Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினகரனை நெருக்கும் 'பெரா' வழக்குகள்! - அமலாக்கத்துறையின் அடுத்த மூவ் #VikatanExclusive

Featured Replies

தினகரனை நெருக்கும் 'பெரா' வழக்குகள்! - அமலாக்கத்துறையின் அடுத்த மூவ் #VikatanExclusive

டி.டி.வி.தினகரன்

ஆர்.கே.நகர் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் டி.டி.வி.தினகரன். கூடவே, அவர் மீதான அமலாக்கத்துறை வழக்குகளும் நெருக்கிக் கொண்டே வருகின்றன. 'பெரா வழக்குகள் நிலுவையில் இருப்பதால், டி.டி.வி தினகரனின் வேட்புமனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் முன்வைத்திருக்கிறோம். எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் என நம்புகிறோம்' என்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். 

ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக ஆட்சி மன்றக் குழுவை அமைத்தார் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். ராயபுரத்தில் நேற்று நடந்த கூட்டத்தில், 'நான் போட்டியிடுகிறேன்' என அறிவித்துக் கொண்டார். 'அ.தி.மு.கவில் யார் வேட்பாளர்?' என்ற கேள்விகளும் தொடக்கம் முதலே எழவில்லை. காரணம். டி.டி.விதான் வேட்பாளர் என்பதைக் கட்சி நிர்வாகிகள் அறிந்து வைத்திருந்தார்கள். அதற்கேற்ப யாரும் விருப்பமனுவைத் தாக்கல் செய்யவில்லை. ஆட்சி மன்றக் குழுவும் சம்பிரதாயமாகவே அமைக்கப்பட்டது. "ஆர்.கே.நகர் போட்டியிடுவது தினகரனின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். ஆனால், அவர் மீதான அமலாக்கத்துறை வழக்குகளில் இருந்து அவ்வளவு எளிதில் அவரால் வெளியேற முடியும் எனத் தோன்றவில்லை. நாளை வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வெளியாகும் சூழல் இருக்கிறது" என அதிர வைக்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். தொடர்ந்து நம்மிடம் விவரித்தனர். 

"தினகரன் பெயரில் 1995-96ம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் 72 கோடி வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டது. இதன்பேரில் 96-ம் ஆண்டு தினகரன் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை 32 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. மேல் முறையீட்டில் அது 28 கோடியாக குறைந்தது. அபராதத்தை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தினகரன். இந்த வழக்கில் 6.1.2017-ம் தேதி தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், ‘28 கோடி ரூபாய் அபராதத் தொகை விதித்தது சரிதான்’ என உத்தரவிட்டது. இந்த வழக்கு ஒருபுறம் இருக்க, ரிம்சாட், சுபிக்பே, அப்பூப்ஸ் ஆகிய கம்பெனிகளுக்கு அமெரிக்க டாலர்களை மாற்றிக் கொடுத்த வகையிலும், தினகரன் மீது அமலாக்கத்துறையின் வழக்கு நிலுவையில் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து தனியார் தொலைக்காட்சிக்கு அப்லிங்க் சாதனங்களை இறக்குமதி செய்ததில் அந்நிய செலாவணி மோசடி செய்ததாக சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது 1996-ம் ஆண்டில் ஒரு வழக்கைப் பதிவு செய்தது அமலாக்கப்பிரிவு. இந்த வழக்கை விசாரித்த, சென்னை பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றம் இருவரையும் விடுதலை செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது அமலாக்கத்துறை. 

