Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான்கு கட்சிகள் சேர்ந்து உருவான மக்கள் நலக் கூட்டணி உடைந்தது.

Featured Replies

gallerye_011110522_1733075.jpg

நான்கு கட்சிகள் சேர்ந்து உருவான மக்கள் நலக் கூட்டணி உடைந்தது. ஓராண்டே ஒன்றாக இருந்த நிலையில், பல விஷயங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் டமாரானது.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது என, அடம் பிடித்து, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி, தனித்து வேட்பாளரை அறிவித்ததால், இந்த நிலை உருவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tamil_News_large_173307520170319011345_318_219.jpg

கடந்த சட்டசபை தேர்தலின் போது, மார்க்சிஸ்ட் கம்யூ., - இந்திய கம்யூ., - விடுதலை சிறுத்தைகள் - ம.தி.மு.க., ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து, மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கின; ஒருங்கிணைப் பாளராக, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ செயல் பட்டார்.இக்கூட்டணியில், தே.மு.தி.க., - த.மா.கா., ஆகிய கட்சிகள், பின்னர் இணைந்தன. ஆனால், தேர்தலில் இக்கூட்டணி படுதோல்வியை சந்தித்தது; ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

அதைத் தொடர்ந்து, தே.மு.தி.க., - த.மா.கா., கட்சிகள், மக்கள் நலக் கூட்டணியில் இருந்து
விலகின. அதைத் தொடர்ந்து, ம.தி.மு.க.,வும் வெளியேறியது. மார்க்சிஸ்ட் - இந்திய
கம்யூ., - வி.சி., ஆகிய கட்சிகள் மட்டும், கூட்டணியை தாங்கி பிடித்துக் கொண்டிருந்தன.
இந்நிலையில், ஜெ., மறைவை அடுத்து, அவரின், ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் போட்டி யிடுவது தொடர்பாக, கட்சிகள் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இ.கம்யூ., மற்றும் வி.சி., தேர்தலில்

போட்டியிடாமல் ஒதுங்க வேண்டும் என்றன. ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி மட்டும், போட்டியிட வேண்டும் என்றது. மேலும், பல விவகாரங்களி லும், இந்த கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இது தொடர்பாக, மூன்று கட்சி தலைவர்களும் நடத்திய பேச்சில், ஒருமித்த கருத்து ஏற்பட வில்லை; மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுவதில் உறுதியாக இருந்தது. இதனால், மக்கள் நலக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, மக்கள்நலன் சார்ந்த போராட்டங்களில், அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது; தேர்தல் களத்தில், தனித்தனியே செயல்படுவது என, மூன்று கட்சிகளும் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து, அக்கட்சிகளின் தலைவர்கள் கூறியதாவது:
 

வி.சி., தலைவர், திருமாவளவன்:


இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற நிலைப்பாட்டை, இந்திய கம்யூ., எடுத்தது. நாங்களும், அந்த நிலைப்பாட்டை எடுத்தோம். ஆனால், போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டை, மார்க்சிஸ்ட் எடுத்தது. இனி, மக்கள் நலக் கூட்டணி, போராட்ட களத்தில் கூட்டு இயக்கமாக தோன்றும்; தேர்தல் களத்தில் கூட்டணி இல்லை. எங்களுக்குள் வேறு எந்த கசப்பும் இல்லை. மார்க்சிஸ்ட் முடிவால், கூட்டணி பாதிக்கப்பட வாய்ப்பில்லை. போராட்ட களத்தில் இணைந்து செயல்பட சங்கடம் இல்லை. அந்தப் புரிதலுடன் எங்கள் பயணம் தொடர்கிறது.
 

மார்க்சிஸ்ட் மாநில செயலர், ராமகிருஷ்ணன்:


அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., ஆட்சியில், அடிப்படை பிரச்னைகளுக்கு, தீர்வு ஏற்படவில்லை. ஆற்று மணல், தாது மணல், கிரானைட் கொள்ளை, அக்கட்சிகளின் ஆட்சியாளர்கள் துணையோடு நடந்தது; இன்னும் நடந்து வருகிறது.மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, காவிரி மேலாண்மை வாரியம்

 

அமைக்க தடையாக உள்ளது; புயல் நிவாரணம் வழங்க மறுத்து வருகிறது. 'நீட்' தேர்வை திணிக்க முயற்சித்து வருகிறது. கொல்லைப் புறம் வழியாக, பா.ஜ., காலுான்ற முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., - காங்கிரஸ் கட்சிகளின் கொள்கைக்கு மாற்று தேவைப்படுகிறது. அதன் அடிப்படையில், மார்க்சிஸ்ட் கட்சி, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுகிறது. எங்கள் வேட்பாளருக்கு, இந்திய கம்யூ., விடுதலை சிறுத்தைகள் உட்பட, அனைத்து இடதுசாரி இயக்கங்களும், ஆதரவு தர வேண்டும்.

இந்திய கம்யூ., செயலர் முத்தரசன்: இது தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் தலைவருடன் பேசி, நாளை எங்கள் முடிவை அறிவிப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடந்த ஓராண்டாக, இந்த கூட்டணியின் தலைவர்கள், எங்கெங்கு பத்திரிகையாளர் களை சந்தித்தாலும், 'நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்; பிரிவு என்பதே கிடையாது; பிரிக்கவும் முடியாது' என, கூறி வந்தனர். அது, இப்போது பொய்யாகிப் போனது.
 

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பு


கூட்டணிக்கு, 'குட்பை' சொன்ன, அடுத்த சில நிமிடங்களில், ஆர்.கே.நகர் தொகுதி
இடைத்தேர்தலில், மார்க்சிஸ்ட் சார்பில், வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.அக்கட்சியின் வட சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினரும், பகுதிக் குழு உறுப்பினருமான, லோகநாதன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள் ளார்.லோகநாதன் கூறுகையில், ''கம்யூனிஸ்ட்டுகள் இல்லாத சட்டசபை எப்படி நடக்கிறது என்பதை பார்த்திருப்பீர்கள். அந்த குறையை போக்க, களத்தில் நிற்கிறோம். ஆர்.கே.நகர் வாக்காளர்கள், எங்களை ஆதரிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1733075

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.