Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் முற்றுகை: மந்திரிகள் பரிதவிப்பு

Featured Replies

மக்கள் முற்றுகை: மந்திரிகள் பரிதவிப்பு
 
 
 

முதல்வர் பழனிசாமி தலைமையில், புதிய அரசு பதவியேற்றதற்கு பின், அரசு விழாக் களில், அமைச்சர்களை மக்கள் முற்றுகை யிட்டு, கெரோ செய்யும் நிகழ்வுகள், ஆங்காங்கே அதிகரித்து வருகின்றன. இந்த வகையில், நேற்றும் இரண்டு இடங்களில், மக்கள் முற்றுகையால் அமைச்சர்கள் பரிதவித்து உள்ளனர்.

 

Tamil_News_large_172840420170311233737_318_219.jpg

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நேற்று காலை நடந்தது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் பங்கேற்றனர். விழாவிற்கு வந்த இருவரையும், சத்திய மங்கலம் நகராட்சி, 23வது வார்டைச் சேர்ந்த, ௫௦க்கும் மேற்பட்டோர், வாசலில் வழிமறித்த னர். 'நாங்கள், 40 ஆண்டுகளாக பட்டா கேட்டு அலைகிறோம். ஆனால், எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.

எங்களுக்கு உடனடியாக பட்டா கிடைக்க,

இங்கேயே ஏற்பாடு செய்து தரவேண்டும்.அதுவரை இங்கிருந்து செல்ல மாட்டோம்' எனக்கூறி முற்றுகையிட்டனர். இதனால், இரு அமைச்சர் களும் திகைப்படைந்தனர்.

பின், சுதாரித்த செங்கோட்டையன், மனு கொடுத் தால், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மக்கள் தயாராககொண்டு வந்த மனுவை வழங் கினர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர்களை முற்றுகையிட்ட மக்கள் கூறியதாவது: அமைச்சர் செங்கோட்டையன், 1977ல் முதன் முதலில் சத்தியமங்கலத்தில் இருந்து, எம்.எல்.ஏ.,வாக தேர்வானார். அப்போது, சத்திய மங்கலம், 23வது வார்டு அண்ணாநகர் பகுதியில், எங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத் திற்கு, 40 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடுகிறோம்.

இதுவரை, ௧,௦௦௦ மனுக்களுக்கு மேல் கொடுத்தும், தீர்வு கிடைக்கவில்லை. தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வருபவர்கள், ஜெயித்த பிறகு எட்டி பார்ப்பதில்லை. எங்கள் பகுதியில், ௧,௨௫௦ ஓட்டுகள் உள்ளன. விரைவில் பட்டாதராவிட்டால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதே போல், நாகையில் நடந்த அரசு விழாவில், அமைச்சர், ஓ.எஸ்.மணியனை, மக்கள் முற்றுகை யிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை சார்பில்,

 

நாகையில்கட்டப்பட்டுள்ள, 120 குடியிருப்பு களுக்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்கும் விழா, நேற்று நடந்தது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்று, பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.

அமைச்சரை, அங்கிருந்த பயனாளிகள் முற்றுகையிட்டு, 'ஏற்கனவே வசித்த வீடுகளின் கதவிலக்க எண் அடிப்படையிலேயே ஒதுக்கீடு வழங்க வேண்டும்; குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்' என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பயனாளிகளின் ஆவேசத்தால் அதிர்ச்சி யடைந்த அமைச்சரை, அதிகாரிகள், அங்கி ருந்து அவசர அவசரமாக அழைத்துச் சென்ற னர். விழா பாதியிலேயே முடிந்தது.

- நமது நிருபர்கள் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1728404

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.