சசிகலாஅதில், 'சசிகலாவின் தோழியும் வெளிநாடுவாழ் இந்தியருமான சுசிலா ராமசாமி என்பவரது வங்கி கணக்குக்கு 19 லட்சத்து 91 ஆயிரத்து 610 அமெரிக்க டாலர்கள் வந்துள்ளன. இவ்வளவு பெரிய தொகை பெறுவதற்கு அவருக்கு எந்தவித நிதி ஆதாரமும் இல்லை. இந்த தொகையில் இருந்து சென்னையைச் சேர்ந்த சித்ரா என்பவருக்கு சுசீலா ராமசாமி கடன் கொடுத்துள்ளார். அவர் சசிகலாவுக்கு 3 கோடியே 52 லட்ச ரூபாயைக் கடனாகக் கொடுத்துள்ளார். இந்தத் தொகை பரணி பீச் ரிசார்ட்ஸ் என்ற நிறுவனத்தின் பெயருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் பெயரளவில் செயல்படும் நிறுவனமாகும். வெளிநாட்டில் பணம் பெறுவதற்காக இந்த நிறுவனம் பயன்பட்டுள்ளது என்பதை கீழமை நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார். இந்த நிறுவனத்திற்கு வந்த தொகை மூலம்தான் கொடநாடு தேயிலைத் தோட்டத்தின் பங்குகளை சசிகலா வாங்கியுள்ளார். எனவே, குற்றச்சாட்டிற்கு போதிய முகாந்திரம் உள்ளது. எனவே சசிகலாவை விடுதலை செய்து நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, 'தன் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்' என்று தினகரன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், 'இந்த வழக்குகளை தினகரனும் சசிகலாவும் எதிர்கொள்ள வேண்டும்' எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். முன்னதாக, அமலாக்கத்துறையின் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது, விடுதலை ஆவதற்காக, 'தான் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்' என தினகரன் தரப்பில் வாதிட்டதை நீதியரசர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியகுளம் தொகுதியில் அவர் போட்டியிடும்போது இந்தியக் குடிமகன் எனக் குறிப்பிட்டிருந்ததையும் சுட்டிக் காட்டினர். பெரா வழக்குகளின்கீழ் அவர் தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். எனவே, ஆர்.கே.நகரில் அவர் போட்டியிடுவதைத் தடுக்க வேண்டும் என்பதை தேர்தல் ஆணையத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறோம். எங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டால், அவர் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படும்" என்கின்றனர் விரிவாக.

'தினகரனுக்கு சிக்கல் ஏற்படுமா?' என்ற கேள்வியை அமலாக்கத்துறையின் வழக்கறிஞர் ஒருவரிடம் கேட்டோம். "பெரா வழக்குகளால் அவருக்கு சிக்கல் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த வழக்கில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இவை உரிமையியல்(Civil liability) பிரிவின்கீழ் வருகிறது. குற்றவியல் (criminal) பிரிவின்கீழ் வரவில்லை. வழக்கின் முடிவில் அவர் ஒரு வாரம் தண்டிக்கப்பட்டாலும், மக்கள் பிரதிநிதியாகத் தொடர்வதில் சிக்கல் ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர் சிங்கப்பூர் சிட்டிசன் என்பதும் நிரூபணம் செய்யப்படவில்லை. 'அவர் இந்தியக் குடிமகன்தான்; பெரா சட்டப் பிரிவின்கீழ் வருவார்' என நீதியரசர்கள் உறுதியாகக் கூறிவிட்டனர். அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர் காந்தியும் கிடையாது; புத்தரும் கிடையாது என்பதை எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும். தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அளித்த தீர்ப்பில், 'அவர் தவறு செய்திருக்கிறார்' என உறுதியாகக் கூறிவிட்டார். இதற்கு எதிராக கீழமை நீதிமன்றம் தீர்ப்பு கொடுப்பதற்கு வாய்ப்பு இல்லை. இந்த வழக்குகளை மத்திய அரசு எப்படிப் பார்க்கிறது என்பது குறித்து நாங்கள் எதுவும் பேச முடியாது" என்றதோடு முடித்துக் கொண்டார். 

இரட்டை இலைக்கு உரிமை கொண்டாடி, பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளனர். தினகரன் போட்டியிடுவதற்கும் சேர்த்தே அவர்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். 'பெரா வழக்கின் முடிவு எப்படி இருக்கப் போகிறது?' என்ற பதற்றம் எதுவும் தினகரனுக்கு இருப்பதாகத் தெரியவில்லை என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

http://www.vikatan.com/news/tamilnadu/83779-ed-to-target-dinakaran-on-fera-cases.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.