Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘தேர்தலில் வெற்றி கிடைக்குமா?’ - ஆர்.கே.நகரில் ஆராய்ந்த தீபா #VikatanExclusive

Featured Replies

‘தேர்தலில் வெற்றி கிடைக்குமா?’ - ஆர்.கே.நகரில் ஆராய்ந்த தீபா #VikatanExclusive

தீபா

'சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல்' என அறிவித்துவிட்டது தேர்தல் ஆணையம். 'இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டால், பேரவைக்கு எப்படிப்பட்ட வரவேற்பை மக்கள் கொடுப்பார்கள் என வார்டு வாரியாக அலசி வருகிறார் தீபா. அவருடைய முயற்சிக்கு பன்னீர்செல்வம் அணியினரும் ஆதரவு தெரிவிக்கின்றனர்' என்கின்றனர் தீபா பேரவை அமைப்பினர்.  

அ.தி.மு.க அரசுக்கு மிகப் பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். இதனை மனதில் வைத்தே இத்தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் பங்கேற்றார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'அம்மாவுக்குக் கிடைத்த வரவேற்பை, தொகுதி மக்கள் எங்களுக்கு வழங்குவார்கள்' எனவும் பேசி வருகிறார். தொகுதி மக்களிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களைப் போக்கும் வகையில் அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். தென்சென்னை மக்களைவிடவும் கூலித் தொழிலாளர்களை அதிகமாகக்கொண்ட ஆர்.கே.நகரில், அமைச்சர்களின் பேச்சுக்கு எந்தவித மரியாதையும் கிடைப்பதில்லை.

“ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள், அ.தி.மு.க-வின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதால், நலத்திட்டங்களை ஏராளமாக அறிவிக்க இருக்கிறது தமிழக அரசு. இவையெல்லாம் மக்கள் மனதில் மாற்றத்தை உருவாக்குமா எனத் தெரியவில்லை. தற்போது நிர்வாகிகளும் சசிகலா படத்தை போஸ்டரில் போட்டு சுவரொட்டி ஒட்டுவதில்லை. அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்ற நேரத்தில், ஒட்டப்பட்ட போஸ்டர்களில், அவரது படத்தை மட்டும் பொதுமக்கள் கிழித்துவிடுகின்றனர். தொடர்ந்து அவரது படத்தை முன்னிலைப்படுத்தினால், ஓட்டு கிடைக்காது என அவர்கள் புரிந்துகொண்டுவிட்டனர். எனவேதான், அம்மா வழியிலேயே ஆட்சி தொடரும் என ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தியே பேசி வருகின்றனர். ஆர்.கே.நகரில் தலித் மக்கள் நிரம்பியுள்ளனர். ஜெயலலிதாவின் அபிமானிகளாகவும் அவர்கள் உள்ளனர். 'திருமங்கலம் அளவுக்கு கரன்ஸியை வாரி இறைத்தாலும் இரட்டை இலை வெல்லுமா?' என்ற சந்தேகம் இன்னமும் தீரவில்லை" என ஆதங்கப்படுகிறார், வடசென்னை அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.

தீபா

அதேநேரம், 'தொகுதி மக்கள் தீபாவை எப்படிப் பார்க்கிறார்கள்?' என்பதை அறிந்துகொள்ள, ஆர்.கே.நகரில் ஆய்வுசெய்துவருகிறார் தீபா. பேரவைக்குள் ஏற்பட்டுள்ள நிர்வாகிகள் நியமனம் தொடர்பான குளறுபடிகள் ஒருபுறம் இருந்தாலும், ஆர்.கே.நகரை மையமிட்டே அவருடைய அரசியல் நடவடிக்கைகள் வேகம்பெற்றுவருகின்றன. "ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவதுதான் அவர் முன் தற்போதுள்ள ஒரே சவால். நேற்று முன்தினம் தீபாவிடம் பேசிய அரசியல் ஆலோசகர் ஒருவர், 'எம்.ஜி.ஆர் கட்சியைத் தொடங்கிய பிறகு, திண்டுக்கல் இடைத் தேர்தலில் 55 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி அது. காங்கிரஸ் கட்சிக்குப் பாதகமான முடிவு என்றாலும், அக்கட்சியின் வேட்பாளர் என்.எஸ்.வி.சித்தன், ஒரு லட்சத்து 35 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். அதேபோல ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அரசியல்ரீதியாக மிகப் பெரிய வெற்றியை உங்களுக்குக் கொடுக்கும். இந்தத் தொகுதியில் 30 சதவிகித தலித் மக்கள் வசிக்கின்றனர். 18 சதவிகித மீனவர்கள் உள்ளனர். 15 சதவிகித தெலுங்கு தாய்மொழி மக்களும் நாடார் மக்களும் நிரம்பி உள்ளனர்.

