Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெ., மரணம் : 14 கேள்விகளுக்கு பதில் இல்லை! : முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

Featured Replies

ஜெ., மரணம் : 14 கேள்விகளுக்கு பதில் இல்லை! :
முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
 
 
 

''அப்பல்லோ அளித்த முதல் தகவல் அறிக்கைக்கும், தற்போது வெளியிடப்பட்ட அறிக்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. எங்களுக்கு, 14 கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை,'' என, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

 

Tamil_News_large_172578820170308000153_318_219.jpg

அவர் அளித்த பேட்டி:

அ.தி.மு.க., நியமன பொதுச் செயலர் விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

ஜெ.,வால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, ஆறு ஆண்டுகளாகும் நிலையில், தினகரன் மன்னிப்பு கடிதத்தை யார் ஏற்றது? தேர்தல் நடத்தி, புதிய பொதுச் செயலர் நியமிக்கப்படும் வரை, கட்சியை வழிநடத்தும் பொறுப்பு, கட்சியின் அவைத் தலைவர் மற்றும் பொருளாளருக்கு தான் உள்ளது.
இதை கட்சியின் சட்ட விதிகள் தெளிவாக குறிப்பிட்டுள்ளன. எனவே, தேர்தல் கமிஷனிடம், நாங்கள் வைத்த கோரிக்கையில், கண்டிப்பாக நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம்.

நீங்கள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அ.தி.மு.க., - எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் வர வாய்ப்புஉள்ளதா?

எங்களிடம், 12 எம்.பி.,க்கள், 12 எம்.எல்.ஏ.,க்கள், 22 முன்னாள் அமைச்சர்கள், 100 முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முன்னாள் மாவட்ட செயலர்கள், கட்சியின் பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகள், ஏராளமான பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். உண்ணாவிரதத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள், அதிக எண்ணிக்கையில் வெளிச்சத்துக்கு வந்து, தங்களை பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக, அடையாளம் காட்டுவர்.

உண்ணாவிரதத்திற்கு பின், ஜெ., மரணம் தொடர்பாக, உங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

இந்த பிரச்னையை, நான்கு தளங்களில் கொண்டு செல்ல முடிவு செய்தோம். அதன்படி, மக்கள் மன்றம், சட்டசபை மற்றும் லோக்சபா;

ஜனாதிபதி, கவர்னர் மற்றும் தேர்தல் கமிஷனிடம் புகார் அளிப்பது என, மூன்று தளங்களில், நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். தேவைப்பட் டால், நான்காவது தளமான, கோர்ட் மூலம் வழக்கு தொடர்வோம்.

விரைவில், உள்ளாட்சி தேர்தல் மற்றும் ஆர்.கே.நகர் சட்டசபை இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அந்த அறிவிப்பு வந்ததும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, ஜெ., மரண சந்தேகங்கள் குறித்து, மக்கள் மன்றத்தில் முறையிட உள்ளார்.

மண்டல வாரியாக, பொதுக்கூட்டங்களுக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. நிர்வாக வசதிக்காக, கட்சியை, 10 மண்டலங்களாக பிரித்து நடத்தி வருகிறோம். தர்மயுத்தம் வெற்றி பெறும்.

அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ஜெ.,வுக்கு மருத்துவம் செய்த டாக்டர்கள், அவருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கிய டாக்டர்கள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், போயஸ் கார்டனில் ஆரம்பம் முதலே, அவருக்கு சிகிச்சை அளிப்பதாக சொல்லப்பட்ட குடும்ப டாக்டர் சிவக்குமார் பெயர் இல்லையே?

அவருடைய பெயர், அறிக்கையில் எந்த இடத்திலும் இல்லை. பெரும்பாலான நேரம், அவர் அப்பல்லோவில் இருந்தார். மற்றவர்களிடம், அங்கு என்ன நடக்கிறது என்பதை, சொல்லும் இடத்தில் இருந்தார். இந்த மாதிரி பல விஷயங்களை, உண்ணாவிரதத்தில் பன்னீர்செல்வம் விரிவாகப் பேசுவார்.

