Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்ஜெட்டைப் புறக்கணித்த மூன்று அமைச்சர்கள்... அதிர்ச்சியில் சசிகலா அணி எம்எல்ஏ-க்கள்! #VikatanExclusive

Featured Replies

பட்ஜெட்டைப் புறக்கணித்த மூன்று அமைச்சர்கள்...  அதிர்ச்சியில் சசிகலா அணி எம்எல்ஏ-க்கள்!  #VikatanExclusive

நிதி அமைச்சர் ஜெயக்குமார்


நிதிஅமைச்சர் ஜெயக்குமாரின் பட்ஜெட்டை சசிகலா அணியிலிருக்கும் மூன்று அமைச்சர்கள் புறக்கணித்துள்ளனர். இது, அந்தத் தரப்பு எம்எல்ஏ-க்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையின் முதல் பட்ஜெட், இன்று சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டது. நிதிஅமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு பட்ஜெட் 2017 ஐ தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு, சசிகலாவை ஜெயக்குமார் புகழ்ந்து பேசியதற்கு எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து, சுமார் 3 மணி நேரம்  பட்ஜெட்டை தாக்கல்செய்தார் அமைச்சர் ஜெயக்குமார். 

தமிழக சட்டப்பேரவைக்குள் சீனியாரிட்டி அடிப்படையில் அமைச்சர்கள் அமர்ந்திருப்பார்கள். பட்ஜெட் கூட்டத்தொடரில் மூன்று அமைச்சர்கள் அவைக்கு வரவில்லை. இது, சசிகலா தரப்பு எம்எல்ஏ-க்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த எம்எல்ஏ-க்கள், பட்ஜெட்டின்போது இதுதொடர்பாக விவாதித்தனர். 

இதுகுறித்து சசிகலா தரப்பினரிடம் கேட்டபோது, "அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் டெல்லியில் உள்ளனர். இவர்கள், தம்பிதுரை எம்பி தலைமையில் தேர்தல் கமிஷனரைச் சந்திப்பதற்காகச் சென்றுள்ளனர். சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம், ஆர்.கே.நகர் தொகுதியில் 'இரட்டை இலை' சின்னத்தை ஒதுக்குவது தொடர்பாகத் தேர்தல் கமிஷனரிடம் வலியுறுத்த உள்ளனர். இதனால்தான், அவர்கள் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்கவில்லை" என்றனர். 

இதுகுறித்து அரசியல் வட்டாரங்கள் கூறுகையில், "பட்ஜெட் கூட்டத்தொடர் என்பது அனைத்துத் துறைகள் சம்பந்தப்பட்டது. இதனால், அனைத்துத் துறை அமைச்சர்களும் கண்டிப்பாக பட்ஜெட் தாக்கலின்போது பங்கேற்பர். அமைச்சர்களில் மூன்று பேர் புறக்கணித்திருப்பது பட்ஜெட்டையே புறக்கணிப்பதற்குச் சமம். உள்கட்சி விவகாரம் காரணமாக சம்பந்தப்பட்ட மூன்று அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக சசிகலா தரப்பு தெரிவிக்கிறது. இந்த ஆட்சியின் முதல் பட்ஜெட் கூட்டத்தைப் புறக்கணிப்பதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றனர். 

மா.சுப்பிரமணியன்

இதுகுறித்து தி.மு.க-வைச் சேர்ந்த மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ கூறுகையில், "சொத்துக்குவிப்பு வழக்கில் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று, அரசு ஆவணமான பட்ஜெட் காப்பியை அமைச்சர் ஜெயக்குமார் வைத்தது குற்றமாகும். இந்த ஆட்சியின் முதல் பட்ஜெட் கூட்டத்துக்கே மூன்று அமைச்சர்கள் வரவில்லை. இந்த முக்கியமான தருணத்தில் மக்களைப் பற்றி கவலைப்படாமல், இரட்டை இலை சின்னத்தைக் காப்பாற்றுவதே அவர்களுக்கு முக்கிய வேலையாக இருக்கிறது. அமைச்சர்களும், எம்எல்ஏ-க்களும் மீதமுள்ள ஆட்சிக்காலத்தில் அவர்களின் நலன்குறித்தே கவலைப்படுகின்றனர். அமைச்சர் ஜெயக்குமார், பட்ஜெட் உரையை வாசித்துக்கொண்டு இருக்கும் சமயத்தில், எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்கள் கூட அதை கவனமாகக் கேட்டுக் கொண்டு இருந்தனர். ஆனால், ஆளுங்கட்சி எம்எல்ஏ-க்கள் வடை, டீ என சாப்பிடச் செல்கின்றனர். இதையெல்லாம் பார்க்கும்போது அவர்களுக்கு இந்த பட்ஜெட், ஆட்சி மீது எந்தவித அக்கறையும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், பட்ஜெட்டில் உருப்படியான எந்த அறிவிப்பும் இல்லை. தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயிலின் விரிவாக்கத் திட்டத்தை இந்த பட்ஜெட்டிலும் சொல்கின்றனர்"என்றார். 

 இதற்கிடையில், அ.தி.மு.க. எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் நான்கு பேர் பங்கேற்கவில்லையாம். அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களும் விரக்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இரட்டை இலை சின்னத்துக்கு மட்டும் தேர்தல் ஆணையம் செக் வைத்து விட்டால், நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துவிட்டது போல சசிகலா அணியிலிருந்து எம்எல்ஏ-க்கள் சிதறிவிட வாய்ப்புள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/83805-three-ministers-who-boycott-tamil-nadu-budget-leaves-sasikalas-mlas-in-shock.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.