Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினகரனுக்கு கோர்ட் 'கிடுக்கிப்பிடி': அன்னிய செலாவணி மோசடி வழக்கு

Featured Replies

தினகரனுக்கு கோர்ட் 'கிடுக்கிப்பிடி':
அன்னிய செலாவணி மோசடி வழக்கு
 
 
 

சென்னை:அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தில் ஆஜரான தினகரனின் கோரிக்கையை, மாஜிஸ்திரேட் ஏற்க மறுத்ததால், அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

Tamil_News_large_173245020170318000256_318_219.jpg

வெளிநாடு வாழ் இந்தியரான, சுசீலா என்பவர் அளித்த உத்தரவாதம் அடிப்படையில், சென்னையில், பெயரளவில் செயல்பட்டு வந்த, பரணி பீச் ரிசார்ட்ஸ் நிறுவனம், இந்தியன் வங்கியில் இருந்து, மூன்று கோடி ரூபாய் கடன் பெற்றது.

இதில், 2.20 கோடி ரூபாயை எடுத்து, கோடநாடு எஸ்டேட் வாங்க, சசிகலா மற்றும் அவரது அக்கா மகன் தினகரன் பயன்படுத்தினர். அத்துடன், 'ஜெஜெ டிவி'க்கு, 'அப்லிங்க்' வசதி களை ஏற்படுத்துவதற்கான கருவிகளை

வாடகைக்கு எடுக்கவும், இந்த பணத்தை பயன்படுத்தினர். இதில், அன்னிய செலாவணி விதிகளை மீறியதாக, சசிகலா மற்றும் தினகரன் மீது, அமலாக்கத் துறை வழக்கு தொடுத்தது.

இந்த வழக்குகள், 1996 முதல், 2002 வரை தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகளில் இருந்து, இருவரையும், எழும்பூர் நீதிமன்றம்விடுவித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது.மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அன்னிய செலாவணி மோசடி வழக்குகளில் இருந்து, சசிகலா மற்றும் தினகரனை, எழும்பூர் நீதிமன்றம் விடுவித்ததை ரத்து செய்து, வழக்கை எதிர்கொள்ளும்படி, இருவருக்கும் உத்தரவிட்டது.

இதையடுத்து, பிப்., 1 முதல், இந்த வழக்குகள், எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. நேற்று இந்த வழக்குகள், மாஜிஸ்திரேட் மலர்மதி முன் விசாரணைக்கு வந்தன; அப்போது, தினகரன் ஆஜரானார். அவரது வழக்கறிஞர்கள்,'சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, உத்தரவு பெற உள்ளோம். அதற்குள், இந்த வழக்குகளில், உத்தரவு பிறப்பிப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும்' என, வாதிட்டனர்.

இதையடுத்து, மாஜிஸ்திரேட் மலர்மதி

 

பிறப்பித்த உத்தரவு: அன்னிய செலாவணி வழக்குகளை எதிர் கொள்ள வேண்டும் என, சென்னை உயர் நீதி மன்ற பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ள தாக கூறுகிறீர்கள். அந்த மேல் முறையீட்டு மனுவில், இந்த வழக்கை, கீழ் நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என, உத்தரவு பெற வேண்டும்.

அப்படி உத்தரவு பெற்று, அதன் நகலை சமர்ப்பித்தால் மட்டுமே, இந்த நீதிமன்றத்தில், வழக்கு விசாரணை நிறுத்தப்படும். இல்லை யெனில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, விசாரணை தொடரும். இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1732450

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.