ஜெயலலிதாவின் ரத்த உறவான நீங்கள் களமிறங்குவதை மக்களும் வரவேற்கின்றனர். உங்களை ஜெயலலிதாவின் பிம்பமாகத்தான் பார்ப்பார்கள். பெண்களின் வாக்கை முழுமையாகக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அ.தி.மு.க-வின் தற்போதைய நிர்வாகிகள் மீது நாடார் சமூக மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களுக்கு அமைச்சரவையிலும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. இந்த அதிருப்தி அலை உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தேர்தல் வேலை பார்ப்பார்கள். பன்னீர்செல்வம் அணியில் உள்ளவர்கள், 'நாம் ஒரு வேட்பாளரைக் களமிறக்குவோம்' என்ற மனநிலையில் இருந்தனர். இதற்குப் பதில் அளித்த பன்னீர்செல்வமோ, 'வேண்டாம். ஆர்.கே.நகரில் தீபா களமிறங்குவதுதான் சரியாக இருக்கும்' என உறுதியாகத் தெரிவித்துவிட்டார். இந்த சாதகமான அம்சங்களால், அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவீர்கள்' என விவரித்திருக்கிறார். அவரது ஆலோசனையை ஏற்றுக்கொண்ட தீபா, தொகுதி மக்களுக்கு அளிக்கவேண்டிய வாக்குறுதிகள்குறித்து குறிப்பெடுத்து வருகிறார்" என்றார் விரிவாக. 

ஆர்.கே.நகரை குறிவைத்து அதிரடியான அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 'சசிகலா மீதான அதிருப்திகள், தீபாவுக்கு சாதகமாக அமையுமா? திருமங்கலம் ஃபார்முலா ஆர்.கே.நகரில் செல்லுபடியாகுமா?' என்ற கேள்விகளும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன. 

http://www.vikatan.com/news/tamilnadu/83148-will-deepa-win-rknagar.html

  • தொடங்கியவர்
ஆர்.கே.நகரில் தீபா தனித்து போட்டி!
காலியாகிறது தீபா பேரவை!
 
 
 

''ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், போட்டியிட உள்ளேன். எனக்கு ஆதரவு அளிக்க முன்வருவோரை புறக்கணிக்க மாட்டேன்,'' என, ஜெ., அண்ணன் மகள் தீபா தெரிவித்தார்.

 

Tamil_News_large_172704020170309232357_318_219.jpg

 

அவர் அளித்த பேட்டி:


சசி தலைமையிலான அ.தி.மு.க.,வுடன் இணைந்து செயல்படும் திட்டம் இல்லை. அவர்கள் அழைப்பு விடுத்தாலும், தொந்தரவு கொடுத்தாலும், அவர்கள் ஆதரவை ஏற்க மாட்டேன்.

