளனர்" என விவரித்த சசிகலா புஷ்பா ஆதரவாளர் ஒருவர், 

"நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து சசிகலா புஷ்பாவை சிலர் அணுகியுள்ளனர். 'உங்கள் மீதான வழக்குகளை நீர்த்துப் போகச் செய்கிறோம். எங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் வேகப்படுத்த வேண்டாம். எங்களை நீங்கள் உறுதியாக நம்பலாம்' என வாக்குறுதி அளித்துள்ளனர். சசிகலா புஷ்பா மீதான வழக்குகளை நீர்த்துப் போகச் செய்வது குறித்து உறுதிமொழி அளித்துள்ளனர். முதல்வரின் தூதுவர்களை நம்பலாமா என விவாதித்து வருகிறார் சசிகலா புஷ்பா. இதற்கும் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. 'இந்த மாத இறுதியில் அரசியல் கட்சி தொடங்க இருக்கிறார் புஷ்பா. ஜெயலலிதாவுடன் மோதல்போக்கு தொடங்கியதும், ராஜ்யசபாவிலேயே ஜெயலலிதா எதிர்த்துப் பேசினார்.

சசிகலா புஷ்பா

இந்த அவமானத்தை ஜெயலலிதாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தொடர்ந்து முதல்வருக்கு எதிராக பேசி வந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், சசிகலாவை எதிர்ப்பைக் கையில் எடுத்தார். தேர்தல் ஆணையத்தில் ஜெயலலிதா கையெழுத்து தொடர்பான புகாரைக் கொண்டு சென்றார். இதன் விளைவாகவே கை நாட்டு போடப்பட்ட விண்ணப்பத்தை வேட்பாளர்கள் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரது மரணம் தொடர்பாக, குடியரசுத் தலைவர் மற்றும் உள்துறை செயலரிடம் புகார் கொடுத்தார். இரட்டை இலை என்றாலும் மருத்துவமனை விவகாரமாக இருந்தாலும், சசிகலா புஷ்பா தொடங்கி வைத்ததைத்தான் பன்னீர்செல்வம் அணியினர் பின்தொடர்கிறார்கள். புதிய கட்சி தொடங்கும்போது, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொங்கு மண்டலத்தில் சமூக பலத்தை முன்வைக்கும் முடிவில் அவர் இருக்கிறார். 

'அமைச்சரவையிலும் அதிகாரிகள் மட்டத்திலும் நாடார் சமூகத்தை புறக்கணிக்கிறார்கள். இந்த அரசாங்கம் நமக்கு துரோகம் செய்கிறது' என்ற முழக்கத்தை அவர் முன்னெடுத்துச் செல்ல இருக்கிறார் என்று மாநில உளவுத்துறை அறிக்கை அளித்திருக்கிறது. இப்படியொரு நடவடிக்கை வேகமெடுத்தால், கொங்கு மண்டலத்தில் பலவீனத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்துதான் எடப்பாடி தரப்பில் இருந்து சமாதானப் பேச்சைத் தொடங்கியிருக்கிறார்கள். சசிகலா புஷ்பா  எப்படிச் சென்றாலும், தங்களை நோக்கி வந்துவிடக் கூடாது என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார்.

இந்தத் தூது எந்தளவுக்கு உண்மையானது என்பது பற்றி எச்சரிக்கை உணர்வோடு கவனித்து வருகிறார் சசிகலா புஷ்பா. 'சமரசத்திற்கு அழைத்துவிட்டு, கைது நடவடிக்கையை வேகப்படுத்திவிடக் கூடாது' எனவும் அச்சப்படுகிறார். இதன் தொடர்ச்சியாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுத இருக்கிறார் சசிகலா புஷ்பா. அந்தக் கடிதத்தில், 'ஜெயலலிதா மரணம் ஒரு கொலைதான். இந்த விவகாரத்தில் சசிகலா, ஜெயலலிதா வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்கள், அமைச்சர் விஜயபாஸ்கர், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை உட்படுத்தி அந்த விசாரணை அமைய வேண்டும். இவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும். உங்கள் அரசு இதற்கான பணிகளில் இறங்க வேண்டும்' எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்திற்குக் கிடைக்கும் எதிர்வினையைப் பொறுத்தே, மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த இருக்கிறார்" என்றார் விரிவாக. 

http://www.vikatan.com/news/tamilnadu/82887-letter-says-an-investigative-commission-will-be-formed-against-sasikala.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.