Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பன்னீர் அணியினர் சுறுசுறுப்பு

Featured Replies

பன்னீர் அணியினர் சுறுசுறுப்பு
 
 
 

ஆர்.கே.நகர் தொகுதியில், சசிகலா அக்காள் மகன் தினகரனை தோற்கடிக்கும் முனைப்பு டன், பன்னீர்செல்வம் அணியினர், ஓட்டுச் சாவடிக்கு, 14 பேர் என, 'பூத் கமிட்டி' அமைத்து, தேர்தல் பணிகளை சுறுசுறுப்பாக துவக்கி உள்ளனர்.

 

Tamil_News_large_1732439_318_219.jpg

ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வானது, சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என, இரண்டாக பிளவுபட்டுள்ளது. இரு அணியினரும், தங்கள் செல்வாக்கை நிரூபிக்க, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், களம் இறங்குகின்றனர்.

சசிகலா அணி சார்பில், தினகரன்; பன்னீர்செல்வம் அணி சார்பில், முன்னாள் அமைச்சர் மதுசூதனன் போட்டியிடுகின்றனர். இருவரும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என, தேர்தல் கமிஷனில், மனு கொடுத்துள்ளனர்.

அதற்கு முன், 'அ.தி.மு.க.,வின் தற்காலிக பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது' என அறிவிக்கக் கோரி, பன்னீர் அணியினர், தேர்தல் கமிஷனில் மனு
கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக, இரு தரப்பினரிடமும் பதில் பெற்றுள்ள தேர்தல் கமிஷன், விரைவில் முடிவை அறிவிக்கும் என, எதிர்பார்க் கப்படுகிறது. இந் நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி யில், தேர்தல் பணிகளை, பன்னீர் அணியினர் வேகமாக துவக்கி உள்ளனர். இது குறித்து, பன்னீர் அணி நிர்வாகிகள் கூறியதாவது:
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, 38, 39, 40, 41, 42, 43, 47 என, ஏழு வார்டுகள் உள்ளன. இவற்றை, 14 வட்டங்களாக பிரித்து, ஒவ்வொரு வட்டத்திற்கும், பொறுப்பாளர் களை நியமித்துள்ளோம். தொகுதியில் உள்ள, 256 ஓட்டுச்சாவடிகளுக்கும், பெண்கள் உட்பட, 14 பேர் இடம் பெற்ற, பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இதில், 90 சதவீதம் பேர், 2016 தேர்தலில், அ.தி.மு.க., பூத் ஏஜன்டுகளாக இருந்தவர்கள். மார்ச், 20ல், பன்னீர்செல்வம் தலைமையில், செயல்வீரர் கள் கூட்டம்; 22ல், வேட்பு மனு தாக்கலும் நடைபெறும். அதன்பின், பூத் கமிட்டி பலப்படுத்தப் படும். எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர் கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர். பொது மக்கள் ஆதரவு எங்களுக்கு அமோகமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

பொறுப்பாளர்கள் யார்?


* முதல் வட்டத்திற்கு, எம்.எல்.ஏ.,க்கள் செம்மலை, மனோரஞ்சிதம்; இரண்டாவது வட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன்; மூன்றாவது வட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன்; நான்காவது வட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி; ஐந்தாவது வட்டத்திற்கு, எம்.பி., மைத்ரேயன் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

 


* ஆறாவது வட்டத்திற்கு, முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன்; ஏழாவது வட்டத்திற்கு, ஜே.சி.டி.பிரபாகர் எம்.எல்.ஏ., - எட்டாவது வட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் பொன்னையன்; ஒன்பதாவது வட்டத்திற்கு, எம்.பி., லட்சுமணன்; 10வது வட்டத்திற்கு, எம்.எல்.ஏ.,க்கள் ஆறுகுட்டி, சின்ராஜ், அருண்குமார் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்

* மேலும், 11வது வட்டத்திற்கு, எம்.பி., சுந்தரம்; 12வது வட்டத்திற்கு, எம்.பி., கோபால கிருஷ்ணன், எம்.எல்.ஏ.,க்கள் சரவணன், மாணிக்கம், மனோகரன்; 13வது வட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், எம்.பி., நட்டர்ஜி; 14வது வட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் ஜெயபால், நீலாங்கரை முனுசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1732439

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.