Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆறு கிலோ தலையுடன் 2 வயது குழந்தை * தவியாய் தவிக்கும் ஏழை பெற்றோர் மருத்துவ செலவை அரசு ஏற்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு கிலோ தலையுடன் 2 வயது குழந்தை * தவியாய் தவிக்கும் ஏழை பெற்றோர் மருத்துவ செலவை அரசு ஏற்குமா?

sm06gz0.jpg

கரூர்: "ஆறு கிலோ எடையுடன் கூடிய தலையுடன் கரூரில் அவதிப்படும் இரண்டு வயது குழந்தையின் மருத்துவ செலவை அரசு ஏற்க முன்வர வேண்டும்' என குழந்தையின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கரூரை அடுத்த பாலம்மாள்புரத்தை சேர்ந்தவர் சங்கர்(27). லாட்ஜில் துப்புரவு தொழிலாளியாக உள்ளார். இவருடைய மனைவி பூங்கொடி. 2004ல் இவர்களுக்கு திருமணம் முடிந்து இரண்டு வயதில் ஆண் குழந்தை உண்டு."ராமகிருஷ்ணன்' என பெயர் சூட்டப்பட்ட இந்த குழந்தை பிறந்த மூன்றாவது மாதத்தில் தலை மட்டும் வளர்ச்சியடைய துவங்கியது. சளி பிடித்ததால் தலை வீக்கம் அடைந்துள்ளது என நினைத்து பெற்றோர் அதற்கான சிகிச்சை அளித்தனர்.ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் நாளுக்கு நாள் ராமகிருஷ்ணனின் தலை வீக்கம் அடைந்து வந்தது. மனவேதனை அடைந்த பெற்றோர், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது, இதற்கான வசதி கரூர் மருத்துவமனையில் இல்லை என டாக்டர்கள் கையை விரித்துள்ளனர்.கூலித்தொழில் செய்து பிழைப்பு நடத்தி வரும் பெற்றோர், சிகிச்சை வசதிக்கு பொருளாதார வசதி இல்லாமல் கரூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மாவட்ட நிர்வாகம், மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தது.

மதுரை அரசு மருத்துவமனை பரிசோதனையில், சிறுவன் ராமகிருஷ்ணன் தலையில் நீர் கோர்த்துள்ளதால் ஆபரேஷன் செய்ய முடிவு செய்தனர். தலையில் இருந்து நீரை வெளியே எடுக்க "டியூப்' போட்டு வயிறு வழியாக வெளியேறும் வகையில் ஆபரேஷன் செய்யப்பட்டது.ஆபரேஷன் செய்த சில நாட்களில் அந்த டியூபும் அடைத்துக்கொண்டது. தனியார் மருத்துவமனை செல்லுமாறு மதுரை அரசு மருத்துவனை டாக்டர்களும் கை விரித்தனர். சில மாதம் மட்டுமே குழந்தை உயிரோடு இருக்கும் என கூறி அனுப்பி விட்டனர்.தற்போது ராமகிருஷ்ணனின் தலை ஆறு கிலோ எடை கொண்டதாக வளர்ச்சி அடைந்து விகாரமாக காணப்படுகிறது. குழந்தையை பராமரிக்க முடியாமல், செய்வதறியாமல் பாமர தம்பதியினர் திகைத்து நிற்கின்றனர்.மருத்துவ உதவிக்கு அரசு உதவும் என்று நம்பிக்கையுடன் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அளித்தும், மாற்று மருத்துவமனைக்கு பரிந்துரைத்ததோடு தங்கள் பணியை அலுவலர்கள் முடித்து கொண்டதால் பெற்றோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.இதுகுறித்து குழந்தைகள் நல டாக்டர் ரவிராஜசேகர் தெரிவித்ததாவது:

மூளை தண்டுவட நீர் அதிக உற்பத்தி, நீர் வரும் பாதை அடைப்பு, ரத்த ஓட்டத்தில் உறியப்படும் இடத்தில் பாதிப்பு இருந்தால் இத்தகைய பிரச்னை வருகிறது. ஆயிரத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைக்கு இப்பிரச்னை வருகிறது. இதற்கு "ஹைட்ரோ செகாலஸ்' என்று கூறுகின்றனர்.கர்ப்பத்தில் இருக்கும்போது ஐந்தாவது மாதத்திலேயே "ஸ்கேனிங்' மூலம் பிரச்னையை கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம். பிறந்த சில மாதங்களில் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு குழந்தைக்கு ஏற்படும்போது கவனிக்காமல் விட்டாலும் இத்தகைய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு.இவ்வாறு டாக்டர் தெரிவித்தார்.

http://www.dinamalar.com/

காதலர் தினமன்று என்னடா கருமச் செய்தியிது? தமிழகக் குழந்தைகளின் அன்னை ஜெயலலிதா இந்த மண்டை வீங்கிய பையனுக்கு உதவிபுரியலாமே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.