Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரிசங்கு நிலையில் அ.தி.மு.க... திணறும் தினகரன்!

Featured Replies

திரிசங்கு நிலையில் அ.தி.மு.க... திணறும் தினகரன்!

சசிகலா

“இருபத்தி ஐந்து ஆண்டுகள் அதிகாரத்தில் இல்லாமலேயே அதிகாரம் செலுத்த முடிந்த நம்மால், அதிகாரம் நேரடியாக கைக்கு வந்தபின் அதை முழுமையாக செயல்படுத்த முடியாத துரதிர்ஷ்டம்  ஏற்பட்டுள்ளதே” என்ற வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறது ஒட்டுமொத்த சசிகலா உறவினர்கள். இதனால் திக்..திக்..என்ற நிலையில் தினகரன் இருந்து வருகிறார். 

ஒன்றரைக் கோடி தொண்டர்களைக்  கொண்ட அ.தி.மு.க என்ற இயக்கத்தையும், நான்கரை ஆண்டுகால தமிழகத்தின் ஆளுங்கட்சி என்ற அந்தஸ்தையும் சசிகலா குடும்பம் இனி முழுமையாக பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துமா, செலுத்தாதா? என்ற குழப்பத்துக்கு இன்னும் சில தினங்களில் விடை கிடைத்துவிடப் போகிறது. ஆம்! ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், இந்திய தேர்தல் ஆணையம் அ.தி.மு.க மீது கண் வைக்க உள்ளது. 

அ.தி.மு.கவின் துணைப்பொதுச்செயலாளராக ஒரே நாளில் அதிரடியாக நியமிக்கப்பட்டார் சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி.தினகரன். பொதுச்செயலாளருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் துணைப்பொதுச்செயலாளருக்கும் உண்டு என்ற அறிவிப்போடு பொதுச்செயலாளர் சசிகலா ஒப்புதல் பெற்று தினகரன் அறிவிக்கப்பட்டார். அ.தி.மு.கவின் பலருக்கு அறிமுகமான முகம், அனைத்து மாவட்டங்களிலும் ஆதரவாளர்கள் உண்டு, சசிகலா குடும்பத்திலே அதிக ஆண்டுகள் அ.தி.மு.க-வில் பதவியில் இருந்தவர் என்ற தகுதிகள்தான் தினகரனை முன்னிலைப்படுத்தின. ஆனால் சசிகலா குடும்பத்தினர் மீது ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு எழுந்த சர்ச்சைகள் தினகரன் மீதும் வெறுப்பை பொதுமக்களிடம் ஏற்படுத்திவிட்டன. குறிப்பாக சசிகலாவுக்குச் சமமாக தினகரன் என்பதை அடிமட்டத் தொண்டர்களே  ஏற்க விரும்பவில்லை. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சசிகலாவுக்கு எதிரான தாக்குதலால், தினகரன் தரப்பு கொஞ்சம் ஆடிப்போய் விட்டது. 

ஒ.பி.எஸ் ஆதரவு எம்.பிக்கள்

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு மத்திய அரசு அ.தி.மு.கவின் நிலையை உன்னிப்பாக கவனித்துதான் வருகிறது. ஒட்டுமொத்த சசிகலா குடும்பத்தினர் மீதும் மத்திய அரசுக்கு நெகடிவ் இமேஜ் இருக்கிறது. இதனால் அவர்கள் ஆட்சியையோ, கட்சியை கையில் வைத்திருப்பதையோ ஆரம்பத்தில் இருந்தே மத்திய அரசு விரும்பாமல் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால்தான் சசிகலாவை முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க கால தாமதம் செய்தது. சசிகலாவுக்கு எதிராக நீதிமன்றத்தை முடக்கிவிட்டது போன்ற சம்பவங்களை சுட்டிக் காட்டுகின்றார்கள். இந்நிலையில் சசிகலா சிறைக்குப் போனாலும், அவரின் அதிகாரத்தை தொடர்ந்து கொண்டுசெல்லும் வகையில் கட்சிக்குத் தினகரனையும், ஆட்சியில் தனக்கு நம்பிக்கையான எடப்பாடியையும் சசிகலா தேர்வு செய்தார் என்கிறார்கள். இந்த இரண்டு  தேர்வையுமே மத்திய அரசு விரும்பவில்லையாம். சசிகலா தலையீடு இல்லாத ஆட்சியும், கட்சியும் தான் இருக்க வேண்டும் என்ற மனநிலையில் அவர்கள் இருக்கிறார்கள். 