ஜெ., கீழே விழுந்து அடிபட்டதாக, ஒரு கருத்து உள்ளது. அரசு தரப்பில் உள்ள தகவல்கள் எதிலும், எங்களுக்கு உடன்பாடு கிடையாது. அரசு தரப்பு அறிக்கையில், 'உறவினர்களுக்கும், முக்கிய அமைச்சர்களுக்கும்' என்ற வார்த்தையை, உபயோகப்படுத்தி உள்ளனர். எந்த உறவினருக்கு சொன்னார்கள் என்பது தெரியாது. ஆனால், முக்கிய அமைச்சர்கள், எவருக்கும் தகவல் தரப்படவில்லை. இது, அமைச்சர் விஜயபாஸ்கருக்கே தெரியும்.

கண்டிப்பாக, ஜெ., மரணத்தில், நீதி விசாரணை தேவை என்பது, தமிழக மக்களின் எண்ணம். ஜெ., மரணத்திற்கு காரணம் யார் என்பது தெளிவாக வேண்டும்.அப்பல்லோ அளித்த, முதல் தகவல் அறிக்கைக்கும், தற்போதையஅறிக்கைக்கும், நிறைய வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக, ஜெ., நினைவின்றி மூன்று நாட்கள் இருந்தார் என்று, தற்போது வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட, முதல் தகவல் அறிக்கையில், 'ஜெ., சாப்பிட் டாங்க; அவருக்கு அதிக காய்ச்சல், உடலில் நீர் சத்து குறைபாடு இருந்தது' என்று சொல்லி உள்ளனர்.

 

அதற்கும், இந்த அறிக்கைக்கும், மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. அரசு தரப்பில் வெளியிடப்பட்ட, நான்கு பக்க அறிக்கையில் கூறப்பட்ட விஷயங்களுக்கு, 'மெடிக்கோ லீகல்' மொழியில், உண்ணாவிரதத் தில் விரிவாக பதில் கூறப்படும்.

முக்கியமாக அவருக்கு பொருத்தப்பட்ட, 'எக்மோ' உயிர் காக்கும் கருவியை எடுக்க, யார் உத்தரவிட்டது என்பது தெரிய வேண்டும். டிச., 4ல், அனைத்து அமைச்சர்களும், மாலை, 4:00 மணியில் இருந்து, அப்பல்லோவுக்கு வந்து சேர்ந்தோம்.

அப்போது, எங்களிடம், 'ஏழு நாட்களுக்கு, எக்மோ கருவி பொருத்தப்பட்டிருக்கும். அந்த ஏழு நாட்களுக்குள், உடல் உறுப்புகள், 10 சதவீதம் உயிர்த்தெழ வாய்ப்பு இருக்கிறது' என, தெரிவித்தனர். அந்த நம்பிக்கையில், இரவு முழுக்க காத்திருந்தோம். மறுநாள் காலை, அந்த கருவியை அகற்றியதாக அறிந்தோம்.

இதை எடுக்க உத்தரவிட்டது யார்? அந்தக் கருவியை எடுத்து, இயற்கையாக மரணத்தை நோக்கி, ஜெ., செல்ல பாதை வகுத்து கொடுத்தது யார்? இது முக்கியமான கேள்வி. அதற்கு நெருங்கிய ரத்த உறவினர்கள் தான், அனுமதி கொடுக்க முடியும். அப்படி கொடுத்திருந்தால், யார் கொடுத்தது? அந்த ரத்த உறவினர் என்பதற்கு என்ன அடையாளம் தரப்பட்டது என்பது மிக முக்கியமான கேள்வி.

அடுத்து, போயஸ் கார்டனில் இருந்து, தேசிய பாதுகாப்பு படையினரை விலக்க உத்தர விட்டது யார்? அந்த பாதுகாப்பு படை, ஏன் அப்பல்லோ வரவில்லை? அவர்கள் எங்கு சென்றனர்? இதுபோல், 14 கேள்விகளுக்கு, இன்னும் எங்களுக்கு விடை கிடைக்கவில்லை.

இந்த கேள்விகளுக்கெல்லாம், மத்திய அரசின் நேரடி மேற்பார்வையில், சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு பாண்டியராஜன் தெரிவித்தார்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1725788

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.