மக்களாலும், அ.தி.மு.க.,வின் உண்மை தொண் டர்களாலும் புறக்கணிக்கப்பட்டு, ஜெ.,வால் விரட்டி அடிக்கப்பட்ட, சதிகார கும்பலை, மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அந்த குடும்பம் சார்பில், யார் போட்டியிட்டாலும், 'டிபாசிட்' இழப்பது உறுதி.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவர் என, நம்புகிறேன். நான் யாருடைய ஆதரவையும் கேட்டு நிற்க வில்லை. எனக்கு ஆதரவு அளிக்க முன்வரு வோரை, புறக்கணிக்க மாட்டேன். பன்னீர் செல்வம் அணியினரோடு இணைந்து செயல்பட, எந்த தயக்கமும் இல்லை; அவர்கள் தான் முன்வர வேண்டும்.


என் பேரவை நிர்வாகிகள் குறித்த, அதிகாரபூர்வமான அறிவிப்பை, ஓரிரு நாட்களில் வெளியிடுவேன். நிர்வாகிகள் தேர்வில் குழப்பம் இல்லை. சமூக வலைதளங்களில், தவ றான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
எனக்கும், கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை. சசிகலா தலைமை யிலான அணியை, முதல் எதிரியாக நினைக்கிறேன். சசிகலா தலைமையி லானஅராஜக அரசியலை, மக்கள் ஏற்க மாட்டார்கள். பன்னீர்செல்வம் அணியினர், வேட்பாளரை நிறுத்தினாலும், என் முடிவில் மாற்றமில்லை. இவ்வாறு தீபா தெரிவித்தார்.
 

காலியாகிறது தீபா பேரவை!


தீபா தனித்து போட்டியிட முடிவு செய்ததைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள், பன்னீர் அணிக்கு தாவி வருகின்றனர். ஜெ., மறைவுக்கு பின், சசிகலா பொதுச்செயலராக நியமிக்கப்பட்டதை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்கவில்லை. எனவே அவர்கள், தீபாவை, கட்சிக்கு தலைமையேற்க வரும்படி அழைப்பு விடுத்தனர். சசிகலாவுக்கு எதிராக, பன்னீர் செல்வம் போர்க்கொடி துாக்கியதும், கட்சியினர், அவர் பக்கம் திரண்டனர். தீபா ஆதரவாளர்களும், பன்னீருக்கு ஆதரவு தெரிவிக்கும்படி வற்புறுத்தினர்.

அதை ஏற்று, ஜெ., நினைவிடத்தில், பன்னீர் செல்வத்தை தீபா சந்தித்தார். அப்போது,'இருவரும் அ.தி.மு.க.,வின் இரு கரங்களாக செயல்படுவோம்' என, அறிவித்தார். பன்னீர்செல்வம் வீட்டிற்கும் சென்று வந்தார். அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதன் பின், தீபா திடீரென தன்

 

நிலையை மாற்றிக் கொண்டார். இது, அவரது ஆதரவாளர் களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி யது. அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றும் தீபாவை நம்ப மறுத்து, பெரும்பாலா னோர் பன்னீர் அணிக்குதாவினர். அதைத் தொடர்ந்து, 'எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை, தீபா துவக்கினார்.

இதற்கு நிர்வாகிகளை நியமிப்பதிலும், பல குளறுபடி ஏற்பட்டது. தீபாவுக்கு எதிராக, அவரது கணவர் மாதவன் புகார் கொடி துாக்கி னார். இதுவும், அவரது ஆதரவு கூட்டத்தை கலைய செய்தது.இதையும் மீறி இருப்போரும், ஆர்.கே.நகர் தேர்தலில், பன்னீர்செல்வத்துடன் இணைந்து, சசிகலா குடும்பத்தை, தீபா எதிர்ப் பார் என, எதிர்பார்த்தனர். ஆனால், அவர் தனித்து போட்டியிடப் போவதாக, நேற்று அறிவித்தார்.
தனியே நின்றால், வெற்றி பெற முடியாது என்பதை அறிந்த, அவரது ஆதர வாளர்கள், இடைத்தேர்தலில் பன்னீர் அணிக்கு ஆதரவாக, வேலை செய்ய முடிவு செய்துள்ள னர். இதன் காரணமாக, தேர்தலுக் குள், தீபா பேரவை காலியாகி விடும் என்கின்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1727040

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.