இரண்டிலும் இருந்தும் சசிகலா குடும்பத்தை அப்புறப்படுத்துவதற்கு மத்திய அரசு தேர்தல் ஆணையத்தைத் தான் இப்போது கருவியாகப் பயன்படுத்த உள்ளார்கள். அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா தேர்வானது சட்டப்படி செல்லாது என்று சசிகலா புஷ்பாவும், ஓ.பி.எஸ் தினகரன்அணியும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். தேர்தல் ஆணையம் இதுகுறித்து சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அதற்கு சசிகலா பதில் அளிக்காமல் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருக்கும் தினகரன் பதில் கடிதம் அனுப்பினார். ஆனால் தேர்தல் ஆணையம், தினகரன் பதவியே முறையாக தேர்வு செய்யப்படாமல் இருப்பதால் அவர் இதற்கு பதில் அளிக்க முடியாது என்று கடிதத்தைத் திருப்பி அனுப்பி தினகரனுக்கு அதிர்ச்சி அளித்தது. 

சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி குறித்து விரைவில் முடிவு அறிவிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாழ்வா, சாவா? பிரச்னையாக இந்த முடிவை சசிகலா குடும்பம் பார்க்கிறது. காரணம் சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி செல்லாது என்று அறிவித்துவிட்டால், அவரால் அ.தி.மு.கவில் நியமிக்கப்பட்ட பதவியும், நீக்கிய பதவிகளும் செல்லாமல் போய்விடும். அப்போது பொதுக்குழுவைக் கூட்டித்தான் புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும். பொதுக்குழுவைக் கூட்டும் பொறுப்பு அப்போது அவைத்தலைவர் என்ற முறையில் மதுசூதனன் கைக்கு வந்துவிடும். ஓ.பி.எஸ், மதுசூதனன், பொன்னையன் போன்றவர்கள் கை கட்சிக்குள் ஓங்கிவிடும். கட்சி நிர்வாகம் தங்கள் கையை விட்டுப் போனால் ஆட்சியும் அவர்கள் கைக்குள் போய்விடும் என்ற அச்சத்தில் இப்போது சசிகலா குடும்பத்தினர் உள்ளார்கள். 

தேர்தல் ஆணையம் தங்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ளாது என்ற யூகத்தில் சசிகலா குடும்பத்தினரும் உள்ளார்கள். அதனால் தான் மாவட்டச் செயலாளர்களிடம் கட்சி நிர்வாகிகளை சரி செய்து வையுங்கள் என்று சொல்லியுள்ளனர். ஒருவேளை பொதுக்குழுக் கூட்ட வேண்டிய நிலை வந்தால் இவர்கள்தான் வாக்களிக்கவேண்டிவரும் என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டார்கள். 

மாவட்ட வாரியாக நிர்வாகிகளை தினகரன் சந்தித்து வருவதன் பின்னணியும் இதுதான். மத்திய அரசு சார்பில் உளவுத்துறை அதிகாரி ஒருவர் எடப்பாடி பழனிசாமி  தரப்பிடம் பேசியுள்ளார். அப்போது “சசிகலா குடும்பத்தை நீங்கள் ஒதுக்கி வைத்துவிட்டால் மத்திய அரசு உங்களுக்கு உதவும். அதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் நீங்களும் இணைந்து செயல்படவேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. அப்படி நடந்தால் மட்டுமே கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றிக்கொள்ள முடியும்” என்று எச்சரிக்கும் விதமாக சொன்னாராம். 

இதைக்கேட்டு எடப்பாடி தரப்பு என்ன செய்வது என்று புரியாமல் முழித்துவருகிறதாம். தினகரனோ, கட்சி நம் குடும்பத்தை விட்டுப் போய்விடக்கூடாது என்ற பதட்டத்தில் உள்ளார். மத்திய அரசு பொறுமையாக இதனைப் பார்த்து வருகிறது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வந்ததும் அ.தி.மு.க -வின் மீது சில முடிவுகளை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அந்த உற்சாகத்தில்தான் ஓ.பி.எஸ் தரப்பினர் இப்போது உள்ளார்கள். அ.தி.மு.க வின் எதிர்காலம் இப்போது மத்திய அரசின் கையில் இருக்கிறது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

http://www.vikatan.com/news/tamilnadu/82982-this-is-the-current-situation-of-aiadmk-now.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.